கிட்லரின் „மைன் காம்ப்“ புத்தகம் அரசியலாளர்களால் நிச்சயம் படிக்கப்பட வேண்டிய நூல் என நினைக்கிறேன். தேசியம் பற்றிய ஆபத்தான பக்கங்களை புரிந்துகொள்ள அதுவும் ஒரு விதத்தில் பங்களிக்கிறது. பிரபாகரன் அரசியல் ரீதியிலோ அல்லது இராணுவ ரீதியிலோ கிட்லரால் ஆகர்சிக்கப்பட்டாரா அல்லது அவரை அதிலுள்ள கருத்துகள், அணுகுமுறைகள் பாதித்தனவா என்பதெல்லாம் முன்னாள் புலி உதிரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நான் நினைக்கவில்லை.அதேநேரம் அந்தக் கூற்றின் சாத்தியங்களையும் மறுத்துவிட முடியாது.