சான்ரீஸ்!
கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்
கூந்தலாய் முகில் விரித்து
உச்சி வழிந்து
முகம் மறைத்து ஏமாற்றினாய்
எனை
சென்ற தடவை.
சான்ரீஸ்!
கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்
கூந்தலாய் முகில் விரித்து
உச்சி வழிந்து
முகம் மறைத்து ஏமாற்றினாய்
எனை
சென்ற தடவை.
நீர்த்திவலையால்
மேகத்தை அழைத்து
வானத்தை தன்
மடியில் வீழ்த்தியிருந்தது
அந்த அருவி
வானம் கிறங்கிக் கிடந்தது
அருவியின் அணைப்பில்.
மரங்களின் பச்சையம்
வழிந்து
கரை ஊறிக்கிடந்தது.
– வானொலி விவாதத்தின்போது…-
பெண்கள்மீது உளவியல் ரீதியில் தாக்கம் கொள்பவற்றில் முக்கியமானது கருத்தியல். ஆண் அதிகார கருத்தியல்கள்தான் அவை. பெண்சம்பந்தமான -அதாவது பெண்மை பற்றிய- வரையறைகள் இந்த ஆண்நோக்கின் அடிப்படையில்தான் வரைவு செய்யப்பட்டன.
பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள்@ ஆண் அவர்களை பாதுகாப்பவன் என்ற மனோநிலைகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் பெண் இரண்டாம்தர -அதாவது தங்கிவாழும் மனோநிலைக்கு உள்ளாக்கப்படுகிறாள். இது ஒரு முக்கியமான உளவியல் தாக்கம்.
சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி)
95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.
செட்டை கழற்றிய நாங்கள் – கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல – ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.
சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.
துடைப்பதற்கு ஆளின்றி
கண்ணீர்
அழுகி மணக்கிறது.
செட்டை பெயர்ந்த வடுக்களாய்
விரியும்
மணற்கங்குப் பாலைவன மனிதர்கள் நாம்.
காற்றில் அசைந்தாடுகிறது காண்
அந்த நாணல் புல்.
இயல்பாய்
அதன் நளினம் காண்
ரசனை வெளி நிரப்ப.
குழந்தையொன்று
அள்ளிவரும் இயல்பெல்லாம்
நாளும் பொழுதுமாய் தேய்கிறது காண்
என் பயிற்சிக் களத்தில்.
ஓடு!
முடிந்தால் நுனி நகத்தை ஊன்றி
பறந்துவிடு.
எனது முகம் உடைந்து
அள்ளுண்டு போகிறது-
உனது மூச்சில்.
சுவாசப் பையுள் கல்நிரப்பும் குரங்குத் தனத்தோடு
கெந்தித் திரிகிறது காற்று.
புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பொழுதுபோக்கின் பெரும்பகுதியை ஆரம்பத்தில் தமிழ்ச் சினிமா விழுங்கியிருந்தது. இப்போதெல்லாம் புலம்பெயர் வானொலிகள் (தொலைக்காட்சி?) இதை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. வலிமையான வெகுஜன தொடர்புச் சாதனங்கள் என்ற வகையில் எமது தமிழ்ச் சமூகத்தின்மீது இவை ஏற்படுத்தும் பாதிப்பு அதிகமானது.
Continue reading “நடுஇரவு விவாதம் ஆணாதிக்கப் பிசாசின் நடமாட்டம்”
(ஓர் அஞ்சலி)
மரணம்
வயதை வெல்லும் மரணம் கொடியது
நண்பனே
எடுத்துச் செல்
எனது இரு கண்ணீர்த் துளிகளையும்
எடுத்துச் செல்
மிகுதியை என் கண் மடல்களுக்குள்
தேக்கிவைக்கிறேன்.
எப்பிடி சுவிஸ் சனம். உங்களோடை எப்படி?
என்ன… எங்களை ஸ்வாற்ஸ் (கறுப்பர்) என்று சொல்லுவாங்கள். சிலவேளைகளில் இதைச் சொல்லி திட்டுவாங்கள்.
அவங்களுக்குச் சொல்லு, ஊரிலை நாங்கள்தான் வெள்ளையெண்டு.
சிரிப்பதற்கு மட்டுமல்ல ஒரு பொறியாய் அது மனசில் விழுந்தது.