அவள் அனாதையாகிவிட்டிருந்தபோது கவனித்தாள், தன்மீது
ஓர் இருள் துண்டொன்று போர்த்தப்பட்டிருப்பதை.
தாழப் பறந்த கிபீர் விமானங்கள்
கிழித்துவிட்டிருந்த துண்டாக இது இருக்கலாம்.
நிலமதிர வெடித்துச் சிதறிய குண்டின் செல்கள்
அரிந்தெறிந்த துண்டாகவும் இருக்கலாம்.
எது எப்படியாகிலும் அவள் அதைப் போர்த்தியிருந்தாள்
அல்லது
அது அவளைப் போர்த்தியிருந்தது.
Author: sudumanal
எனது வார்த்தைகளுள் நான்
நண்ப,
யன்னல்கள் திறந்திருந்த காலமதில்
பரிமாறிய வார்த்தைகள் இன்னமும்
தொலைந்துபோய்விடவில்லை என நம்புகிறேன்.
முரண்கள் மோதி மோதி வளர்ந்த எம் உறவு – இன்று
முகநூல் நட்பாய்
“லைக்” குறியீடாய்
தேய்ந்து போகிறதா என அச்சப்படுகிறேன்.
எனது வார்த்தைகள் உண்மையானவை – அதில்
எப்போதும் ஈரமும் இருக்கும்.
பிம்பங்கள் வரையும் தூரிகைகளின் படையெடுப்பு
விமர்சனங்களை தாக்கியழிக்கிற காலமிது.
மௌனத்தை அதிகம் நேசிக்கக் கற்றுக் கொள்கிறேன்.
அது ஓர் நெடுவீதியாய் நீண்டு
என்னையும் உன்னையும் தன்
முனைகளால் விலக்குப்பிடிக்கிறது அல்லது
தள்ளிக்கொண்டிருக்கிறது.
என்னிடம் தூய்மைகள் எதுவும் இல்லை.
அழுக்கை நான் வெறுத்தபடியேதான் நகர்கிறேன்.
நெடுவீதி எமை தூரப்படுத்தும் இடைவெளியை
தனிமை நிரப்பிக்கொண்டிருக்கிறது.
தனிமையை நான் நேசித்தபடி இருப்பேன் – அதில்
தொங்கிக்கொண்டிருக்கிறது எனது ஆன்மாவின் வாழ்வு.
10052015
எனது நாட்டில் ஒரு துளி நேரம்.
– எனது வாசிப்பு
நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. 240 பக்கங்கள் கொண்ட இந் நூலை விடியல் பதிப்பகம் 2013 இல் வெளியிட்டுள்ளது.
புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும்.
“பொறுக்கி” வாழ்வு.
// கானா என்ற வார்த்தை மேல் உறைஞ்சுபோய் காய்ஞ்சு போய் எங்கட ரத்த நாத்தம்தான் நிறைய அடிக்கும். இது எங்கட வலி. எங்கட உணர்ச்சி. உங்களோடு அழ முடியல. அழுவதற்கான மனிதர்கள் எங்களட்டை இல்லை. எங்க முகத்தைப் பார்த்து பேசவோ, எங்களை தொட்டுப் பேசவோ இந்த சமுதாயத்தில் ஆள் இல்லாதபோது, நாங்கள் பிணத்தைத்தான் கட்டி அழவேண்டியிருக்கும்.//
“மரண கானா விஜி” என்ற தற்போதைய கானாக் கலைஞன் சொல்லுகிற வார்த்தைகள் இவை.
பங்கர்கள் பின்தொடர்கின்றன..
“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு.
அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
இந் நூல் வெளிவர காத்திரமான பங்களிப்புச் செய்த சயந்தன் தமிழ்க்கவியை (இந் நூலின் கடைசிப் பக்கத்தில்) இவ்வாறு அறிமுகமாக்குகிறார்.
“தமயந்தி சிவசுந்தரலிங்கம் (66) எனும் இயற்பெயர் கொண்ட தமிழ்க் கவி ஈழவிடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர். போராளிகளாலும் மக்களாலும் “மம்மி“ என்றும் “அன்ரி“ என்றும் அன்பாக அழைக்கப்பட்ட தமிழ்க்கவி ஈழப் போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய்.“ என்கிறார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் வானொலி, வானொளி உட்பட அதன் கலையிலக்கிய தளங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்ததால் தமிழ்க்கவி பலராலும் அறியப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பில் போராளியாக இருந்த அவரின் ஊழிக்காலம் நாவல் அந்தத் தளத்தில் இயங்கவில்லை. அப்படி இயங்கவேண்டும் என்பதுமில்லை.
பயம்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு van இல் பயணித்துக் கொண்டிருந்தோம். சாரதி ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளிலிருக்கும் (அகதித்) தமிழர்களை ஏற்றியிறக்கிய அனுபவம் வாய்ந்தவராக இருப்பார் என தெரிந்துகொண்டேன். வெளிநாட்டிலிருந்து வரும் தமிழ்ப் பிள்ளைகளெல்லாம் பயந்தவர்கள் என்றார். பூச்சிகளைக் கண்டு பயப்படுகிறார்கள். பாம்பைக் கண்டு பயப்படுகிறார்கள். பல்லியைக் கண்டு பயப்படுகிறார்கள்… என அடுக்கிக்கொண்டிருந்தார்.
அது எப்போது ?
எனக்குள் இப்போதும் கிரிக்கெட் ரசிகன் வாழ்ந்துகொண்டேயிருக்கிறான். உலகக் கோப்பைக்கான இன்னொரு ஆட்டக்களம் போய்க்கொண்டிருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடந்த போட்டியிலும் இலங்கைதான் வெற்றிபெற வேண்டும் என எனது ரசிகனோடு நானும் ஒன்றியிருந்தேன்.
ஜெசிக்கா, விபூசிகா
முத்துலிங்கத்தின் பேய்கள்!
இயக்கத்தை பற்றைக்குள் ஒளித்திருந்து பார்த்து எழுதிய கதை.
கறல் பிடித்த எழுத்துகளால் தாக்குதல் தொடுக்கிறார். இயக்கத்தினுள் இயங்கிய மனிதர்களின் உணர்வுகளை முத்துலிங்கம் செயற்கைக்கோல் அனுப்பி எட்ட முயற்சித்து பரிதாபகரமாக வீழ்ந்து நொருங்குகிறார்.
Shaimaa El-Sabag ! – அஞ்சலிக் குறிப்பு
ஸைமா அல்-ஸாபா.
செயற்பாட்டாளரும் கவிஞையுமாகிய இவள் 25 ஜனவரி 2015 அன்று கொல்லப்பட்டுவிட்டாள்.
எகிப்தின் தாகீர் சதுக்க (Tahrir Square) எழுச்சியின் நான்காவது வருட நினைவுநாள் இந்த இளம் கவிஞையின் உயிரையும் காவுகொண்டது. அதிகார துர்நெடிலை முகரும் கொலைகாரர்களின் துப்பாக்கிக் குண்டுகள் அறியுமா கவிவாசனை. 2011 ஜனவரி 25 இல் தொடங்கிய தாகீர் சதுக்க எழுச்சியின் 4 வருட நினைவை தாங்கி மலர்வளையங்களுடன் அமைதியாய் ஊர்வலமாகச் சென்ற சோசலிசவழிச் செயற்பாட்டாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஓடமறுத்தவர்களில் அவளும் ஒருத்தியாக தாகீர் சதுக்கத்துக்கு அருகே நடைபாதையில் அவள் நடந்துகொண்டிருந்தாள். மிக அருகில் வைத்து அவள் சுடப்பட்டு இறந்துபோனாள்.





