எனது பெயரை எழுது அம்மா!

  • ஸைனா அஸாம்

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. மொழிபெயர்த்திருக்கிறேன். (இந்தக் கவிதை வாசிப்பு காணொளி வடிவில் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. கவிதையின் இறுதியில் இணைப்பு உள்ளது).


எனது பெயரை எழுது அம்மா!

Continue reading “எனது பெயரை எழுது அம்மா!”

வழித்தடம்

மேற்குலகின் அளவுகோல்கள் வசதிக்கேற்ப வளைந்து கொடுக்கும் ஒன்று என்பது தொடர் வரலாறாக உள்ளது. 1948 இல் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கமே ஆயிரக் கணக்கான பலஸ்தீன மக்களை கொலைசெய்தும் ஏழு இலட்சம் பேரை அகதிகளாக்கியும் 500 பலஸ்தீன கிராமங்களை அழித்து நில ஆக்கிரமிப்பு செய்ததும் என ஒரு வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றை நாக்பா என பலஸ்தீன மக்கள் கவலையுடன் நினைவுகூர மறுபுறம் இஸ்ரேல் தேசியதினமாக கொண்டாடும் வரலாறு அது. அதன்பின்னாக காலத்துக்குக் காலம் பல பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக பலஸ்தீனத்தின் பெருநிலப்பரப்பை இஸ்ரேல் விழுங்கிக் கொண்டது. ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகளிலும் பல பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆகியும் தமது நிலத்தையும் வாழ்விடங்களையும் இழந்துகொண்டது வரலாறு.

Continue reading “வழித்தடம்”

The train has left the station!

Continue reading “The train has left the station!”

இருந்தும் விடுகிறோம்!

காஸாவின் குழந்தைகள் தமது உள்ளங்கைகளில் பெயரையும் முகவரியையும் வர்ணம் கலந்த பேனா மையினால் எழுதி வைக்கிறார்கள். தாம் இறந்தபின் சிதறுண்ட தமது உடலை வேண்டியவர்கள் அடையாளம் காண அப்படிச் செய்கிறார்கள். கசங்கிய கடதாசியில் பிஞ்சுக் கைகளால் ‘உயில்’ எழுதி வைக்கிறார்கள். தமது விளையாட்டுப் பொருட்களை யார்யாருக்கு கொடுக்க வேண்டும். தமது உடைகளை யார்யாருக்குக் கொடுக்க வேண்டும். தாம் குருவிபோல் சேகரித்த உண்டியல் காசை யார்யாருக்கு எவ்வளவு எவ்வளவாய் பிரித்துக் கொடுக்க வேண்டும். எழுதுகிறார்கள். தமது அம்மா அப்பா தம்பி அண்ணன் தங்கை அக்கா என குறிப்பிட்டு அவர்கள் எழுதும் இந்த உயிலை வாசிக்கக்கூட அவர்களது இந்த உறவுகள் உயிர்பிழைப்பார்களா தெரியாது. என்ன கொடுமை இது.

Continue reading “இருந்தும் விடுகிறோம்!”

போட்டுத் தள்ளுதல் !

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கொலை -அரசியல்

“போட்டுத் தள்ளுவது” என்ற வார்த்தை ஈழ அரசியல் சூழலிலிழுந்து தமிழ்ச் சினிமாவுக்குள் நுழைந்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. ‘போட்டுத் தள்ளுவது’ என்பது அரசியலில் ‘இனந்தெரியாதோரால்’ கொல்லப்படுதலுடன் தொடர்புடையது. ஒரு கொலையை செய்வதையும்விட தடயங்கள் துளியளவும் இல்லாமல் அதை செய்வது என்பது முதன்மையாக இருக்கும். இதில் கொலை என்பது இரண்டாம் பட்சமாகிவிடும். தடய அவதானம் முதலாம் பட்சமாக இருக்கும். அவை தமது தரப்பில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திவிடாதபடி கவனம் கொள்வதால் அவ்வாறு நிகழ்த்தப் படுகிறது.

Continue reading “போட்டுத் தள்ளுதல் !”

அதிசயம் நடக்குமா!

ஒரு இலட்சம் மக்கள் வாழும் லிபியாவின் கிழக்கு நகரமான டேர்னாவை (Derna) வெள்ளம் கடந்த 11.9.23 அன்று வாரியெடுத்திருக்கிறது. அந்த நகரத்தின் கால்வாசி பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 அடி உயரம் வரை வெள்ளம் அலைபோல் திரண்டு இந்த நகரை துரத்தியிருக்கிறது. அதன் தாக்குதலால் காணாமலாக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டதுமான மனிதர்களின் தொகை 20’000 இனை தாண்டியுள்ளது என இதுவரையான கணிப்பு சொல்கிறது.

Continue reading “அதிசயம் நடக்குமா!”

Enough is Enough !

image : Spiegel.de

நீஜரில் யுரேனியம், தங்கம் போன்ற கனிம வளங்களை அகழும் பிரான்ஸ் கம்பனியைத் தடைசெய்த நீஜர் அரசு தாமே உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது. யுரேனியத்துக்கான ஏற்றுமதி விலையை உலக சந்தையின் பெறுமதி “200 யூரோ/கிலோ” க்கு உயர்த்தியுள்ளது. இது கனடாவின் யுரேனிய ஏற்றுமதிப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்ட விலை நிர்ணயம் ஆகும்.

Continue reading “Enough is Enough !”

ஏன் தடுக்கிறது மேற்குலகம்?

image : Al Jazeera

மேற்கு ஆபிரிக்காவின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை மேற்குலகின் கண்களினூடாகப் பார்த்தால் அந்த கவிழ்ப்பு ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஓகே. இவர்கள் முன்வைக்கிற ஜனநாயகப் பெறுமதி என்ன. ஆபிரிக்காவை காலனியாக்கி நூற்றாண்டு காலமாய் வளங்களை கொள்ளையடித்துவிட்டு, பெயருக்கு சுதந்திரம் வழங்கியபின் அந்தக் கொள்ளையை தொடர நவகாலனியத்தை கையிலெடுத்தனர். அதற்கான பொம்மை ஆட்சியாளர்களை ஆட்சிக்கட்டிலில் இருத்துவதற்கு அவர்கள் செய்த திருகுதாளமெல்லாம் அவர்களின் எந்த ஜனநாயகப் பெறுமதிக்குள் உள்ளடங்குகிறதோ தெரியவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை இராணுவம் தூக்கியெறிந்து ஜனநாயகத்தை சாய்த்துவிட்டதாக பொங்கியெழும் மேற்குலக ஜனநாயகப் பெறுமதியானது எண்ணற்ற உதாரணங்களை காட்ட முடியும் என்றபோதும், ஒரு உதாரணமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சதாம் குசைன் அவர்களை வீழ்த்தும்போது விடுமுறையில் சென்றுவிட்டதா என்ன.

Continue reading “ஏன் தடுக்கிறது மேற்குலகம்?”

ஹிப்பி

1970 களில் எமது விடலைப் பருவத்தில் ஹிப்பி பற்றிய செய்திகளை வாசித்தும் கேட்டும் அறிந்தேன். அவர்களை சடை வளர்ந்த தலையுடன், கசங்கிய உடையுடன், வாழ்க்கை வெறுத்த மனிதர்களாக, போதைப் பொருள் பிரியர்களாக வெள்ளைநிறத்துடன் ஒரு தோற்றத்தை வரைந்துகொண்டேன். பின் யாழ் நகரில் அந்த மனவரைவுத் தோற்றத்தில் ஒருசிலரை அப்படி பார்த்தேன். அவர்கள் ஹிப்பிதானா இல்லையா என எனக்கு இப்போதும் தெரியாது. 80 களின் ஆரம்பத்தில் கொழும்பில் பார்த்த உருவம் எனது மனவரைவை தோற்றத்தில் மட்டும் செழுமைப்படுத்தியிருந்தது. பின்னரான காலத்தில்தான் அவர்களின் எதிர்க் கலாச்சார எழுச்சி பற்றி அறிந்துகொண்டேன்.

Continue reading “ஹிப்பி”

குரங்கின் கதை

இலங்கை அரசு சீனாவுக்கு முதற் கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய இருப்பதான செய்தி தற்போதைய பேசு பொருளாகியுள்ளது. சீனா வாங்குகிறது என்றதுமே இறைச்சிக்காகத்தான் என தலைக்குள் எழும் சித்திரம் சரியானதா என்ற கேள்வி இருக்கிறது. எனது ஞாபகம் சரியானால், இலங்கையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் குரங்கு இறைச்சியை விடுதி மாணவர்களுக்கு சமைத்துக் கொடுத்தது தெரியவந்து பரபரப்பாக பேசப்பட்டது. மான் இறைச்சிபோல் மிருதுவானதாக இருந்ததால் மாணவர்கள் இதற்கு “தொங்கு மான்” இறைச்சி என ஒரு பெயரை சூட்டினார்கள். எனவே இறைச்சிக்கான ஏற்றுமதி என ஒரு சாரார் நினைப்பதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ளவும் முடிகிறது.

Continue reading “குரங்கின் கதை”