இடது வளைவு..!!

நீண்டகாலமாகவே மக்கள் சார்ந்து நியாயமாக குரல் எழுப்பி வந்தவர் வாசுதேவ நாணயக்கார. கவனிப்புப் பெற்ற இடதுசாரியாக வாழ்ந்தவர். மகிந்தவின் நண்பரான அவர் அரசுக்குள் உள்ளிழுக்கப்பட்ட காலத்திலிருந்து அவரது குரல்கள் அவஸ்தைப்பட ஆரம்பித்தன.

Continue reading “இடது வளைவு..!!”

இது ஏன் முடியாதாம்!

தமிழ் பேசும் மக்களின் எல்லாப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தாத (எல்லா இயக்கங்களினதும்) போராட்டத்தை தமிழ் மக்களின் போராட்டம் என்றுதான் அழைத்தோம். தமிழ் மக்களைப் பிரதிநித்துவப் படுத்தாத கிரிக்கெட் அணியினை இலங்கை அணி என்று அழைக்கிறோம்.

 நான் ஓர் இலங்கைப் பிரசை… அது சிங்கள மக்களினது மட்டுமல்ல, தமிழ்மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் மலையக மக்களினதும் நாடு. அந்த உரிமையை நாம்விட்டுக்கொடுக்க முடியுமா என்ன.

Continue reading “இது ஏன் முடியாதாம்!”

இராணுவப் பயிற்சி வக்கிரம்

பாடசாலை முடிந்து பிள்ளை பரீட்சை பெறுபேறுடன் வீட்டுக்கு வருகிறது. அது தன்னளவில் திருப்பதியடைந்தோ அல்லது திருப்திப்படாமலோ வருகிறது. அதைவிட அக் குழந்தையிடம் தனது பெற்றோரின் அலசல் முறையில் பயம் மேலிடுகிறது. பக்கத்துவீட்டு சக மாணவர்களின் புள்ளிகளை விசாரித்து தனது குழந்தையின் திறமை அல்லது திறமையின்மைமீது தீர்ப்பு வழங்கும் மனோபாவம்தான் அது.

Continue reading “இராணுவப் பயிற்சி வக்கிரம்”

தூவானம்

08 மார்ச்2014. அது கிரிக்கற் பொழுதாய்ப் போனது எனக்கு. “ஏசியன் கப்” க்கான இறுதி ஆட்டம் சிறீலங்கா அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடம்பெற்றது. நாள் முழுதும் அதை கணனியில் பார்த்துக்கொண்டிருந்தேன்.கிரிக்கெற் எனக்கு சிறு வயதிலிருந்து பிடித்த விளையாட்டு என்பதால் அதை சும்மா பார்க்க வெளிக்கிட்டு, பின் இடையில் நிறுத்த முடியாமல் இறுதிவரை பார்த்து முடித்தேன்.

Continue reading “தூவானம்”

மார்ச் 8 – பெண்கள் தின குறிப்பு.

கால்பந்துக்கு அதிக முக்கியத்துவம் நிலவும் நாடுகள் இவை. மற்றைய விளையாட்டுகள் போலவே ஆண்களும் விளையாடுகிறார்கள். பெண்களும் விளையாடுகிறார்கள். ஆங்கிலத்தில் Team என்பதை டொச்சில் Mannschaft என்பார்கள். Mann என்பது ஆண். இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.

 வீதியை குறுக்காய்க் கடக்கும் மஞ்சள் வரிக் கோட்டுப் பாதைக்கு ஆங்கிலத்தில் Zebra-cross என்பார்கள். அதை டொச்சில் Fussgängerstrifen என்பார்கள். Fussgänger என்பது ஆண்பால் சொல்.(Fussgängerin என்பது  பெண்பால் சொல்). இந்த ஆண்மொழிச் சொல்லை அவர்கள் கேள்விகேட்டார்கள்.

Continue reading “மார்ச் 8 – பெண்கள் தின குறிப்பு.”

Millions can walk. ஆவணப்படம்.

Gogo Basic சூரிச் இல் திரையரங்கொன்றில் இதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றரை மணிநேர ஆவணப்படம்.

First they ignore you.

Then They laugh at you.

Then they fight you.

Then you win.

–  Mahatma Gandhi

millions can walk-1

Continue reading “Millions can walk. ஆவணப்படம்.”

றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…

24 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஓர் ஆளுமை றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…

 

“…ஏப்ரல் 23, 1990 ரைம் சஞ்சிகையில் வெளிவந்த இக் கட்டுரை சுவிஸ் மனிதம் இதழ்-6 இல் (1990 யூலை , ஓகஸ்ட்) தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது. இக் கட்டுரை வெளிவந்த ரைம் சஞ்சிகை இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டது…”

ஏன் இந்தவகை ஒப்பீடுகள்?

//காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.// – பாலன் தோழர்

  சீமான் சொல்வது பச்சைப் பொய் என்ற ஒரு பதில் போதாதா ?

 பாலுமகேந்திரா ஒரு படைப்பாக்கத் திறனுள்ள கலைஞன். ஈழத்தில் பிறந்தார்தான். அதையும் தாண்டிய பெருவெளியில் அவரது படைப்புகள் அவரை அடையாளப்படுத்தியிருக்கிறது. அவரும் அப்படியேதான் தனது படைப்புலகத்தில் இயங்கினார்.  அவர் பேசப்படும் கலைஞனாக பரிணமித்ததிற்கு அதுவும் ஒரு காரணம்.

Continue reading “ஏன் இந்தவகை ஒப்பீடுகள்?”

வாழைமரக் கதை

“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன? ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.

Continue reading “வாழைமரக் கதை”

The struggle is my life – நெல்சன் மண்டேலா

சிறைக் கொடுமையிலிருந்து வெளிவருதில் தமது தனிப்பட்ட வாழ்வை அல்லது தமது இருப்புகளை முதன்மைப்படுத்தி செயற்படும் மனித வாழ்வியல் விருப்பை மண்டேலா எடுத்துக்கொண்டவரல்ல. போராளியாகவே உள்ளே போனார். போராளியாகவே வெளியே வந்தார், அதுவும் நிபந்தனைகள் எதுவுமற்று. போராட்ட வாழ்வில் தம்மை நம்பி வந்த மக்கள் இழந்தவைகளுக்கு அவர் இவ்வாறுதான் பொறுப்பெடுத்தார். பதிலளித்தார். அவர் உண்மைப் போராளியாய் நிமிர்ந்தது இவ்வாறுதான்.

nelson mandela-95.

Continue reading “The struggle is my life – நெல்சன் மண்டேலா”