இருபதாம் நூற்றாண்டை கண்டுபிடித்தவன் !
Tesla எனப் பெரிடப்பட்ட மின்சாரக் கார் வீதிகளில் திரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட Tesla Motors நிறுவனம் 2008 இல் தனது முதல் -தனி மின்சாரத்தில் இயங்கும்- காரை பாவனைக்கு கொணர்ந்தது. “ரெஸ்லாவின் தூரநோக்கும் புத்திக்கூர்மையும் இன்றி இன்றைய எமது மின்சாரக் கார் சாத்தியமில்லை” என அந்த நிறுவனம் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.
யார் இந்த ரெஸ்லா ?
மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார், வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் என்றெல்லாம் பாடசாலையில் மனனமாக தீத்தப்பட்ட அறிதலோடு ஒரு பொதுமனிதஜீவியாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 19ம் நூற்றாண்டில் தொடங்கி 20 ம் நூற்றாண்டுக்குள் தொடர்ந்த இந்த கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான சர்ச்சைகளும் எமது பாடசாலை ஆசான்களை வந்தடையவில்லையா என்ற கேள்வி எழுகிறது. பரீட்சைக்கு வெளியில் ஒரு சிறிய அறிவுத் தூண்டலையாவது செய்ய அவர்களால் முடியவில்லையா என்ற வருத்தம் எழுகிறது.
Continue reading “நிக்கொலா ரெஸ்லா”