குயிலின் கானத்தை கேட்க முடியாது !

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், புதியபாதை ஆசிரியருமான தோழர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புலிகளின் தலைவர் பிரபாகரனால் கொலைசெய்யப்பட்ட தினம் இன்று. தனது 36 வது வயதில், அவன் சித்ரா பதிப்பகத்தின் வாசலில் வைத்து மௌனமாக்கப்பட்டான். புதியபாதை பத்திரிகை அலுவலாக அச்சகத்தின் முன்புறம் அமர்ந்திருந்து வேலைசெய்துகொண்டிருந்த சுந்தரத்தை புலிகள் மறைந்திருந்து சுட்டுக் கொன்றனர்.

Continue reading “குயிலின் கானத்தை கேட்க முடியாது !”

கேட்க மறந்துபோனேன்.

அவசர அவசரமாக அந்த முதியவர்  வந்து ஏறினார். அருகில் அமர்ந்துகொண்டார். இலக்கியச் சண்டையொன்றை பார்த்ததாக அவர் சொல்லத் தொடங்கியபோது “நானும் கண்டனான்” என சொல்ல வாய் வந்தது. சொல்லவில்லை. சோலி இல்லாமல் பேசாமலே இருந்துவிடுவம் எண்டு இருந்தேன்.
இந்த முதியவருக்குப் பக்கத்திலை போன தடவை ஒரு இளைஞன் அகப்பட்டுப் போயிருந்தான். அவன் வேலைவெட்டியில்லாமல் சோசல் காசிலை இருந்ததை தெரியாமல் சொல்லிவிட்டான்.
“அப்ப அரசாங்கப் பணத்திலை இருக்கிறியள். தம்பி வேலையில்லாமல் இருக்கக்கூடாது . இந்த நாட்டுக்கு வந்திட்டம். அதுக்காக உழைக்காமல் அரசாங்கத்திட்டையிருந்து காசெடுக்கிற அலுவல் அவளவு நல்லாயில்லை² என்றார்.

Continue reading “கேட்க மறந்துபோனேன்.”

பிரம்பியம்

பிரம்பு மாணவர்களுக்கு எப்போதுமே வன்முறையின் பிம்பம்தான்.பாடசாலைகளில் மாணவர்களைத் தண்டிப்பது அல்லது பிரம்பால் அடிப்பது என்ற நடைமுறை உலகம் பூராவும் இருந்திருக்கிறது. இப்போதும் சில நாடுகளில் இருக்கலாம். பல நாடுகளும் எப்போதோ கைவிட்டுவிட்ட இந்த அணுகுமுறை இலங்கையிலும் இப்போ கைவிடப்பட்டிருக்கிறது அல்லது தடைசெய்யப்பட்டிருக்கிறது.

Continue reading “பிரம்பியம்”

சும்மா காலமும் பட்டையடியும்

obama daughter-shasha

ஓபாமாவின் மகள் Sasha (16) படிப்பில் ஈடுபடும் அதேநேரத்தில் கடலுணவு விடுதியொன்றில் பகுதிநேர வேலைசெய்வதை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் (இலங்கையர், இந்தியர்) பகிர்ந்துள்ளனர். நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விடயத்தை இது நினைவுபடுத்தியுள்ளது.

Continue reading “சும்மா காலமும் பட்டையடியும்”

வாழைப்பழ ‘சோசலிசம்’

1984-85 . தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் இயக்கத்தின் அலுவலகம் இருந்தது. சில பல மைல்கள் தொலைவில் ஒரு பஞ்சாயத்து தலைவரின் காணிக்குள் அந்த அமைப்பின் தொலைத் தொடர்பு பயிற்சி முகாம் இருந்தது. அது ‘சலுகைகள்’ கூடிய முகாமாக இருந்தது. ஏனைய முகாம்கள் சவுக்கம் காடுகளுக்குள்ளும் பொட்டல் காடுகளுக்குள்ளும் வெந்து வேக, இந்த முகாமோ ஊருக்குள் தென்னந்தோப்புக்குள் குளிர்மையாய் சீவித்தது. அருகால் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். சமார் 40 பேரைக்கொண்ட இந்த முகாம் எல்லோரையும் ஒரே குடும்பமாக இணைத்து வைத்திருந்தது.. மிக வெளிப்படைத்தன்மையாக அந்த வாழ்வு இயங்கியது. வாழ்வின் மகத்தான தருணங்கள் அவை.

Continue reading “வாழைப்பழ ‘சோசலிசம்’”

வாழைமரக் கதை

banana

“உங்கள் நாட்டில் அதாவது சிறீலங்காவில் எத்தனை வகையான வாழை மரங்கள் இருக்கின்றன? ” எனக் கேட்டார் எனது முதலாளி. நான் முதன்முதலில் எண்பதுகளின் இறுதிப் பகுதியில் அழகானவோர் மலையுச்சியில் சிறிய சுற்றுலா விடுதியொன்றில் வேலை பார்த்தேன். அப்போ கணனித் தொழில்நுட்பம் இணையத்துள் நுழைந்திராத ஆரம்ப காலங்கள். விரலிடுக்கில் தகவல்கள் ஊற்றெடுக்க வாய்ப்புகள் அற்ற நாட்கள் அவை. அந்தத் துணிவில் முதலாளியின் கேள்விக்கு நான் தயக்கமின்றி பதிலளித்தேன்.

Continue reading “வாழைமரக் கதை”

சொல்லத் தோன்றியது !

30 வருட கால ஆயுதப் போராட்டம், போர் என களேபரப்பட்ட ஒரு பூமியில் போரை புரட்டிப் போடுகிற போரிலக்கியமும் இல்லை. தத்துவ வளர்ச்சியும் இல்லை. சர்வதேச அளவில் அறியப்பட்ட விமர்சகர்களுமில்லை. சிந்திக்கத் தூண்டுகிற ஆய்வாளர்களுமில்லை.

Continue reading “சொல்லத் தோன்றியது !”

மரபின் காதலர்கள்

காதலா? கத்தரிக்காயா?

 

கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.

கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.

Continue reading “மரபின் காதலர்கள்”

மரபின் காதலர்கள்

காதலா? கத்தரிக்காயா?

கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.

கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.

Continue reading “மரபின் காதலர்கள்”