காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா
என்கிறான் தாடியை புதராய் வளர்த்தவன்.
கொலைகொலையாய் விழுகிறது,
இதிலென்ன புதுவருடமும் மண்ணாங்கட்டியும்
என்கிறான் என் மறுநண்பன்.
Author: sudumanal
ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்

இந்த நாட்டில் நான் மதிக்கப்படுகிறேனில்லை, ஏனெனில் நான் ஒரு கறுப்பன். பதவி உயர்வில் அலட்சியப்படுத்தப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். ஒரு கிரிமினலாக கவனிக்கப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். உங்களில் பல ஆயிரம்பேர் அவருக்கு வாக்களிக்க விருப்பமில்லை, ஏனெனில் அவர் ஒரு கறுப்பன், ஆனால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரிவதில்லை. எனக்கு மட்டும் அது தெரியவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்…
கையெழுத்து வேட்டை அரசியல்
தேசம் நெற் இணையத்தளத்துக்கு எழுதப்பட்டது தொடர்பாக..
இந்த அறிக்கையில் எனது பெயரும் (அடைமொழியுடன்) வந்திருக்கிறது. அறிக்கை இணையத்தளத்தில் வெளிவந்த பின்னரே அதை நான் வாசித்தேன். இதற்கு முன்னர் இது எமக்கு மின்னஞ்சல்மூலம் வந்திருந்தபோதும் இதை நான் வாசித்திருக்கவில்லை. அனுமதியின்றி எனது பெயரைப் போட்டது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
கொல்லைப் புறத்துக் கதை
சபாலிங்கம் கொலைசெய்யப்பட்டபோது அவர்வீட்டு கொல்லைப்புறத்தில்கூட அஞ்சலி எழுத அச்சமடைந்து இருந்தவர்கள் பலர் என்று நாவலன் எழுதுகிறார். அன்று தேசம் நெற் இருந்திருந்தால் முகமிலிகளாக அஞ்சலியைப் பதிவுசெய்திருக்கும் என்று பின்நோக்கிய ஆரூடம் கொடுத்திருக்கிறார். திரும்பத்திரும்ப இந்த இரு வசனங்களையும் வாசித்துப் பார்த்தால் இதற்குள்ளேயே விடையும் இருப்பதை காணுவீர்கள்.
எழுதிக்கிழி அல்லது கிழிச்சு எழுது
என்னிடம் இப்போதெல்லாம்
வெற்றுத் தாள்கள் வந்து சேர்கின்றன.
ஒவ்வொரு எழுத்துகளின் மீதான வாசிப்பின்
முடிவிலோ அல்லது இடைநடுவிலோ அவை
என்னிடம் வந்து விழுகின்றன.
ஒரே அலையில் நீச்சலடித்தல்
சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும்,
அதற்கு வெளியிலும்…
18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிரிப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விரிந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிரிப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குரியதுதான்.
போர்ப் பறப்பு
என் இரவுகளைக் கொத்தி
துளைகளிடும் பறவைகளின் ஒலி
தூக்கத்தைக் கலைக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர்
சமாதானத்துக்கான போர்
சனநாயகத்துக்கான போர் என்றெல்லாம்
நிறம் விரித்து வருகிறது பறவைகள்
அவ்வப்போது.
உதிர்கவிதைகள்
| 1. நிறவெறி நான் கையைக் கழுவுகிறபோது
நீரில் கலைந்த அழுக்குளைப் பார்த்து உன் நிறம் கரைகிறது என்று சொல்லிச் சிரித்தான் சகதொழிலாளி. அவனது வெள்ளைத்தோலில் அப்பிக்கொண்டிருந்தது நிறவெறி. |
போர் பூத்த நாகரிகம்
பலஸ்தீனத்தைக் குதறுகிறது
ஏவல் நாயொன்று
றமெல்லாவின் இடிபாடுகளுள் அது
மோந்து திரிகிறது -தன் சொல்ப்
‘பயங்கரவாதிகளை’.
காட்சிகளில் லயித்துப்போய்
அமர்ந்திருக்கிறான் அதன்
எஜமானன்.
புல்டோசர்கள் கட்டடங்களை
நிதானமாகத் தகர்க்கின்றன
இடிபாடுகளை நிர்மாணிக்கின்றன
துவாரகனின் வெளிகள்
“மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்”
கவிதைத் தொகுதி முகவுரை
‘இந்தத் தேசத்தின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ -துவாரகன்
இதுவாய்ப்போன இந்தத் தேசத்தை ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’என எழுதிச் செல்லும் கவிதைத் தொகுதி இது.
இந்த மூச்சுவெளிகளை உருவாக்கிய போர் மரணத்தை உமிழ்கிறது. அது எப்படிப்பட்டது?