போர்நிறுத்த ஒப்பந்தம் 2025

image: Aljazeera

காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போது தேடுதல் என்பதற்கு ஏதும் அர்த்தம் இருக்குமா என்ன.

அதேபோல் இஸ்ரேலிய சிறையில் கொல்லப்பட்ட பலஸ்தீன கைதிகளின் உடலங்களும் வந்திருக்கின்றன. அவர்கள் மோசமான சித்திரவதைக்கு உட்பட்ட தடயங்கள் உடலில் இருப்பதாக ஐநா செயலாளர் நாயகம் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய சிறையிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தாம் பறிகொடுத்த காலங்களின் மீதேறி மீண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டார்கள் என நம்பி இருந்த சில குடும்பங்களின் முன் மறுபிறவி எடுத்து வந்ததுபோல் சில கைதிகள் மீண்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 வருடங்களாக, 20 வருடங்களாக கைதிகளாக இருந்தவர்களும் வந்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் கமாஸின் பிடியிலிருந்த பணயக் கைதிகள் இஸ்ரேல் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.

Continue reading “போர்நிறுத்த ஒப்பந்தம் 2025”

சமாதானத்துக்கான நோபல் பரிசு

2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார்.

Continue reading “சமாதானத்துக்கான நோபல் பரிசு”

Flotilla அலை

இஸ்ரேலின் கோர முகமும் மனித இழிவுச் செயல்களும் புளோற்ரீலா போராட்டக்காரர்களை அச்சமூட்டி அனுப்பிவைத்திருக்கின்றன. கடந்த புதன் கிழமையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை புளொற்ரீலா வள்ளங்கள் முழுவதும் இஸ்ரேல் கடற்படையால் கட்டம் கட்டமாக முற்றுகையிடப்பட்டு, அவற்றில் பயணம் செய்த 437 செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த அமளிக்குள்ளும் 3 கப்பல்கள் தமது சமிக்ஞைகளை மாற்றி மாற்றி முயற்சிசெய்து பயணித்தும்கூட அவை காஸா கடற்கரையிலிருந்து 130 மைல் தூரத்தை மட்டுமே எட்டித் தொட முடிந்தது.

Continue reading “Flotilla அலை”

இதுதான் டிசைன்

Thanks for image: time .com

பலஸ்தீன காஸா பகுதியில் போரை நிறுத்தி இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க ட்றம்ப் அரசினால் வரையப்பட்ட சமாதானத் தீர்வு பற்றிய பேச்சு இப்போ பேசுபொருளாகியுள்ளது. இந்தக் கூற்றில் இரண்டு கதையாடல்கள் இருக்கின்றன. ஒன்று காஸாவில் நடப்பது ‘போர்’ என்றதான கதையாடல். அங்கு நடப்பது போரல்ல. ஓர் இனப்படுகொலை என்பதே உண்மை. மற்றைய கதையாடல், இஸ்ரேலுக்கு கமாஸ் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பது என்பது.

Continue reading “இதுதான் டிசைன்”

மதில் மேல் பூனை

மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு.

ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான வழியில், ஓர் அரசியல் தீர்வை நோக்கிய வழியில் உடனடியான போர்நிறுத்தம் பற்றி வெளிப்படையாக பேசுகின்றன. பல காலமாக இஸ்ரேலுக்கு விளக்குப் பிடித்து மீண்டுவந்த சவூதி கூட, ஈரான் மீதான இஸ்ரேலின் வலிந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆனால் இந்தியா..?

Continue reading “மதில் மேல் பூனை”

வேடனை விடுதலை செய்யுங்கள்

நான் பாணன் அல்ல
பறையன் அல்ல
புலையன் அல்ல
நீ தம்புரானுமல்ல.
ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!

வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை.

வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன.

Continue reading “வேடனை விடுதலை செய்யுங்கள்”

அவல நாயகன்

அமெரிக்காவின் நரித்தனம் உக்ரைனில் அரங்கேறுகிறது. 2000 களிலிருந்து -குறிப்பாக 2008 இலிருந்து- ரசியாவை சீண்டியபடி இருந்த அமெரிக்கா ரசியா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சூழலை படிப்படியாக உருவாக்கி உச்ச நிலையில் கொணர்ந்து விட்டது. ரசியா ஆக்கிரமித்தது.

நடுநிலையாக இருந்த உக்ரைனை நேற்றோ அமைப்பில் சேர்க்க வேண்டும் என ஜோர்ஜ் புஷ் 2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் முன்மொழிந்தார். உக்ரைன் மறுத்தது. ஜேர்மனியும் பிரான்ஸ் உம் இது ரசியாவுடனான போரை உருவாக்கும் ஆபத்தை கொண்டது என எச்சரித்தன.

Continue reading “அவல நாயகன்”

நிலவீடுகள் (Earth Hause)

சுவிஸ் கட்டடக் கலைஞனான பீற்றர் வெற்ஷ் (Peter Vetsch) இன் படைப்பாக்கம் இது. “நிலவீடு” என அழைக்கப்படும் இந்த கட்டடத் தொகுதியை அவர் டியற்றிக்கோன் (சூரிச்) இல் அமைத்து இந்த ஆண்டுடன் 30 வருடங்களாகியிருக்கிறது. அதைக் கொண்டாடும் விதத்தில் நிலம் பூத்த அந்தக் கட்டடக்கலையின் நினைவாக திரும்பவும் அவை பேசப்படுகிற பொருளாக செய்திகளில் வருகிறது.

Continue reading “நிலவீடுகள் (Earth Hause)”

கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது!

Continue reading “கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது.”

நிம்மதியாக இருக்கப்போவதில்லை!

Continue reading “நிம்மதியாக இருக்கப்போவதில்லை!”