போட்டுத் தள்ளுதல் !

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கொலை -அரசியல்

“போட்டுத் தள்ளுவது” என்ற வார்த்தை ஈழ அரசியல் சூழலிலிழுந்து தமிழ்ச் சினிமாவுக்குள் நுழைந்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. ‘போட்டுத் தள்ளுவது’ என்பது அரசியலில் ‘இனந்தெரியாதோரால்’ கொல்லப்படுதலுடன் தொடர்புடையது. ஒரு கொலையை செய்வதையும்விட தடயங்கள் துளியளவும் இல்லாமல் அதை செய்வது என்பது முதன்மையாக இருக்கும். இதில் கொலை என்பது இரண்டாம் பட்சமாகிவிடும். தடய அவதானம் முதலாம் பட்சமாக இருக்கும். அவை தமது தரப்பில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திவிடாதபடி கவனம் கொள்வதால் அவ்வாறு நிகழ்த்தப் படுகிறது.

Continue reading “போட்டுத் தள்ளுதல் !”

அதிசயம் நடக்குமா!

ஒரு இலட்சம் மக்கள் வாழும் லிபியாவின் கிழக்கு நகரமான டேர்னாவை (Derna) வெள்ளம் கடந்த 11.9.23 அன்று வாரியெடுத்திருக்கிறது. அந்த நகரத்தின் கால்வாசி பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 அடி உயரம் வரை வெள்ளம் அலைபோல் திரண்டு இந்த நகரை துரத்தியிருக்கிறது. அதன் தாக்குதலால் காணாமலாக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டதுமான மனிதர்களின் தொகை 20’000 இனை தாண்டியுள்ளது என இதுவரையான கணிப்பு சொல்கிறது.

Continue reading “அதிசயம் நடக்குமா!”

Enough is Enough !

image : Spiegel.de

நீஜரில் யுரேனியம், தங்கம் போன்ற கனிம வளங்களை அகழும் பிரான்ஸ் கம்பனியைத் தடைசெய்த நீஜர் அரசு தாமே உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது. யுரேனியத்துக்கான ஏற்றுமதி விலையை உலக சந்தையின் பெறுமதி “200 யூரோ/கிலோ” க்கு உயர்த்தியுள்ளது. இது கனடாவின் யுரேனிய ஏற்றுமதிப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்ட விலை நிர்ணயம் ஆகும்.

Continue reading “Enough is Enough !”

மோடி அழைக்கிறார் !

இந்தியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் ஆபிரிக்க ஒன்றியத்தை நிரந்தர உறுப்பினராக -அதாவது 21வது அங்கத்தவராக- சேர்த்திருக்கிறார்கள். இன்றைய ஆபிரிக்க கொந்தளிப்புகளின் காரணமாக மேற்குலகினது பிடி ஆபிரிக்காவில் தளர்வதும் மறுபுறத்தில் இந்தியா, ரசியா உட்பட சீனாவினஞது பிடி வியாபிப்பதுமாக இருக்கும் சூழலில் அவர்களுக்கான தத்தமது நலன் சார்ந்த தேவை ஆபிரிக்க யூனியனை இணைத்துக்கொள்ள இடமளித்திருக்கிறது அல்லது அவசரப்படுத்தியிருக்கிறது. இவ்வாறான பூகோள அரசியல் கள்ள நோக்கம் இருந்தாலும், ஆபிரிக்க ஒன்றியத்தையும் அந்த தளத்தில் இயங்க இடமளிப்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆபிரிக்க ஒன்றியம் 2002 இல் ஆரம்பிக்கப்பட்டது. அது 55 ஆபிரிக்க நாடுகளின் கூட்டணியாக உள்ளது.

Continue reading “மோடி அழைக்கிறார் !”

ஏன் தடுக்கிறது மேற்குலகம்?

image : Al Jazeera

மேற்கு ஆபிரிக்காவின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை மேற்குலகின் கண்களினூடாகப் பார்த்தால் அந்த கவிழ்ப்பு ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஓகே. இவர்கள் முன்வைக்கிற ஜனநாயகப் பெறுமதி என்ன. ஆபிரிக்காவை காலனியாக்கி நூற்றாண்டு காலமாய் வளங்களை கொள்ளையடித்துவிட்டு, பெயருக்கு சுதந்திரம் வழங்கியபின் அந்தக் கொள்ளையை தொடர நவகாலனியத்தை கையிலெடுத்தனர். அதற்கான பொம்மை ஆட்சியாளர்களை ஆட்சிக்கட்டிலில் இருத்துவதற்கு அவர்கள் செய்த திருகுதாளமெல்லாம் அவர்களின் எந்த ஜனநாயகப் பெறுமதிக்குள் உள்ளடங்குகிறதோ தெரியவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை இராணுவம் தூக்கியெறிந்து ஜனநாயகத்தை சாய்த்துவிட்டதாக பொங்கியெழும் மேற்குலக ஜனநாயகப் பெறுமதியானது எண்ணற்ற உதாரணங்களை காட்ட முடியும் என்றபோதும், ஒரு உதாரணமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சதாம் குசைன் அவர்களை வீழ்த்தும்போது விடுமுறையில் சென்றுவிட்டதா என்ன.

Continue reading “ஏன் தடுக்கிறது மேற்குலகம்?”

நைஜரின் ஒளிரும் யுரேனியம்

1

நைஜர் (Niger) என்ற நாடு நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மாலி, புர்கீனோ பாஸோ, லிபியா, பெனின் நாடுகளுடன் எல்லையைக் கொண்டது. 27 மில்லியன் சனத்தொகை உள்ள நாடு நைஜர். யுரேனியம், தங்கம், பிளாற்னம் போன்ற இயற்கை வளங்களைக் கொண்ட நாடு அது. ஆனால் அதை அவர்கள் அனுபவித்ததில்லை. வறுமையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யுரேனியத்தில் இயங்கும் பிரான்ஸின் அணுஉலைகள் பிரான்சுக்கான மின்சாரத்தை மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. பிரான்சுக்கான தேவையின் மூன்றிலொரு பகுதி மின்சாரத்தை நைஜர் யுரேனியம் வழங்குகிறது. பிரான்ஸ் முழுவதும் மின்சாரம் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க, நைஜரில் 20 வீதமளவுக்குக்கூட மின்சாரம் பூத்ததில்லை. யுரேனியத்தை அகழ்ந்து கொண்டுவரும் பிரான்சின் ஈபிள் கோபுரம் இரவில் வால்நட்சத்திரமாக ஒளிர்ந்திருக்க, யுரேனியத்தை புதையலாக வைத்திருக்கும் நைஜர் நிலம் இரவில் சிறிய ஒளிக்கீற்றால் மட்டும் கீறப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Continue reading “நைஜரின் ஒளிரும் யுரேனியம்”

பாரபாஸ்

நாவல்


சுவீடன் எழுத்தாளர் Pär Lagerkvist அவர்களினால் 1950 இல் எழுதப்பட்ட இந் நாவல் 1951 இல் நோபல் பரிசை பெற்றது. பௌதீக யதார்த்த வாழ்வுக்கும், நம்பிக்கைகளை உருவாக்கி போற்றும், அல்லது அதற்கு கட்டுப்பட்டு வாழும், வாழ்வுக்கும் இடையே நகருகிறது இந் நாவல். குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு ஜெரூசலத்திலுள்ள கொல்கொத்தா மலையில் மூவர் சிலுவையில் அறையப்படுவதற்காக தொங்கவிடப்படுகிறார்கள். அவர்களில் ஒருவன் பாரபாஸ். பெற்றோராலும் சமூகத்தாலும் கைவிடப்பட்டவன். ஓர் அநாதை. பழிபாவம் எதற்கும் அஞ்சாதவன். கொள்ளைக்காரன். பாரபாஸ் இன் அலைவு கொல்கொத்தா, ஜெரூசலம், சைப்பிரஸ் என பயணித்து இறுதியில் றோம் இல் சிலுவையில் ஏற்றப்பட்டு மரணிக்கிறது.

Continue reading “பாரபாஸ்”

பிரான்ஸை உலுக்கும் தீ

கலவரமும் காட்சிப் பிழையும்!

பிரான்சில் கடந்த செவ்வாயன்று இளைஞன் நகேல் கொல்லப்பட்டதிலிருந்து தோன்றிய கலவரம் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளை மட்டுமன்றி 20 க்கு மேற்பட்ட வேறு நகரங்களுக்கும் பரவியிருக்கிறது. அது நேற்று இரவு சுவிற்சர்லாந்தின் லொசான் நகரத்திலும் அதே வடிவில் வெளிப்பட்டது. ஆனாலும் அது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுவிஸ் பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்தக் கொலைக்கு எதிராக பெல்ஜியத்தில் கடந்த 30ம் தேதி அமைதியான பெரும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.

Continue reading “பிரான்ஸை உலுக்கும் தீ”

வாழைப்பழ அரசியல்

வாழைப்பழத்தின் பூர்வீகம் தெற்கு,தென்கிழக்கு ஆசியா என சொல்லப்படுகிறது. கரப்பா காலத்தின் கி:மு 3000-2500 தொல்பொருள் சான்றுகள் இதை நிரூபித்திருக்கின்றன. போத்துக்கீச, ஸ்பானிய காலனியவாதிகள் இதை தென்னமெரிக்கா மத்திய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு காலநிலைப் பொருத்தம் கருதி எடுத்தச்சென்றனர் என சொல்லப்படுகிறது. அதில் தொடங்கிய அதன் அரசியல் இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய கனவுகளுக்கும் தீனி போட்ட வரலாறு இது.

Continue reading “வாழைப்பழ அரசியல்”

புலம்பெயர் இலக்கியம்

ஒரு பார்வை

அண்மைக் காலமாக தமிழில் புலம்பெயர் இலக்கியம் குறித்த கேள்விகள் வரைவுகள் அதிகம் பேசப்படுவனவாக மாறியுள்ளன. தமிழகத்தில் முதலில் அதாவது 90 களின் முற்பகுதியில் புலம்பெயர் இலக்கியத்தை அறிமுகமாக்கிய வரலாற்றுத் தொடக்கம் நிறப்பிரிகை குழுவுக்கே உள்ளது என நினைக்கிறேன். 1996 இல் பாண்டிச் சேரியில் ஒரு சந்திப்பில் புலம்பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர்ந்த தமிழக மக்களை உள்ளடக்காதா என ரவிக்குமார் கேட்டிருந்தார். அது இப்போ பலரும் எழுப்புகிற கேள்வியாகியிருக்கிறது புலம்பல் இலக்கியம் என தமிழக எழுத்தாளர்கள் சிலராலும் ஈழத்து எழுத்தாளர்கள் சிலராலும் அப்போ எள்ளிநகையாடப்பட்ட காலகட்டம் அது. இன்று அது பேசப்படும் பொருளாக மாறியிருக்கிறது. அண்மைக் காலமாக அதன் வரையறைகளை கேள்விக்கு உள்ளாக்குகிற, எல்லைகளை விசாலிக்கிற கருத்துக்கள் மேலெழுந்திருப்பது வரவேற்கக் கூடியதுதான். மாறாக அதை ஒரு சர்ச்சையாகப் பார்க்க வேண்டியதில்லை. இதில் என் தரப்பிலான கருத்தை இங்கு முன்வைக்கிறேன். அவ்வளவுதான்.

Continue reading “புலம்பெயர் இலக்கியம்”