வாழ்தல் என்பது…

எனது கண் இறைக்கும் ஒளியை
ஓர் புள்ளியில் தேக்க
எனக்கு இஸ்டமில்லை.
அது படர்வதற்குரியது.

விரும்பியபோது விரும்பிய இடத்தில்
ஆடவும் பாடவும்
அதிகளவு சுதந்திரம் அனுபவிக்கிறது
ஒரு குழந்தை –
என்னைவிட.
அழுதலுக்காக இரங்க ஆயிரம் மனிதர்கள்.
தனிமையாய்
மனம்விட்டு சிரிக்கும் எனை
பைத்தியமென பார்வையெறிந்து
கொல்லும் உலகில்
சேர்ந்து சிரிக்க நான் மனிதர்களைத் தேடுகிறேன்.

Continue reading “வாழ்தல் என்பது…”

முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்

காற்றுக்கூட உறங்க
நினைக்கும் இரவின் அமைதி
நிச்சயமற்றுப்போன ஓர்
இரவில் இது நடந்திருக்கலாம்
அல்லது,
சூரியனின் ஒவ்வொரு கதிர்களையும்
முறித்துப்போடும் வெறியோடு
செல்களும் குண்டுகளும்
படைநடத்திச் சென்ற ஒரு
பகல்பொழுதிலும் இது நடந்திருக்கலாம்

Continue reading “முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்”

சிறகு கொள்

வார்த்தைகளுள் தமது
கவலைகளை புகுத்தி
தனக்களவாய்
முடிந்தால் கனதியாய்
ஊதிப்பெருப்பிக்கும் கலையறியா
குழந்தைகளின்
போர்ச்சோகம் கொடியது.

Continue reading “சிறகு கொள்”

சான்ரீஸ் மலை அழகி

 

சான்ரீஸ்!
கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்

கூந்தலாய் முகில் விரித்து
உச்சி வழிந்து
முகம் மறைத்து ஏமாற்றினாய்
எனை
சென்ற தடவை.

Continue reading “சான்ரீஸ் மலை அழகி”

றைன் நதி நீள்வில்

நீர்த்திவலையால்
மேகத்தை அழைத்து
வானத்தை தன்
மடியில் வீழ்த்தியிருந்தது
அந்த அருவி

வானம் கிறங்கிக் கிடந்தது
அருவியின் அணைப்பில்.

மரங்களின் பச்சையம்
வழிந்து
கரை ஊறிக்கிடந்தது.

Continue reading “றைன் நதி நீள்வில்”

பெண்கள்மீதான உளவியல் தாக்கம்

– வானொலி விவாதத்தின்போது…-

பெண்கள்மீது உளவியல் ரீதியில் தாக்கம் கொள்பவற்றில் முக்கியமானது கருத்தியல். ஆண் அதிகார கருத்தியல்கள்தான் அவை. பெண்சம்பந்தமான -அதாவது பெண்மை பற்றிய- வரையறைகள் இந்த ஆண்நோக்கின் அடிப்படையில்தான் வரைவு செய்யப்பட்டன.

பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள்@ ஆண் அவர்களை பாதுகாப்பவன் என்ற மனோநிலைகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் பெண் இரண்டாம்தர -அதாவது தங்கிவாழும் மனோநிலைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இது ஒரு முக்கியமான உளவியல் தாக்கம்.

Continue reading “பெண்கள்மீதான உளவியல் தாக்கம்”

எனது பார்வையில் “செட்டை கழற்றிய நாங்கள்”

சந்திரவதனா செல்வகுமாரன்  (யேர்மனி)

95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.

செட்டை கழற்றிய நாங்கள் – கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல – ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.

சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.

Continue reading “எனது பார்வையில் “செட்டை கழற்றிய நாங்கள்””

புதிய நியாயங்கள்

துடைப்பதற்கு ஆளின்றி
கண்ணீர்
அழுகி மணக்கிறது.
செட்டை பெயர்ந்த வடுக்களாய்
விரியும்
மணற்கங்குப் பாலைவன மனிதர்கள் நாம்.

Continue reading “புதிய நியாயங்கள்”

மாறிவிடு!

காற்றில் அசைந்தாடுகிறது காண்
அந்த நாணல் புல்.
இயல்பாய்
அதன் நளினம் காண்
ரசனை வெளி நிரப்ப.
குழந்தையொன்று
அள்ளிவரும் இயல்பெல்லாம்
நாளும் பொழுதுமாய் தேய்கிறது காண்
என் பயிற்சிக் களத்தில்.

Continue reading “மாறிவிடு!”

நிகழ்காலத்தைத் துரத்துதல்

ஓடு!
முடிந்தால் நுனி நகத்தை ஊன்றி
பறந்துவிடு.
எனது முகம் உடைந்து
அள்ளுண்டு போகிறது-
உனது மூச்சில்.
சுவாசப் பையுள் கல்நிரப்பும் குரங்குத் தனத்தோடு
கெந்தித் திரிகிறது காற்று.

Continue reading “நிகழ்காலத்தைத் துரத்துதல்”