எழுதிக்கிழி அல்லது கிழிச்சு எழுது

என்னிடம் இப்போதெல்லாம்
வெற்றுத் தாள்கள் வந்து சேர்கின்றன.
ஒவ்வொரு எழுத்துகளின் மீதான வாசிப்பின்
முடிவிலோ அல்லது இடைநடுவிலோ அவை
என்னிடம் வந்து விழுகின்றன.

Continue reading “எழுதிக்கிழி அல்லது கிழிச்சு எழுது”

ஒரே அலையில் நீச்சலடித்தல்

சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும், 

அதற்கு வெளியிலும்…

18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிரிப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விரிந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிரிப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குரியதுதான்.

Continue reading “ஒரே அலையில் நீச்சலடித்தல்”

போர்ப் பறப்பு

என் இரவுகளைக் கொத்தி
துளைகளிடும் பறவைகளின் ஒலி
தூக்கத்தைக் கலைக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர்
சமாதானத்துக்கான போர்
சனநாயகத்துக்கான போர் என்றெல்லாம்
நிறம் விரித்து வருகிறது பறவைகள்
அவ்வப்போது.

Continue reading “போர்ப் பறப்பு”

உதிர்கவிதைகள்

1. நிறவெறி நான் கையைக் கழுவுகிறபோது

நீரில் கலைந்த அழுக்குளைப் பார்த்து

உன் நிறம் கரைகிறது என்று சொல்லிச்

சிரித்தான் சகதொழிலாளி.

அவனது வெள்ளைத்தோலில் அப்பிக்கொண்டிருந்தது

நிறவெறி.

Continue reading “உதிர்கவிதைகள்”

போர் பூத்த நாகரிகம்

பலஸ்தீனத்தைக் குதறுகிறது
ஏவல் நாயொன்று
றமெல்லாவின் இடிபாடுகளுள் அது
மோந்து திரிகிறது -தன் சொல்ப்
‘பயங்கரவாதிகளை’.
காட்சிகளில் லயித்துப்போய்
அமர்ந்திருக்கிறான் அதன்
எஜமானன்.
புல்டோசர்கள் கட்டடங்களை
நிதானமாகத் தகர்க்கின்றன
இடிபாடுகளை நிர்மாணிக்கின்றன

Continue reading “போர் பூத்த நாகரிகம்”

துவாரகனின் வெளிகள்

“மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்”

கவிதைத் தொகுதி முகவுரை

‘இந்தத் தேசத்தின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ -துவாரகன்

இதுவாய்ப்போன இந்தத் தேசத்தை ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’என எழுதிச் செல்லும் கவிதைத் தொகுதி இது.

இந்த மூச்சுவெளிகளை உருவாக்கிய போர் மரணத்தை உமிழ்கிறது. அது எப்படிப்பட்டது?

Continue reading “துவாரகனின் வெளிகள்”

தோழர் பரா – இரங்கல் செய்தி

இன்று இந்த இறுதிநிகழ்வில் கலந்தகொள்ளமுடியாமல் போனது நான் எதிர்பாராத ஒன்று. அதனால்; எனது இரங்கல்செய்தியை தோழர் பராவின் இறுதிச்சூழலுக்குள் அனுப்பிவைத்துள்ளேன்.
—————————

புலம்பெயர்ந்து வாழ்தல் ~பாய்விரித்தால் படுத்துறங்கும் நாய்ச்சாதி| என்று பழிக்கப்பட்ட காலங்களை, அதன் ஈழஅறிவினை தூசாய்த் தட்டிவிட்டது மாற்றுக் கருத்துக்களின் முளைப்பும் அதன் தொடர்ச்சியும் என்பது நம்பக்க நியாயம். ஆம் இந்த உழைப்பு ஆரம்பகாலங்களில் வித்தாய் இடப்பட்டதில் தோழர் பரா அவர்களின் பணி புகலிடத்தில் தொடங்கிற்று.

Continue reading “தோழர் பரா – இரங்கல் செய்தி”

என்னவாய் இருக்கக் கோருகிறது?

புத்தாண்டு பிறக்க இன்னமும்

சில மணித்தியாலங்கள் இருக்க,

வாங்க மறந்த சம்பானியாப் போத்தலுக்காக

விரைகிறேன் நான்.

காசா மீதான இஸ்ரேலின் சண்டித்தனத்தால்

துபாய் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இல்லாமல் போன துயரில்,

தலையில் கைவைத்தபடி

குந்தியிருக்கிறான் ஒருவன்,

நகரின் மையத்தில்.

Continue reading “என்னவாய் இருக்கக் கோருகிறது?”

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு

இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்… கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு… அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம், எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்… முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள் நாற்திசையும் வரைந்த கோடுகளில் ஆர்வலர்கள் புள்ளிகளானார்கள். வழமையாகவே நேரத்தைக் கடைப்பிடிப்பதில் பேர்போன எமது பாரம்பரியத்திற்கு பிரான்ஸ் போக்குவரத்தின் வேலைநிறுத்தம் வேறு. நேரத்துக்கு வரத்துடித்தோரையும் அங்கங்கு ரயில் நிலையங்களிலும், வாகனநெரிசலிடை துண்டுகளாய்த் தெரிந்த வீதிகளிலும் காக்கவைத்து அரிப்புக்கொடுத்துக் கொண்டிருந்தது வேலைநிறுத்தம். Continue reading “20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு”

துயரங்களிலிருந்து எழல்

 

நெருப்புக் கோளங்களை
சமாதானப் ப+க்களுக்குள் நுழைக்கும்
குரூரவாதிகளே
உங்கள்
சமாதானத்துக்கான போரினது
வரைவிலக்கணம்தான் என்ன
சொல்லிடுங்கள்!

Continue reading “துயரங்களிலிருந்து எழல்”