சாதியப் போராட்டம்

– வெகுஜன அமைப்புகளும் முன்னுதாரணமும்.

 

(12.03.17 அன்று சுவிஸ் “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியில் நான் வைத்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டது.)

 

caste-pic

வெகுஜன அமைப்புகள் ஒரு சமூகத்தின் அசைவியக்கத்திலிருந்து தோன்றுகிறது. தனக்கான சுயத்தை உடையதாகவும் சுதந்திரமான இயக்கத்தை வேண்டிநிற்பதாகவும் குறித்த எல்லைகளுக்குள் தமது இலக்கை நிர்ணயிப்பதாகவும் இருக்கும். அது தொடர்ந்து செயற்படுவதோ, கலைந்போவதோ அதன் இலக்கைப் பொறுத்தது.

இலங்கையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை விடவும் ஒரு முன்னுதாரணமான போராட்ட வடிவமாகும். மக்கள் போராட்டங்களில் வெகுஜன அமைப்புகளின் பாத்திரத்தை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டுமெனில் அது இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்துதான் முடியும்.

Continue reading “சாதியப் போராட்டம்”

வரலாறு முக்கியம் அமைச்சரே !

“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது.

Continue reading “வரலாறு முக்கியம் அமைச்சரே !”

சப்ளினின் உலகம்

DSC00286
சுமார் 20 வருடங்களுக்கு முன் எஸ்.வி ராஜதுரை சுவிசுக்கு வந்திருந்தபோது சார்ளி சப்ளின் வாழ்ந்த வீட்டை நோக்கிய (300 கி.மீ) பயணத்தை மேற்கொண்டோம். அந்த வீடு மிக உயரமான மதிலுக்கு பின்னால் மறைந்திருந்தது. பெரும் மரங்கள் ஏதோவொன்றை பொத்திவைத்திருப்பது மட்டுமே தெரிந்தது. உள்ளே போக முடியாது. எதையும் பார்க்க முடியாது. வீடாகவே அது இருந்தது. எஸ்விஆருக்கு அது பொருட்டாக இல்லை. சார்ளி சப்ளின் நடந்த இந்த வீதியில் நானும் நடக்கவேணும் என்றபடி அங்குமிங்குமாக ஒருவித ஆகர்சிப்புடன் நடந்தார். அதை இப்போ அவர் பார்க்க நேர்ந்தால் ஒருவேளை சப்ளின் வாழ்ந்த அந்த வளவினுள் உருண்டுபுரளவும் கூடும்.
இருபதாம் நூற்றாண்டின் இந்த மாபெரும் மக்கள் கலைஞன் நம்மில் பலரையும் இவ்வாறேஆதர்சித்து நிற்கிறான்.

Continue reading “சப்ளினின் உலகம்”

மாவீரர் பிம்பம்

இப்போதான் எனது நண்பர் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு வந்தேன். «மாவீரர் தினத்துக்கு போகயில்லையா» என கேட்டேன்.

அதற்கு காரணம் உள்ளது. அவர் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் பயிற்சியாளராக இருந்தவர். இப்போ சுவிசில் குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
«நான் போகவில்லை. மாவீரர்களின் பெயரிலை வியாபாரம்தான் நடத்துறாங்கள். அங்கை எத்தினை சனம் கஸ்ரப்படுகுது. போராளிகள் படுற பாடு. பார்த்தியோ தமிழினியின்ரை அம்மா நல்லூர்க் கோயிலிலை கடலை வித்து சீவிச்சதை..» என்று தொடர்ந்து கொண்டிருந்தார்.

a Gun and a Ring

தவறவிடக்கூடாத படம்

gunring-2

a Gun and a Ring படத்தை முதன்முறையாக நேற்று ஐபிசி தொலைக்காட்சியில் இப்போதான் பார்த்தேன். கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரான லெனின் எம் சிவம் அவர்களால் எடுக்கப்பட்டிருக்கிற படம். புகலிட சினிமாக்களையும் பிடித்து ஆட்டும் இந்தியச் சினிமா பாணியை உதறித்தள்ளிவிட்டு தனித்துவமாக வெளிப்பட்டிருக்கிற படம். புகலிட சினிமாவின் எதிர்காலம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிற படம்.

கதாநாயக விம்பங்களின்றி மனிதர்களை அவரவர் நிலையில் வைத்து கதைகொள்கிறது படம். வன்முறையின் உளவியல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதைப் பிரயோகித்தவர்கள் ஆகியோரின் மனநிலை, அது கிளறப்படுதல், அது தன்னை உக்கிரமாகவோ மென்மையாகவோ வெளிப்படுத்தல் என படம் நகர்கிறது.

Continue reading “a Gun and a Ring”

ஓநாய் குலச்சின்னம்

– வாசனைக் குறிப்பு

wolf-book-pic           wolf_book-writer  Jiang Rong

 

சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் 2004 இல் வெளியிட்ட நாவலை தமிழில் சி.மோகன் அவர்கள் 2012 இல் «ஓநாய் குலச்சின்னம்» என மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் சுரேசின் மூலமாக இந் நாவலை வாசிக்கிற ஆர்வம் மேலிட்டது. எமது அடுத்த «வாசிப்பும் உரையாடலும்» நிகழ்ச்சியில் (13.10.2016) இந் நாவல் குறித்தான உரையாடலை மேற்கொள்ள இருக்கிறோம்.

ஓநாய்கள் பற்றி நமக்கு தரப்பட்டுள்ள அறிவு தவறானது என்பதை இந் நாவலை படிக்கிறபோது உணர்ந்தேன். அதன் உண்மைத்தன்மையைத் தேடியபோது ஓநாய்களுடன் ஏழு வருடங்கள் காட்டில் வாழ்ந்து கழித்த அமெரிக்கத் தம்பதிகளின் (Jim and Jamie Dutcher) ஆவணப்படத்தை காண நேர்ந்தது.https://www.youtube.com/watch?v=d36MK94POaI.  (The hidden life of Wolves என்ற தலைப்பில் அவர்கள் நூலொன்றை எழுதியுள்ளனர்)

Continue reading “ஓநாய் குலச்சின்னம்”

சுடர்கதை

hand-over-candle-1495809
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் அதை
எனது சுடரொளியில் நீ கவனிப்பதேயில்லை.
உனது முகத்தை நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
புறம்காட்டி நீ செல்கிறபோது அணிகிற முகமூடியை
நான் கண்டுகொண்டுவிடக் கூடாது என
எச்சரிக்கையுடன் இருக்கிறாய்.
தெரிகிறது.

Continue reading “சுடர்கதை”

The bravest Woman Malalai Joya

ஒரு நேர்காணல்.

இவ் வருடம் மார்ச் மாதம் டென்மார்க் நாட்டுக்கு மலாலாய் ஜோயா வந்திருந்தார். 28 ஆடி 2016 இல் டெனிஸ் சஞ்சிகையான Gaia and Opinionen இற்காக டென்மார்க்கில் கல்விகற்கும் பல்கலைக்கழக மாணவனான Masih Sadat என்பவரால் எடுக்கப்பட்ட பேட்டியின் தமிழாக்கம் இது.
தமிழில் : ரவி

malalai joya

ஆப்கானின் “துணிகரமான பெண்மணி” என வர்ணிக்கப்படுபவர் மலாலாய் ஜோயா. 2005 இல் ஆப்கானின் -மேற்குலக செற்றப்புடன் அமைக்கப்பட்ட- பாராளுமன்றத்துக்கான தேர்தலில் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராக இளம்வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துணிகரமான செயற்பாட்டாளர். அவர் அமெரிக்கா உட்பட மேற்குலகின் மீது கறாரான விமர்சனங்களை பொதுவெளியில் வைப்பவராக தொடர்ந்து இயங்குகிறார். அதனால் அவர் நோபல் பரிசுக்கு ‘உரியவரல்ல’. மேற்குலகால் விளம்பரப்படுத்தப்பட்ட Malala Yousafzai  அவர்களைத் தேடி வந்ததுது போல மலாலாய் ஜோயாவை நோபல் பரிசு (இப்போதைக்கு) தேடி வராது. சமூக அரசியல் தளத்தில் செயற்படும் மலாலாய் ஜோயா Raising my voice என்ற நூலையும் எழுதியிருக்கிறார். 2010 இல் ரைம் சஞ்சிகை வெளியிட்ட உலகில் தாக்கத்தைச் செலுத்திய நூறு பேரின் வரிசையில் மலாலாய் ஜோய் உம் இடம்பெற்றுள்ளார்.

Continue reading “The bravest Woman Malalai Joya”

குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்

ali-young and old

கிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது  Pugilism என அழைக்கப்பட்டது.

ஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.

Continue reading “குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்”

ஆதிரை

– எனது வாசிப்பு

நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வெவ்வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில் ஒருவர் தனது கருத்தின் சார்புநிலையை அக் கணங்களில் துறக்க வேண்டியிருக்கும். தனது கருத்துசார் நிலையை தற்காலிகமாக அழித்துவிட்டு பாத்திரங்களின் கருத்துசார் நிலைக்கு மாறிக்கொண்டு எழுதுவது சுலபமானதொன்றல்ல. பொதுவில் தாம் சார்ந்த கருத்துநிலை இடையீடு செய்தபடியே இருக்கும். (எழுதுதலின்போது) அதைத் துறப்பது ஒருவித துறவு நிலைதான்.

Continue reading “ஆதிரை”