வாழைப்பழ அரசியல்

வாழைப்பழத்தின் பூர்வீகம் தெற்கு,தென்கிழக்கு ஆசியா என சொல்லப்படுகிறது. கரப்பா காலத்தின் கி:மு 3000-2500 தொல்பொருள் சான்றுகள் இதை நிரூபித்திருக்கின்றன. போத்துக்கீச, ஸ்பானிய காலனியவாதிகள் இதை தென்னமெரிக்கா மத்திய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு காலநிலைப் பொருத்தம் கருதி எடுத்தச்சென்றனர் என சொல்லப்படுகிறது. அதில் தொடங்கிய அதன் அரசியல் இருபதாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய கனவுகளுக்கும் தீனி போட்ட வரலாறு இது.

Continue reading “வாழைப்பழ அரசியல்”

புலம்பெயர் இலக்கியம்

ஒரு பார்வை

அண்மைக் காலமாக தமிழில் புலம்பெயர் இலக்கியம் குறித்த கேள்விகள் வரைவுகள் அதிகம் பேசப்படுவனவாக மாறியுள்ளன. தமிழகத்தில் முதலில் அதாவது 90 களின் முற்பகுதியில் புலம்பெயர் இலக்கியத்தை அறிமுகமாக்கிய வரலாற்றுத் தொடக்கம் நிறப்பிரிகை குழுவுக்கே உள்ளது என நினைக்கிறேன். 1996 இல் பாண்டிச் சேரியில் ஒரு சந்திப்பில் புலம்பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர்ந்த தமிழக மக்களை உள்ளடக்காதா என ரவிக்குமார் கேட்டிருந்தார். அது இப்போ பலரும் எழுப்புகிற கேள்வியாகியிருக்கிறது புலம்பல் இலக்கியம் என தமிழக எழுத்தாளர்கள் சிலராலும் ஈழத்து எழுத்தாளர்கள் சிலராலும் அப்போ எள்ளிநகையாடப்பட்ட காலகட்டம் அது. இன்று அது பேசப்படும் பொருளாக மாறியிருக்கிறது. அண்மைக் காலமாக அதன் வரையறைகளை கேள்விக்கு உள்ளாக்குகிற, எல்லைகளை விசாலிக்கிற கருத்துக்கள் மேலெழுந்திருப்பது வரவேற்கக் கூடியதுதான். மாறாக அதை ஒரு சர்ச்சையாகப் பார்க்க வேண்டியதில்லை. இதில் என் தரப்பிலான கருத்தை இங்கு முன்வைக்கிறேன். அவ்வளவுதான்.

Continue reading “புலம்பெயர் இலக்கியம்”

குரங்கின் கதை

இலங்கை அரசு சீனாவுக்கு முதற் கட்டமாக ஒரு இலட்சம் குரங்குகளை ஏற்றுமதி செய்ய இருப்பதான செய்தி தற்போதைய பேசு பொருளாகியுள்ளது. சீனா வாங்குகிறது என்றதுமே இறைச்சிக்காகத்தான் என தலைக்குள் எழும் சித்திரம் சரியானதா என்ற கேள்வி இருக்கிறது. எனது ஞாபகம் சரியானால், இலங்கையில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் எழுபதுகளின் பிற்பகுதியில் குரங்கு இறைச்சியை விடுதி மாணவர்களுக்கு சமைத்துக் கொடுத்தது தெரியவந்து பரபரப்பாக பேசப்பட்டது. மான் இறைச்சிபோல் மிருதுவானதாக இருந்ததால் மாணவர்கள் இதற்கு “தொங்கு மான்” இறைச்சி என ஒரு பெயரை சூட்டினார்கள். எனவே இறைச்சிக்கான ஏற்றுமதி என ஒரு சாரார் நினைப்பதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்ளவும் முடிகிறது.

Continue reading “குரங்கின் கதை”

தெரியாமல் போய்ச்சு!

நெடுமாறனின் பிரபாகரன் கதை

  1. இப்போ 2023. இடையில் 14 ஆண்டுகள். தலைவருக்கு இப்போ நரைவிழுந்திருக்கிறது. தாடி வளர்ந்திருக்கிறது. விடுதலைத் தீயை அவர் ஏந்தியிருக்கிறார். வெளியுலகிலிருந்து துண்டித்த கூட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வருகிறார். சரியான தருணம். அதென்ன சரியான தருணம் என நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். தலைவர் வருவார். திட்டத்தை அறிவிப்பார். தமிழீழம் கிடைக்கும். தமிழீழப் படம். இயக்குநர் யார் என்பதும் நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். ஊடகங்களெல்லாம் அரைச்சு அரைச்சு தீவனமாக எமக்கு வழங்குகிறது. நாம் எவளவு பெரிய முட்டாள்கள் என நெடுமாறன், காசி கோஸ்டியும் ஊடகங்களும் நினைத்திருக்கலாம். இருக்கட்டும்.
Continue reading “தெரியாமல் போய்ச்சு!”

மாற்றங்களின் எதிரிகள் !


Enemies of SYSTEM CHANGE !

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவோ ஐரோப்பிய ஒன்றியமோ தனித்தனியான மேற்குலக நாடுகளோ உதவ முன்வராதது ஏன்?. இந்த பொருளாதார நெருக்கடிக்கு முழுக் காரணமுமே ராஜபக்ச குடும்பம்தான் எனவும் போர்தான் காரணம் எனவும் நிறுவிவிட முடியாது. அவை உள்ளகக் காரணிகள் மட்டும்தான். உலகில் ஏழை நாடுகள் எதுவும் முழு இறைமையோடு இருப்பது சாத்தியமற்றதாக்கப்பட்டு பல காலமாகிவிட்டது. அப்படியானால் இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தை இலங்கைக்குள் மட்டும் எப்படி கண்டுபிடித்துவிட முடியும் ?

Continue reading “மாற்றங்களின் எதிரிகள் !”

வானத்திலிருந்து வீழ்வதல்ல !

காலிமுகத்திடலில் மையம் கொண்டுள்ள எழுச்சி ஒரு அரசியல் விளைவை காண்பதற்கான ஆவலில் பெரும்பாலான மக்களை ஆழ்த்தியிருக்கிறது. எப்பொழுதுமே நேரடி விளைவுகள் குறித்து பேசப்படும் அளவிற்கு அதன் மறைமுக விளைவுகள் கவனிக்கப்படுவதில்லை.

Continue reading “வானத்திலிருந்து வீழ்வதல்ல !”

போருற்ற உலகு !

saurce : Reuters, Nato

யுத்தம் வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. யுத்தம் என்பது சண்டை மட்டுமல்ல. பெரும் உயிரழிவுகளையும் அங்கவீனமுறும் மக்கள் கூட்டத்தையும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, அது பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகிறது. பண்பாடுகளை அதன் விழுமியங்களை மரபுகளை சிதைத்துவிடுகிறது. இயற்கை வளங்களை அழிக்கிறது. இவ்வாறாக ஒரு சமூகத்தை அதன் மரபுத் தொடர்ச்சியிலிருந்து, இயல்பான வளர்ச்சிநிலையிலிருந்து முறித்து முடமாக்குகிறது. எனவே யுத்தத்துக்கு எதிராக நிற்றல் எனபது மிக அடிப்படையானது.

Continue reading “போருற்ற உலகு !”

பண்பாட்டு அசைவு

மேற்குலக மையவாதம் தனது பண்பாட்டை நியமமாக வைத்தே மற்றைய பண்பாடுகளை அளவிடுகிறது. அதேநேரம் தனது ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் எல்லா பண்பாடுகளையும் தனிமனித உரிமைகளையும் மதிக்கவேண்டும் என அதே மேற்குலகம் வகுப்பும் எடுக்கும். இந்த மேற்கத்தைய பண்பாடு காலனிய ஆதிக்கங்களுக்கு உட்பட்ட காலத்திலிருந்து இன்று உலகமயமாதலின் இணைய தொடர்பூடகப் புரட்சிவரை எமது தனித்துவங்கள் அடையாளங்களை தக்கவைப்பதை சவாலுக்கு உட்படுத்தியபடியே இருக்கிறது.

Continue reading “பண்பாட்டு அசைவு”

முஸ்கான் அலை

ஒவ்வொரு சம்பவங்களும் புதிதாக உருவாகிறது என்பதை விடவும், சமூகவலைத்தளங்களினாலும் இன்றைய தொழில்நுட்ப வசதியினாலும் அவை உடனுக்குடன் வெளிக்கொணரப்படுகிறது என்பதே பொருத்தமானது. எதிர்ப்புக்குரலுக்கு தளமாகவும் அநியாயங்களை காட்சி ரூபத்தில் அம்பலப்படுத்துவதாகவும் இன்றைய சமூக ஊடகங்கள் கிடைத்திருக்கின்றன என்ற அம்சங்கள் முக்கியமானது.

Continue reading “முஸ்கான் அலை”

Vincent Van-Gogoh

கொலண்ட்டைச் சேர்ந்த வின்சன்ற் வான்கோ (1853-1890) ஒரு புகழ்பெற்ற post-impressionist ஓவியர். மேற்குலக ஓவிய வரலாற்றில் பாரிய தாக்கம் செலுத்தியவர்களில் அவரும் ஒருவர். ஒரு பத்து வருட காலத்தில் 2100 ஓவியங்களை அவர் வரைந்திருந்தார். இவைகளில் பெரும்பாலானவற்றை அவர் தனது வாழ்வின் கடைசி இரு வருடங்களில் வரைந்து தள்ளினார்.

Continue reading “Vincent Van-Gogoh”