இலக்கியத்தில் புனைவு, உண்மை, பொய் என்பவற்றுக்கான ஊடாட்டங்கள் சம்பந்தமாக இலக்கிய உலகு (தமிழ்ப் பரப்புக்கு வெளியேயும்) வரைவுசெய்துவிட முடியாத வர்ணச் சிதைவுகளாகவே தொடர்கிறது. மிக இலகுவாக “புனைவு” என்றால் பொய் அல்லது உண்மையற்றது என்ற மேலோட்டமான பார்வைக்கு குறைச்சலில்லை என்பது என் கணிப்பு.