ஒரு (மேற்குலக) அகதியின் மனநிலையை புரிந்துகொள்வதற்கு அகதியாக இருந்தால்தான் சாத்தியமா என எண்ணத்தோன்றுகிறது. அகதிவாழ்வை ஒரு வெறும் இடப்பெயர்வாக (அல்லது ஒரு பயணமாக) மட்டும் நோக்குகிற எளிமையான போக்கு சமூக ஆய்வாளர்களாக இருக்கிற தகுதியை ஒருவருக்கு இல்லாமலாக்கிவிடக் கூடியது.
Author: sudumanal
பட்டாம்பூச்சி
…ச்செறியும் நாவல் !

கென்றி சாரியரின் (Henri Charriere) “பட்டாம்பூச்சி” நாவல் எனது புத்தக அலுமாரியில் தனது சிறகொடுங்கி குந்தியிருந்து பல வருடங்களாகியிருந்தது. “சூரிச் – வாசிப்பும் உரையாடலும் 12” சோலையுள் இந்தப் பட்டாம்பூச்சியின் பறப்பை காண நாம் விழைந்தோம். ஒரு தொகை பக்கங்களில்அது தன் சுவடுகளை மெல்லப் பதித்தபடி பறந்துகொண்டிருந்தது. பல இலட்சக்கணக்கான பிரதிகளிலும் பல்வேறு மொழிகளின் வரிகளுக்குள்ளாலும் அது ஏன் பறந்தது என எழுந்த கேள்விக்கு இன்னமும் என்னிடம் பதிலில்லை. நூலை வாசித்து உரையாடியுமாயிற்று. இன்னும் பதிலில்லை. ரா.கி.ரங்கராஜனின் மொழியெர்ப்பு நாவலின் உள்ளுடனை ஊடுருவ முடியாமல் ஓரமாய் நடந்துகொண்டிருக்கிறதா எனவும் எண்ணத் தோன்றியது. எப்படியோ வரிகளுக்கிடையால் புகுந்து நடக்க வேண்டிய பொறுப்பு இந்த எதிர் அம்சத்தை தாண்டிச் செல்ல வைத்தது.
கக்கூஸ்
ஓர் ஆவணப்படம்.

சுவிஸ் சூரிச் இல் “வாசிப்பும் உரையாடலும்” என்ற தொடர் சந்திப்பு கடந்த இரு வருடகாலமாக நிகழ்த்தப்படுகிறது. நூல்களை (முக்கியமாக மொழிபெயர்ப்பு நூல்களை) வாசித்து பின் உரையாடுவது என முதிய இளைய சந்ததிகள் இணைந்து பயணிக்கிற பாதை இது. இதன் இணைப்பாக “திரையிடலும் உரையாடலும்” இதுவரை இரண்டு முறை நடந்திருக்கிறது. 07.05.2017 அன்று நடந்த இரண்டாவது திரையிடல் உரையாடலில் கக்கூஸ் ஆவணப் படமும் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.
வெட்கப்படுகிறோம் !
சாதியப் போராட்டம்
– வெகுஜன அமைப்புகளும் முன்னுதாரணமும்.
(12.03.17 அன்று சுவிஸ் “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியில் நான் வைத்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டது.)

வெகுஜன அமைப்புகள் ஒரு சமூகத்தின் அசைவியக்கத்திலிருந்து தோன்றுகிறது. தனக்கான சுயத்தை உடையதாகவும் சுதந்திரமான இயக்கத்தை வேண்டிநிற்பதாகவும் குறித்த எல்லைகளுக்குள் தமது இலக்கை நிர்ணயிப்பதாகவும் இருக்கும். அது தொடர்ந்து செயற்படுவதோ, கலைந்போவதோ அதன் இலக்கைப் பொறுத்தது.
இலங்கையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை விடவும் ஒரு முன்னுதாரணமான போராட்ட வடிவமாகும். மக்கள் போராட்டங்களில் வெகுஜன அமைப்புகளின் பாத்திரத்தை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டுமெனில் அது இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்துதான் முடியும்.
வரலாறு முக்கியம் அமைச்சரே !
“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது.
Continue reading “வரலாறு முக்கியம் அமைச்சரே !”சப்ளினின் உலகம்

மாவீரர் பிம்பம்
இப்போதான் எனது நண்பர் ஒருவரை சந்தித்து பேசிவிட்டு வந்தேன். «மாவீரர் தினத்துக்கு போகயில்லையா» என கேட்டேன்.
a Gun and a Ring
தவறவிடக்கூடாத படம்

a Gun and a Ring படத்தை முதன்முறையாக நேற்று ஐபிசி தொலைக்காட்சியில் இப்போதான் பார்த்தேன். கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரான லெனின் எம் சிவம் அவர்களால் எடுக்கப்பட்டிருக்கிற படம். புகலிட சினிமாக்களையும் பிடித்து ஆட்டும் இந்தியச் சினிமா பாணியை உதறித்தள்ளிவிட்டு தனித்துவமாக வெளிப்பட்டிருக்கிற படம். புகலிட சினிமாவின் எதிர்காலம் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துகிற படம்.
கதாநாயக விம்பங்களின்றி மனிதர்களை அவரவர் நிலையில் வைத்து கதைகொள்கிறது படம். வன்முறையின் உளவியல், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதைப் பிரயோகித்தவர்கள் ஆகியோரின் மனநிலை, அது கிளறப்படுதல், அது தன்னை உக்கிரமாகவோ மென்மையாகவோ வெளிப்படுத்தல் என படம் நகர்கிறது.
ஓநாய் குலச்சின்னம்
– வாசனைக் குறிப்பு
Jiang Rong
சீன எழுத்தாளரான ஜியாங் ரோங் 2004 இல் வெளியிட்ட நாவலை தமிழில் சி.மோகன் அவர்கள் 2012 இல் «ஓநாய் குலச்சின்னம்» என மொழிபெயர்த்திருக்கிறார். நண்பர் சுரேசின் மூலமாக இந் நாவலை வாசிக்கிற ஆர்வம் மேலிட்டது. எமது அடுத்த «வாசிப்பும் உரையாடலும்» நிகழ்ச்சியில் (13.10.2016) இந் நாவல் குறித்தான உரையாடலை மேற்கொள்ள இருக்கிறோம்.
ஓநாய்கள் பற்றி நமக்கு தரப்பட்டுள்ள அறிவு தவறானது என்பதை இந் நாவலை படிக்கிறபோது உணர்ந்தேன். அதன் உண்மைத்தன்மையைத் தேடியபோது ஓநாய்களுடன் ஏழு வருடங்கள் காட்டில் வாழ்ந்து கழித்த அமெரிக்கத் தம்பதிகளின் (Jim and Jamie Dutcher) ஆவணப்படத்தை காண நேர்ந்தது.https://www.youtube.com/watch?v=d36MK94POaI. (The hidden life of Wolves என்ற தலைப்பில் அவர்கள் நூலொன்றை எழுதியுள்ளனர்)