ஊரோவியம்

ஒரு கனவாவது கண்டுவிடவேண்டும்
என்
சிறுபருவ நாளொன்றை.
நாளும் பொழுதுமாய் அன்று நான்
இளந் து£ரிகை கொண்டு
வரைந்த
எம்ஊர்ச் சித்திரத்தை
இப்போதைய என் ஊர்சுற்றலாலும்
அழிக்கமுடியவில்லை.
பதினெட்டு ஆண்டுகளை
பனித்தேசத்தில் படரவிட்டு இப்போ
படர்ந்தும்போனேன்தான்.
ஆனாலும் எனது ஊர்
என்னிடம் ஓவியமானது.

Continue reading “ஊரோவியம்”