பழசின் புதுசு

தீயின் செந்நாக்கை நான்
தூசித்துத் துரத்திய நாட்களின் மீது
கடத்திவரப்பட்டேன்.
இருபத்தியிரண்டு ஆண்டுகள்
புத்தகங்களின் சாம்பலால்
தூசிப்படுத்தப்பட்டதாய் எம் அறிஞர்களும்
அலுக்காது சொல்லிக்கொண்டிருந்தனர்.
எரிபாடுகளின் குவியலில் எஞ்சிய
நூல்களும் களவாடப்பட்டிருந்தன.

Continue reading “பழசின் புதுசு”

போரறிந்த சமாதானம்

போர் கவிழ்ந்த எமது தேசத்தில்
தளபதிகள் உருவாயினர்
தத்துவவாதிகள் தோன்ற மறந்தனர் அல்லது
மறுக்கப்பட்டனர்.
வரலாற்றை
போராட்டம் நகர்த்திச் சென்றது
ஆனாலும் நாம்
அனுபவங்களும் சிந்தனைகளும்
சேர்ந்து நடக்க
தடைவிதித்தோம்.

Continue reading “போரறிந்த சமாதானம்”

யுத்தவாசம்

யுத்தம்
தொலைக்காட்சிகளின் பிரமாண்டங்கள்
வெடிகுண்டுகளின் பேரோசை
புகைமண்டலங்கள் காற்றை விழுங்கி ஏப்பமிட
அதிர்வுகளில் ஈடாடியது
ஈராக் பூமி

Continue reading “யுத்தவாசம்”

வருக புத்தாண்டே வருக !

 

வருக புத்தாண்டே,
வருக நீ!
நம்பிக்கைகளை புதுப்பிக்கும் ஆற்றல்
எம்மிடம் உள்ளதால்
மீண்டும் வருக
மீண்டும் மீண்டும் வருக!
வரவேற்கிறோம்.

Continue reading “வருக புத்தாண்டே வருக !”

மௌனத்தை நேசித்தல்

 

ஒவ்வொரு நுனித்தலும் காற்றில்
புதையும்வரையான வியாபித்தலில்
உடல்பெயர்த்து பரவுகிறது என்
நரம்புகள்.
கூண்டினுள் மனிதன் அடைபட
மனிதம் எல்லையற்றுக் குலாவும்
குழந்தைப் பொழுதில் நாம்
திளைத்திருந்தோம்.
எம்மைச் சுற்றிய உலகம் பற்றி
கவலைப்படாதிருந்தோம்.
பேசினோம் குழந்தைபோல்
சிரித்தோம்
மனசை உழுதோம்
வார்த்தைகள் கிளறி.

Continue reading “மௌனத்தை நேசித்தல்”

துயரங்களின் பின்னான நாட்களில்…

உலகின் அதிஅழகு
சமாதானம் என
படுகிறது எனக்கு.
அதனால்தானோ என்னவோ
அவ்வளவு இலகுவாய் அது
கிட்டுவதில்லை.
எனவே நான்
சமாதானத்தை சந்தேகிக்கிறேன்

Continue reading “துயரங்களின் பின்னான நாட்களில்…”

நீள நட குறுகல் அகல

 

எனது வீட்டுக் கதவு தட்டப்படும்போது
நண்பன்தான் என
இயல்பாய் மனசு
எண்ணுவது எப்போது?
வாள்களும் பொல்லுகளும் – ஏன்
உணவில் நஞ்சூட்டலும்கூட
துப்பாக்கிகளின் வேலையைச் செய்யும்போது
நான் சமாதானத்துக்காய்
அழ மட்டுமே முடிகிறது.

Continue reading “நீள நட குறுகல் அகல”

அவள் வருவதாயில்லை

வண்ணத்துப்பூச்சிகள் நிறங்களையெல்லாம்
உதிர்த்துக் கொட்டிய பேய்ச்சோகம்
அவள் முகத்தை சருகிட்டிருந்தது
அப்படியான ஒரு பொழுதில்
மீண்டும் அவளை நான்
சந்தித்தேன் திட்டமிட்டபடி.

Continue reading “அவள் வருவதாயில்லை”

வாழ்தல் என்பது…

எனது கண் இறைக்கும் ஒளியை
ஓர் புள்ளியில் தேக்க
எனக்கு இஸ்டமில்லை.
அது படர்வதற்குரியது.

விரும்பியபோது விரும்பிய இடத்தில்
ஆடவும் பாடவும்
அதிகளவு சுதந்திரம் அனுபவிக்கிறது
ஒரு குழந்தை –
என்னைவிட.
அழுதலுக்காக இரங்க ஆயிரம் மனிதர்கள்.
தனிமையாய்
மனம்விட்டு சிரிக்கும் எனை
பைத்தியமென பார்வையெறிந்து
கொல்லும் உலகில்
சேர்ந்து சிரிக்க நான் மனிதர்களைத் தேடுகிறேன்.

Continue reading “வாழ்தல் என்பது…”

முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்

காற்றுக்கூட உறங்க
நினைக்கும் இரவின் அமைதி
நிச்சயமற்றுப்போன ஓர்
இரவில் இது நடந்திருக்கலாம்
அல்லது,
சூரியனின் ஒவ்வொரு கதிர்களையும்
முறித்துப்போடும் வெறியோடு
செல்களும் குண்டுகளும்
படைநடத்திச் சென்ற ஒரு
பகல்பொழுதிலும் இது நடந்திருக்கலாம்

Continue reading “முளைகொண்ட ஓவியமும் நாலு வார்த்தைகளும்”