அமெரிக்காவின் நரித்தனம் உக்ரைனில் அரங்கேறுகிறது. 2000 களிலிருந்து -குறிப்பாக 2008 இலிருந்து- ரசியாவை சீண்டியபடி இருந்த அமெரிக்கா ரசியா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சூழலை படிப்படியாக உருவாக்கி உச்ச நிலையில் கொணர்ந்து விட்டது. ரசியா ஆக்கிரமித்தது.
நடுநிலையாக இருந்த உக்ரைனை நேற்றோ அமைப்பில் சேர்க்க வேண்டும் என ஜோர்ஜ் புஷ் 2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் முன்மொழிந்தார். உக்ரைன் மறுத்தது. ஜேர்மனியும் பிரான்ஸ் உம் இது ரசியாவுடனான போரை உருவாக்கும் ஆபத்தை கொண்டது என எச்சரித்தன.
தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலென உருவாக்கப்பட்ட புனைவுக் கதையாடலைக் கொண்டு போருக்கான சூழலை உருவாக்கி ரசிய ஆக்கிரமிப்பை சாதித்ததுதான் நடந்தது.
சுவிஸ் கட்டடக் கலைஞனான பீற்றர் வெற்ஷ் (Peter Vetsch) இன் படைப்பாக்கம் இது. “நிலவீடு” என அழைக்கப்படும் இந்த கட்டடத் தொகுதியை அவர் டியற்றிக்கோன் (சூரிச்) இல் அமைத்து இந்த ஆண்டுடன் 30 வருடங்களாகியிருக்கிறது. அதைக் கொண்டாடும் விதத்தில் நிலம் பூத்த அந்தக் கட்டடக்கலையின் நினைவாக திரும்பவும் அவை பேசப்படுகிற பொருளாக செய்திகளில் வருகிறது.
அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது!
இந்திய வரலாற்றாசிரியரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விஜய் பிரசாத் அவர்கள் “இஸ்ரேல் ஓரரசு தீர்வையோ ஈரரசு தீர்வையோ ஏற்றுக் கொள்பவர்களாக இல்லை. உண்மையில் அவர்கள் மூவரசு கொள்கைையையே கொண்டுள்ளனர்” என்கிறார். ஓரரசு என்பது பலஸ்தீன பிரதேசத்தை தன்னுள் விழுங்கி, முழுவதுமான ஒரேயொரு அரசாக -இஸ்ரேலிய அரசாக- நிர்மாணிக்கும் திட்டமாகும். ஈரரசு என்பது ஐநாவாலும் யசீர் அரபாத் இனாலும் இறுதியாக 1993 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒஸ்லோ ஒப்பந்தத்தின்படியான பலஸ்தீனம், இஸ்ரேல் என இரண்டு அரசுகளைக் கொண்ட திட்டாகும்.
குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்! * குழந்தைகளை குறிப்பிடாதீர்கள் மரணித்த குழந்தைகளை பெயரிடாதீர்கள் மக்களுக்கு அந்தப் பெயர்கள் தெரியக் கூடாது அந்தக் குழந்தைகளின் பெயர்கள் மறைக்கப்பட வேண்டும். அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாக இருக்க வேண்டும் அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாகவே இந்த உலகத்தை விட்டு நீங்க வேண்டும் மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயர் எவருக்குமே தெரியக் கூடாது. மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயரை எவருமே உச்சரிக்கக் கூடாது அந்தக் குழந்தைகளுக்கு பெயர்கள் இருந்தன என்பதை நினைத்துப் பார்க்கவும் கூடாது. அந்தக் குழந்தைகளின் பெயர்களை தெரிந்து வைத்திருப்பது ஆபத்தானது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அந்தக் குழந்தைகளின் பெயர்களை தெரிந்து வைப்பதிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்தக் குழந்தைகளின் பெயர்கள் ஒரு காட்டுத் தீயைப் போல பரவிவிடக் கூடும். அந்தக் குழந்தைகளின் பெயர்களை மக்கள் தெரிந்து கொண்டால் அது அவர்களுக்கு பாதுகாப்பற்றது மரணித்த அந்தக் குழந்தைகளை பெயரிடாதீர்கள் மரணித்த அந்தக் குழந்தைகளை நினைவுகூராதீர்கள் மரணித்த அந்தக் குழந்தைகளை நினைக்காதீர்கள் அவர்களை, “மரணித்த குழந்தைகள்” என சொல்லாதீர்கள்!
Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!. இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார்.
Yves Bachmann (Fotos)
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்சியின் முடிவு இது ஒரு திட்டமிட்ட கொலை என்கிறது. இது கொலை என்ற கோணத்தில் இன்று வரை காவல்துறையினர் விசாரிக்க மறந்ததால் கொலைக்காரர்களும் இன்றுவரை பிடிபடவில்லை.
“போரின்றி அமையாது இவ் உலகு” என்ற எல்லைக்கு இந்த உலகம் பயணிக்கத் தொடங்கி நூற்றாண்டுகளாகிவிட்டது. இருந்த போதும் போருக்கு எதிரான குரல்களுக்கும் அதே வயதுதான். போர் வெற்றி என்பது ஓட்டை ஒடிசல் பாத்திரத்தில் இசை அமைத்து, அதை இனிமையானது என அரசுகளும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்பும் செய்தி. அவை மக்கள் இழந்த வாழ்வு குறித்தும் உளவியல் நெருக்கடிகள் குறித்தும், பண்பாட்டு அழிவுகள் குறித்தும் கணக்கெடுப்பதில்லை.
இந்நூல் எம். சுசீலா அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பின் ஓட்டத்தை இடையூறு செய்யாதபடி நகர்கிறது மொழிக் கையாள்கை. தமிழில் 1072 பக்கம் விரிந்துள்ள இந் நூலில் அவரது பெரும் உழைப்பு தெரிகிறது.
“குற்றமும் தண்டனையும்” என்ற இந் நாவல் தஸ்தவெஸ்கி அவர்களால் எழுதப்பட்ட பெரும் நாவல். 1866 இல் ரஸ்ய மாதப் பத்திரிகை ஒன்றில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இத் தொடர் பின்னர் நாவலாக தொகுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கதை சொல்லல் என்பதையும் தாண்டி தனிமனிதர்களின் மனவமைப்பு, மனச்சாட்சி, ஒழுங்கு, அறம், அன்பு என்பவற்றை தாங்கி நிற்கும் அக வாழ்வின் மீதான விசாரணைகளையும் சட்டம், நீதி, அதிகாரம் என்ற கட்டமைப்பு மனித வாழ்வோடு பொருதுதல் குறித்தான விசாரணைகளையும் தாங்கிய நாவல் இது. மனித உளவியலின் இடுக்குகளை ஆராயும் வலு கொண்டதால் இந் நாவல் 150 வருடங்களுக்கும் மேலாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒவ்வொரு மனிதரோடும் பேசும் ஆற்றலின் அதன் இரகசியம் இங்குதானுள்ளது. “எதையாவது எப்போதும் நான் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரே உளவியலாளர் தஸ்தவேஸ்கிதான்” என நீட்ஷே எழுதினார்.
சிரியாவின் ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு ஆற்றிய இன்னொரு காரணியானது “பைப்லைன் அரசியல்” (அதாவது இயற்கை எரிவாயுக் குழாய் அரசியல்) என சொல்லப்படுகிறது. இதன் அரசியல் ஆட்டநாயகர்கள்; துருக்கி, அமெரிக்கா, கட்டார், ஈரான் நாடுகளாகும். ரசிய-உக்ரைன் போருக்கு முன்னரே, ஐரோப்பாவுக்கு ரசியா குழாய் மூலம் வழங்கிக் கொண்டிருந்த எரிவாயு வியாபாரத்தின் இடத்தை தாம் கைப்பற்றிக் கொள்ளும் முனைப்பில் இந்த நாடகம் அரங்கேறத் தொடங்கியிருந்தது.