என்ன நடக்கிறது, இந்த உலகில்?
பல விடயங்கள் தெரியாது என
நினைத்திருந்தேன் – இப்போ,
எதுவுமே தெரியாது என உணர்கிறேன்.
வெளவாலை கூண்டில் நிறுத்தினார்கள்
வூகானை பிசாசுகளின் தீவாக அறிவித்தார்கள்
உலகின் வைத்தியசாலைகளில் மரணங்களை
திரையில் காட்சியாக்கினார்கள்.
என்ன நடக்கிறது, இந்த உலகில்?
Author: sudumanal
2022
இந்த வருடமும் கடந்து போகிறது
இன்றைய திகதியை வாசித்து முடிக்கமுன்னே அது
மற்றைய பக்கத்துக்கு திரும்பிவிடுகிறது -அது
குப்பைக் கூடையுள் நிறைவேறாத ஆசைகளுடன் மரணித்துவிடுகிறது.
ஒவ்வொரு நாளும்,
வேலைத்தளம் தூண்டில் போட்டு இழுக்கிறது.
பிசாசுகள்
எந்த நாடாகிலும் ஆட்சிக்கான தலைவர்களை தீர்மானிப்பதில் எந்தப் பிசாசு நல்ல பிசாசு என மக்கள் முடிவுக்கு வந்து வாக்களிப்பதை இன்றைய ‘ஜனநாயகம்’ அமைத்துத் தந்திருக்கிறது. அது சாதாரண தேர்தல் தொகுதியிலும்கூட நல்ல பிசாசையே தீர்மானிக்குமளவுக்கு மக்களை இக்கட்டான நிலைமைக்குள் தள்ளியிருக்கிறது. ஜனநாயகத்தின் பெறுமதி அதுவாகியிருக்கிறது.
Continue reading “பிசாசுகள்”வருவதாயில்லை!
எனது கல்வி தகைமையைக் கேட்கிறாய்,
கொடுப்புக்குள் சிரிக்கிறாய்.
என்னருகில் நின்று உயரத்தைப் பார்க்கிறாய்,
நீ உயரம் என்கிறாய்
மயிரற்றுப்போன எனது தலையைப் பார்த்து
உனது முடியை கோதிவிடுகிறாய்.
பனி பொழிந்த நிலம்
வெண்முகில்களை சீவி
துருவலாய்க் கொட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
இலைகள் சருகுகளாய் உதிர்ந்து கொட்டியிருந்தபோது
மரங்கள் தமது அர்த்தத்தை இழந்திருந்தன – அப்போ
எனது கமராவை நான் உறைக்குள் புதைத்திருந்தேன்.
இப்போ உறைக்குள்ளிருந்து உருவி எடுத்தேன்.
இயக்கவாத மாவீரர் தினம்!
நவம்பர் 27 மாவீரர் கொண்டாட்ட நாள்!. மனிதர்களின் உயிரை மதித்தல் என்பது மிகப் பெரிய அறம். தன்னலத்தைத் தாண்டி பொதுநலனோடு சிந்தித்தல் என்பது மாற்றங்களுக்கான வித்து. அதை செயற்படுத்த முனைபவர்கள், அதற்காக தமது நலன்களை மட்டுமல்ல தமது உயிரைக்கூட அர்ப்பணிக்க முன்வருபவர்களில் பெரும் பகுதியினர் இயக்கங்களில் இணைந்தார்கள். அவர்களை நாம் கொண்டாடுவது தகும்.
Continue reading “இயக்கவாத மாவீரர் தினம்!”ஜெய் பீம் – சூழும் அரசியல்!
தமிழ்ச் சமூகத்துள் இன்று அதிர்வை ஏற்படுத்தியுள்ள ஒரு திரைப்படம் ஜெய் பீம் என்பதற்கு எழுந்திருக்கிற சர்ச்சைகள் ஓர் அசல் சாட்சி.
• உண்மை-புனைவு முரண்பாடு
• திரைப்படத்துறையின் பொதுப் போக்கு
• அரசியல் கட்சிகள் நடத்துகிற தேர்தலிய அரசியல்
• இழிவுபடுத்தல்கள்
• புனிதங்கள்
• காலம்-வெளி
என பல காரணிகள் இந்த சர்ச்சைகளை வடிவமைக்கின்றன.
ஜெய் பீம்
திரை விலக்கும் திரை
சூர்யாவின் நடிப்பிலும் ஜோதிகா-சூர்யா இணைந்த தயாரிப்பிலும் ஞானவேலின் திரைக்கதை இயக்கத்திலும் வெளியாகியிருக்கும் படம் ஜெய் பீம். எல்லோருமே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை திரையிலும், அதன்பின்னரான அவர்களது பேட்டிகளிலும் காணக் கிடைக்கிறது. அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகை மாற்றிப் போட்டு உண்மைக்கும், பேசப்படாதவற்றைப் பேசுதல் என்ற துணிபுக்கும் நெருக்கமாக பாதையமைத்திருக்கிற திரைப்படங்களில் ஜெய் பீம் க்கும் ஓர் இடமுண்டு. அதனால் திரைப்படம் குறித்து பேசப்பட வேண்டிய தேவை அதிகமாகிறது. மிக அதிகளவிலான நேரம்ச விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன. அதற்கு தகுதியான படம் அது. கொண்டாடப்பட வேண்டியது.
Continue reading “ஜெய் பீம்”யொஹானியின் பாடல்
யொஹானி!. இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் பாடகி. அண்மையில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல் அவருக்கே ஆச்சரியமூட்டக்கூடிய விதத்தில் இன்று 150 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை (views) தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இசைத்துறையில் அவரது இயல்பான ஈடுபாடும் முயற்சியும் ஒருபுறம் இருக்க, இன்றைய சமூகவலைத்தளங்களின் வீச்சு அவருக்கு சாதகமாக அமைந்த சந்தர்ப்பமும் சேர்ந்து அவரை திடீரெனத் தோன்றிய நட்சத்திரமாக ஒளிவீச விட்டுள்ளது. அதற்கு அவர் தகுதியானவர்தான் என்ற மதிப்பீட்டை -அவரது எல்லா பாடல்களையும் பார்க்கிறபோது- வந்தடைய முடிகிறது.
Continue reading “யொஹானியின் பாடல்”வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !
ஈழத்தில் சாதிய மனநிலை மீண்டும் வன்முறையை முன்னுக்குத் தள்ளி வீரியமடைவதை வட்டுக்கோட்டையில் 19.09.2021 நடந்த சாதிய ரீதியிலான தாக்குதல் நிரூபித்துள்ளது. வெறும் கையுடன் தமது அன்றாட வாழ்வை கூலித்தொழில் மூலம் ஓட்டிக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வேலைவெட்டியின்றி வெளிநாட்டுப் பணத்தில் சீவியம் நடத்தும் ஆதிக்கசாதி இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வாள்சுழற்றியிருக்கிறார்கள். அரை மணித்தியாலம் அந்தத் தெருவையே கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள்.
Continue reading “வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !”



