ரத்தம் விற்பவனின் சரித்திரம்

– இலக்கியமும் அரசியலும்

Yu Hua nool

“தலைவர் மாவோ பேசத் தொடங்கினார். தலைவர் மாவோ பெரும்பாலும் எல்லா நாட்களும் பேசினார். நாம் ஆயுதம் கொண்டல்ல, வார்த்தைகள் கொண்டுதான் போராட வேண்டும் என்று சொன்னபோது எல்லோரும் கத்தியையும் கம்பையும் கீழே வைத்தார்கள். நாம் புரட்சியை வகுப்பறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னபோது யீலியும் ஏளும் ஸான்லியும் புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றார்கள். புரட்சி உற்பத்திக்கு உதவ வேண்டும் என்று தலைவர் மாவோ சொன்னபோது ஸன்க்வான் பட்டுத் தொழிற்சாலைக்குச் சென்றான்.  யுலான் பலகாரம் செய்வதற்காக தினமும் காலையில் வேளைக்கே எழுந்துசென்றாள். யுலானின் முடி மீண்டும் நீண்டு வளர்ந்து காதுகளை மூடுமளவுக்கு வந்தது.”  ( பக்.216)

அன்றைய சீன அரசியல் சூழலில் கதைமாந்தர்களான ஒரு குடும்பத்தின் அசைவியக்கம் இது. இந்த நாவல் ஓர் அரசியல் நாவல் என்ற வகைமைக்குள் தன்னை பொருத்திக்கொள்கிறது.

Continue reading “ரத்தம் விற்பவனின் சரித்திரம்”

பட்டாம்பூச்சி

…ச்செறியும் நாவல் !

papilon cover-tamil
கென்றி சாரியரின் (Henri Charriere) “பட்டாம்பூச்சி” நாவல் எனது புத்தக அலுமாரியில் தனது சிறகொடுங்கி குந்தியிருந்து பல வருடங்களாகியிருந்தது. “சூரிச் – வாசிப்பும் உரையாடலும் 12” சோலையுள் இந்தப் பட்டாம்பூச்சியின் பறப்பை காண நாம் விழைந்தோம். ஒரு தொகை பக்கங்களில்அது தன் சுவடுகளை மெல்லப் பதித்தபடி பறந்துகொண்டிருந்தது. பல இலட்சக்கணக்கான பிரதிகளிலும் பல்வேறு மொழிகளின் வரிகளுக்குள்ளாலும் அது ஏன் பறந்தது என எழுந்த கேள்விக்கு இன்னமும் என்னிடம் பதிலில்லை. நூலை வாசித்து உரையாடியுமாயிற்று. இன்னும் பதிலில்லை. ரா.கி.ரங்கராஜனின் மொழியெர்ப்பு நாவலின் உள்ளுடனை ஊடுருவ முடியாமல் ஓரமாய் நடந்துகொண்டிருக்கிறதா எனவும் எண்ணத் தோன்றியது. எப்படியோ வரிகளுக்கிடையால் புகுந்து நடக்க வேண்டிய பொறுப்பு இந்த எதிர் அம்சத்தை தாண்டிச் செல்ல வைத்தது.

Continue reading “பட்டாம்பூச்சி”

வரலாறு முக்கியம் அமைச்சரே !

“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது.

Continue reading “வரலாறு முக்கியம் அமைச்சரே !”

ஆதிரை

– எனது வாசிப்பு

நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வெவ்வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில் ஒருவர் தனது கருத்தின் சார்புநிலையை அக் கணங்களில் துறக்க வேண்டியிருக்கும். தனது கருத்துசார் நிலையை தற்காலிகமாக அழித்துவிட்டு பாத்திரங்களின் கருத்துசார் நிலைக்கு மாறிக்கொண்டு எழுதுவது சுலபமானதொன்றல்ல. பொதுவில் தாம் சார்ந்த கருத்துநிலை இடையீடு செய்தபடியே இருக்கும். (எழுதுதலின்போது) அதைத் துறப்பது ஒருவித துறவு நிலைதான்.

Continue reading “ஆதிரை”

நான் ஒரு சிறைப்பறவை – Phan Boi Chau

(பான் பாய் சௌ அவர்களின் சிறைக் குறிப்புகள்)

// எதிர்காலத்தில் என்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் எவராக இருப்பினும் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேறு பாதையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். // – Phan Boi Chau

Continue reading “நான் ஒரு சிறைப்பறவை – Phan Boi Chau”

பனி

நாவல்தானே ஓர் ஓட்டமும் நடையுமாக கடைசிப் பக்கத்தை எட்டிப் பிடித்துவிடலாம் என்ற எனது எதிர்பார்ப்பைப் பார்த்து ஓரான் பாமுக் புன்னகைத்திருத்தல் கூடும். ஒருவேளை அதற்கும் ஒரு படிமத்தையும் பனிச் செதிலிலிருந்து உருவி எடுத்துக் காட்டியுமிருப்பார் அந்த மனுசன். பனியை எத்தனைவகையான குறியீடாக, படிமமாக பொரித்துக் காட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு இது ஒன்றும் பெரிய விசயமல்ல.

Continue reading “பனி”

Dust in the eyes of the world.

ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களாலும் அடிப்படைவாதங்களாலும் சீரழிக்கப்பட்ட நாடு. போதைப்பொருள் சாம்ராச்சியமாக மனநிலைப்படுத்தப்படும் நாடு.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு 1979 இலிருந்து 1989 வரை நீடித்தது. 1992 ஏப்ரல்28 அன்று சோவியத் பொம்மை அரசான நஜிபுல்லாவின் அரசு அழிந்தொழிந்தது. அதுவரை அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்று பட்டுப் போராடிய முஜாகிதீன் கிளர்ச்சியாளர்களில் ஆக்கிரமிப்புக்கெதிரான போராளிகளாக இருந்த உண்மைப் போராளிகளின் பெரும்பகுதியினர் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்தனர். மற்றைய பகுதியான அதிகார வெறி பிடித்த குழுவினரோ உள்நாட்டுப் போரை ஆரம்பித்தனர்.

Continue reading “Dust in the eyes of the world.”

குழந்தைப் போராளிகள் – China Keitetsi

// ” பெட்டை நாயே! இங்கே நடப்பது ஒன்றுமேயில்லை. உன்னை உகண்டாவுக்குக் கொண்டுபோனபின்தான் கச்சேரியே இருக்கிறது” என்று அவர்கள் கொக்கரித்தார்கள்.அவர்கள் அந்த இரகசிய இடத்தில் என்னை நீண்ட நாட்களாக அடைத்துவைத்து சொல்லவோ எழுதவோ முடியாத சித்திரவதைகளை செய்தார்கள்.அந்தக் காலம் என் அவமானத்தின் காலமாக இருந்தது. அதைப் பற்றி இதற்குமேல் எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை…

Continue reading “குழந்தைப் போராளிகள் – China Keitetsi”

எனது நாட்டில் ஒரு துளி நேரம்.

– எனது வாசிப்பு

malathi book

நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. 240 பக்கங்கள் கொண்ட இந் நூலை விடியல் பதிப்பகம் 2013 இல் வெளியிட்டுள்ளது.

புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும்.

Continue reading “எனது நாட்டில் ஒரு துளி நேரம்.”

பங்கர்கள் பின்தொடர்கின்றன..

oolikkaalam-2“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு.

அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

இந் நூல் வெளிவர காத்திரமான பங்களிப்புச் செய்த சயந்தன் தமிழ்க்கவியை (இந் நூலின் கடைசிப் பக்கத்தில்) இவ்வாறு அறிமுகமாக்குகிறார்.
“தமயந்தி சிவசுந்தரலிங்கம் (66) எனும் இயற்பெயர் கொண்ட தமிழ்க் கவி ஈழவிடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர். போராளிகளாலும் மக்களாலும் “மம்மி“ என்றும் “அன்ரி“ என்றும் அன்பாக அழைக்கப்பட்ட தமிழ்க்கவி ஈழப் போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய்.“ என்கிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் வானொலி, வானொளி உட்பட அதன் கலையிலக்கிய தளங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்ததால் தமிழ்க்கவி பலராலும் அறியப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பில் போராளியாக இருந்த அவரின் ஊழிக்காலம் நாவல் அந்தத் தளத்தில் இயங்கவில்லை. அப்படி இயங்கவேண்டும் என்பதுமில்லை.

Continue reading “பங்கர்கள் பின்தொடர்கின்றன..”