புதியமாதவியின் ஹே…ராம்!

– கவிதைவரிகளினூடான ஒரு பயணம் –

என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி

முகவரி தொலைந்த
மனிதர்களுக்காகவே
என் கவிதை
பிறந்தது

Continue reading “புதியமாதவியின் ஹே…ராம்!”

வாழ்வின் மீதான எளிய பாடல்கள்

– ஓர் அறிமுகக் குறிப்பு

நதிகள் கல்லானதை
பறவைகள் அழுததை
அடர்ந்த காடுகள் சிறகசைத்துப் பறந்ததை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?

முன்னைய கடவுள்கள் புதையுண்டதையும்
புதிய கடவுள்கள்
இருண்ட இரவில் ஆகாயத்திலிருந்து
உடல் நிர்வாணமாகவும்
உடல் கவசங்களோடும்
கடும் கோபமாகவும்
கடும் மகிழ்ச்சியாகவும்
இறங்கியதை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
…..

Continue reading “வாழ்வின் மீதான எளிய பாடல்கள்”

பழசின் புதுசு

தீயின் செந்நாக்கை நான்
தூசித்துத் துரத்திய நாட்களின் மீது
கடத்திவரப்பட்டேன்.
இருபத்தியிரண்டு ஆண்டுகள்
புத்தகங்களின் சாம்பலால்
தூசிப்படுத்தப்பட்டதாய் எம் அறிஞர்களும்
அலுக்காது சொல்லிக்கொண்டிருந்தனர்.
எரிபாடுகளின் குவியலில் எஞ்சிய
நூல்களும் களவாடப்பட்டிருந்தன.

Continue reading “பழசின் புதுசு”

போரறிந்த சமாதானம்

போர் கவிழ்ந்த எமது தேசத்தில்
தளபதிகள் உருவாயினர்
தத்துவவாதிகள் தோன்ற மறந்தனர் அல்லது
மறுக்கப்பட்டனர்.
வரலாற்றை
போராட்டம் நகர்த்திச் சென்றது
ஆனாலும் நாம்
அனுபவங்களும் சிந்தனைகளும்
சேர்ந்து நடக்க
தடைவிதித்தோம்.

Continue reading “போரறிந்த சமாதானம்”

பொழுதைத் தோய்த்தல்

நான் அநேகமாக நித்திரையாகிக் கொண்டிருந்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்த சிறுகதைத் தொகுப்பின் நான்காவது கதையை நான் வாசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கையிலிருந்து புத்தகம் நழுவி தலையணையில் மெல்ல சாய்ந்துகொண்டது. அதன் போதையை நான் சுகித்திருக்க வேண்டும். கையில் புத்தகங்களை எடுத்தாலே இடையில் ஓர்; பக்கம் திறந்திருக்க நான் தூங்கிப் போய்விடுவதுண்டு. எழுத்து என்னில் ஊறுவதும் எழுத்தாளனிடமிருந்து நான் விடைபெற்று அதை நகர்த்தபவனுமாய்ப் போவேன். பின்னர் தூங்கிப் போய்விடுவேன்.

Continue reading “பொழுதைத் தோய்த்தல்”

“கொரில்லா” – உள்ளும் புறமும்…

– ஒரு குறிப்பு-

ஷோபாசக்தியின் கொரில்லா நாவலிற்கான அடையாளத்தினை சாதிக் கொடுக்கும்போது இந்த எதிர்பார்ப்பை தந்து நாவலுக்குள் அனுப்புகிறார்.
ஊத்தையர்களோடு ஊத்தையர்களாக… விளிம்புநிலை வாழ்வை வரித்துக் கொண்ட… என்றெல்லாம் அடையாளம் ஷோபாசக்தியை அறிமுகம் செய்கிறது. பொருளாதார ரீதியிலும் வசதிவாய்ப்புகளிலும் ஏன் வேலை இல்லாதவனுக்கும் சமூகநலன் உதவியும் சமூக உத்தரவாதமும் இருக்கும் ஒரு நாட்டில் ஊத்தையனாக இருந்து தன்னை விளிம்புநிலை மனிதனாக காட்டவேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை.

Continue reading ““கொரில்லா” – உள்ளும் புறமும்…”

யுத்தவாசம்

யுத்தம்
தொலைக்காட்சிகளின் பிரமாண்டங்கள்
வெடிகுண்டுகளின் பேரோசை
புகைமண்டலங்கள் காற்றை விழுங்கி ஏப்பமிட
அதிர்வுகளில் ஈடாடியது
ஈராக் பூமி

Continue reading “யுத்தவாசம்”

வருக புத்தாண்டே வருக !

 

வருக புத்தாண்டே,
வருக நீ!
நம்பிக்கைகளை புதுப்பிக்கும் ஆற்றல்
எம்மிடம் உள்ளதால்
மீண்டும் வருக
மீண்டும் மீண்டும் வருக!
வரவேற்கிறோம்.

Continue reading “வருக புத்தாண்டே வருக !”

மௌனத்தை நேசித்தல்

 

ஒவ்வொரு நுனித்தலும் காற்றில்
புதையும்வரையான வியாபித்தலில்
உடல்பெயர்த்து பரவுகிறது என்
நரம்புகள்.
கூண்டினுள் மனிதன் அடைபட
மனிதம் எல்லையற்றுக் குலாவும்
குழந்தைப் பொழுதில் நாம்
திளைத்திருந்தோம்.
எம்மைச் சுற்றிய உலகம் பற்றி
கவலைப்படாதிருந்தோம்.
பேசினோம் குழந்தைபோல்
சிரித்தோம்
மனசை உழுதோம்
வார்த்தைகள் கிளறி.

Continue reading “மௌனத்தை நேசித்தல்”

துயரங்களின் பின்னான நாட்களில்…

உலகின் அதிஅழகு
சமாதானம் என
படுகிறது எனக்கு.
அதனால்தானோ என்னவோ
அவ்வளவு இலகுவாய் அது
கிட்டுவதில்லை.
எனவே நான்
சமாதானத்தை சந்தேகிக்கிறேன்

Continue reading “துயரங்களின் பின்னான நாட்களில்…”