கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐநா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலாதிக்க நலனையும் நயவஞ்சகத்தையும் உள்நிறுத்தி அரசியல்வாதிகளும் அரசும் பேசும் ஜனநாயகம் வார்த்தை ஜாலங்களாக தொடர்கின்றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்வலங்களை நடத்தியும் பார்த்தார்கள். எல்லா இயலாமைகளும் கடைசியில் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட நிலைதான் இன்றைய காட்சிகள்.
Continue reading “ஆதரிப்போம் !”Category: முகநூல் குறிப்பு
தடங்களில் அலைதல்
நூல் அறிமுகம்
“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன்.
என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார்.
Continue reading “தடங்களில் அலைதல்”மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!
யாழ் பல்கலைக்கழக வளவுக்குள் நடந்த திரைப்பட விழாவொன்றுக்கு ஒருவர் அரைக் காற்சட்டையோடு போக அனுமதிக்கப்படாத விவகாரம் சமூகவலைத் தளங்களில் பெரும் பேசு பொருளாக வலம்வந்து கொண்டிருக்கிறது. இச் சம்பவம் குறித்து கருத்துச் சொல்ல நான் முனையவில்லை. இந்த சம்பவம் எதை வெளிப்படுத்துகிறது என்று பார்க்க முயல்கிறேன்.
Continue reading “மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!”மாவீரர் தினம்
2023

P. Duvaraga & AI Duvaraga
விமர்சனம் என்பது வரலாற்றை மறுத்தல் அல்ல. வரலாற்றின் மீது நின்று பேசுதல் ஆகும். தமிழீழ விடுதலைக்காக போராடிய இயக்கங்களுக்கு ஒரு வரலாறு இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு ஒரு நீள் வரலாறு இருந்தது. அதற்குள்ளும் ஒரு வரலாறு உள்ளோட்டமாய் இருந்தது. மண்ணுக்காக மடிந்தோர் எல்லோரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்தான். மரணித்த போராளிகளின் உறவினர்கள் இந்த மாவீரர் நாளில் விடும் கண்ணீர் ஆத்மார்த்தமானது என்பதும் உண்மை. அதை வைத்து ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை சென்ரிமென்ராக எழுத முடியாது. அதில் பிரயோசனம் இல்லை.
Continue reading “மாவீரர் தினம்”எனது பெயரை எழுது அம்மா!
- ஸைனா அஸாம்
காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. மொழிபெயர்த்திருக்கிறேன். (இந்தக் கவிதை வாசிப்பு காணொளி வடிவில் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. கவிதையின் இறுதியில் இணைப்பு உள்ளது).
எனது பெயரை எழுது அம்மா!
வழித்தடம்
மேற்குலகின் அளவுகோல்கள் வசதிக்கேற்ப வளைந்து கொடுக்கும் ஒன்று என்பது தொடர் வரலாறாக உள்ளது. 1948 இல் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கமே ஆயிரக் கணக்கான பலஸ்தீன மக்களை கொலைசெய்தும் ஏழு இலட்சம் பேரை அகதிகளாக்கியும் 500 பலஸ்தீன கிராமங்களை அழித்து நில ஆக்கிரமிப்பு செய்ததும் என ஒரு வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றை நாக்பா என பலஸ்தீன மக்கள் கவலையுடன் நினைவுகூர மறுபுறம் இஸ்ரேல் தேசியதினமாக கொண்டாடும் வரலாறு அது. அதன்பின்னாக காலத்துக்குக் காலம் பல பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக பலஸ்தீனத்தின் பெருநிலப்பரப்பை இஸ்ரேல் விழுங்கிக் கொண்டது. ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகளிலும் பல பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆகியும் தமது நிலத்தையும் வாழ்விடங்களையும் இழந்துகொண்டது வரலாறு.
Continue reading “வழித்தடம்”The train has left the station!
ஜோன் மெயர்ஷைமர் அமெரிக்காவின் ஒரு அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும் சர்வதேச உறவுகளுக்கான நிபுணரும், சிக்காக்கோ பல்கலைக் கழக பேராசிரியரும் ஆவர். அரசியல் சிந்தனையில் தாக்கம் செலுத்துகிற சிந்தனையாளர்களில் இவர் முக்கியமானவர். இவர் 12.10.23 அன்று Judging Freedom க்கு வழங்கிய பேட்டியொன்றில் கூறியது இது. அதுவே இப்போ நிகழ்கிறது.
Continue reading “The train has left the station!”இருந்தும் விடுகிறோம்!
காஸாவின் குழந்தைகள் தமது உள்ளங்கைகளில் பெயரையும் முகவரியையும் வர்ணம் கலந்த பேனா மையினால் எழுதி வைக்கிறார்கள். தாம் இறந்தபின் சிதறுண்ட தமது உடலை வேண்டியவர்கள் அடையாளம் காண அப்படிச் செய்கிறார்கள். கசங்கிய கடதாசியில் பிஞ்சுக் கைகளால் ‘உயில்’ எழுதி வைக்கிறார்கள். தமது விளையாட்டுப் பொருட்களை யார்யாருக்கு கொடுக்க வேண்டும். தமது உடைகளை யார்யாருக்குக் கொடுக்க வேண்டும். தாம் குருவிபோல் சேகரித்த உண்டியல் காசை யார்யாருக்கு எவ்வளவு எவ்வளவாய் பிரித்துக் கொடுக்க வேண்டும். எழுதுகிறார்கள். தமது அம்மா அப்பா தம்பி அண்ணன் தங்கை அக்கா என குறிப்பிட்டு அவர்கள் எழுதும் இந்த உயிலை வாசிக்கக்கூட அவர்களது இந்த உறவுகள் உயிர்பிழைப்பார்களா தெரியாது. என்ன கொடுமை இது.
Continue reading “இருந்தும் விடுகிறோம்!”போட்டுத் தள்ளுதல் !
கனடாவில் காலிஸ்தான் தலைவர் கொலை -அரசியல்
“போட்டுத் தள்ளுவது” என்ற வார்த்தை ஈழ அரசியல் சூழலிலிழுந்து தமிழ்ச் சினிமாவுக்குள் நுழைந்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. ‘போட்டுத் தள்ளுவது’ என்பது அரசியலில் ‘இனந்தெரியாதோரால்’ கொல்லப்படுதலுடன் தொடர்புடையது. ஒரு கொலையை செய்வதையும்விட தடயங்கள் துளியளவும் இல்லாமல் அதை செய்வது என்பது முதன்மையாக இருக்கும். இதில் கொலை என்பது இரண்டாம் பட்சமாகிவிடும். தடய அவதானம் முதலாம் பட்சமாக இருக்கும். அவை தமது தரப்பில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திவிடாதபடி கவனம் கொள்வதால் அவ்வாறு நிகழ்த்தப் படுகிறது.
Continue reading “போட்டுத் தள்ளுதல் !”அதிசயம் நடக்குமா!
ஒரு இலட்சம் மக்கள் வாழும் லிபியாவின் கிழக்கு நகரமான டேர்னாவை (Derna) வெள்ளம் கடந்த 11.9.23 அன்று வாரியெடுத்திருக்கிறது. அந்த நகரத்தின் கால்வாசி பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 அடி உயரம் வரை வெள்ளம் அலைபோல் திரண்டு இந்த நகரை துரத்தியிருக்கிறது. அதன் தாக்குதலால் காணாமலாக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டதுமான மனிதர்களின் தொகை 20’000 இனை தாண்டியுள்ளது என இதுவரையான கணிப்பு சொல்கிறது.
Continue reading “அதிசயம் நடக்குமா!”




