Dust in the eyes of the world.

ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களாலும் அடிப்படைவாதங்களாலும் சீரழிக்கப்பட்ட நாடு. போதைப்பொருள் சாம்ராச்சியமாக மனநிலைப்படுத்தப்படும் நாடு.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு 1979 இலிருந்து 1989 வரை நீடித்தது. 1992 ஏப்ரல்28 அன்று சோவியத் பொம்மை அரசான நஜிபுல்லாவின் அரசு அழிந்தொழிந்தது. அதுவரை அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்று பட்டுப் போராடிய முஜாகிதீன் கிளர்ச்சியாளர்களில் ஆக்கிரமிப்புக்கெதிரான போராளிகளாக இருந்த உண்மைப் போராளிகளின் பெரும்பகுதியினர் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்தனர். மற்றைய பகுதியான அதிகார வெறி பிடித்த குழுவினரோ உள்நாட்டுப் போரை ஆரம்பித்தனர்.

Continue reading “Dust in the eyes of the world.”