சேய்!
என்னைத் தண்டித்துவிடு
உனது புதைகுழியை
தென்னமெரிக்கக் காற்றில் விதைத்து
புரட்சியின் குறியீடாய்ப் போனவன் நீ.
உன்முன் நான் மண்டியிடுகிறேன்
என்னைத் தண்டித்துவிடு, நான்
ஓர் இலங்கையனாய்ப் பிறந்ததிற்காய்.
வருக 2004 !
இன்னொரு புதுவருட வரவும்
நிகழ்த்தப்பட்டாயிற்று
உடல்நல உளநல விசாரிப்புகள்
மட்டுமன்றி
சமாதானம் அமைதி என்றெல்லாம்
வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டுமாயிற்று.
ஊரோவியம்
ஒரு கனவாவது கண்டுவிடவேண்டும்
என்
சிறுபருவ நாளொன்றை.
நாளும் பொழுதுமாய் அன்று நான்
இளந் து£ரிகை கொண்டு
வரைந்த
எம்ஊர்ச் சித்திரத்தை
இப்போதைய என் ஊர்சுற்றலாலும்
அழிக்கமுடியவில்லை.
பதினெட்டு ஆண்டுகளை
பனித்தேசத்தில் படரவிட்டு இப்போ
படர்ந்தும்போனேன்தான்.
ஆனாலும் எனது ஊர்
என்னிடம் ஓவியமானது.
தெருவிழா
எங்கள் வீதியில் இடையிடையே
தெருவிழா களைகட்டும்
அதில்
குரங்குகள் சில வீதியில்
வலம் வருவது வழமையாகிற்று
மலர்களை கசக்கி உதிர்த்து
விசிறி நடந்தன ஒய்யாரமாய்.
மலர்களை, மலர்மாலைகளை எறிந்து
களித்தின்புற்றனர்
மனிதர்கள் சிலர்.
குதூகலம் என்றுமாய்
சிரிப்பு கோபம் கத்தல் நளினம்… என
தெருவெல்லாம் தனதினதாய்
பெருமைகொண்டாடின குரங்குகள்.
புயலதிகாரம்
அது ஒரு மாலைப்பொழுது
வானொலியின் புயல் எச்சரிக்கையின்மீது
நான்
தூக்கி வைத்திருந்தேன் அந்த
மாலைப்பொழுதை.
கருமுகில்களின் பேயசைவில்
மனசு அறுத்துக் கொண்டு
அலைந்தது.
புதியமாதவியின் ஹே…ராம்!
– கவிதைவரிகளினூடான ஒரு பயணம் –
என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி
முகவரி தொலைந்த
மனிதர்களுக்காகவே
என் கவிதை
பிறந்தது
வாழ்வின் மீதான எளிய பாடல்கள்
– ஓர் அறிமுகக் குறிப்பு
நதிகள் கல்லானதை
பறவைகள் அழுததை
அடர்ந்த காடுகள் சிறகசைத்துப் பறந்ததை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
முன்னைய கடவுள்கள் புதையுண்டதையும்
புதிய கடவுள்கள்
இருண்ட இரவில் ஆகாயத்திலிருந்து
உடல் நிர்வாணமாகவும்
உடல் கவசங்களோடும்
கடும் கோபமாகவும்
கடும் மகிழ்ச்சியாகவும்
இறங்கியதை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
…..
பழசின் புதுசு
தீயின் செந்நாக்கை நான்
தூசித்துத் துரத்திய நாட்களின் மீது
கடத்திவரப்பட்டேன்.
இருபத்தியிரண்டு ஆண்டுகள்
புத்தகங்களின் சாம்பலால்
தூசிப்படுத்தப்பட்டதாய் எம் அறிஞர்களும்
அலுக்காது சொல்லிக்கொண்டிருந்தனர்.
எரிபாடுகளின் குவியலில் எஞ்சிய
நூல்களும் களவாடப்பட்டிருந்தன.
போரறிந்த சமாதானம்
போர் கவிழ்ந்த எமது தேசத்தில்
தளபதிகள் உருவாயினர்
தத்துவவாதிகள் தோன்ற மறந்தனர் அல்லது
மறுக்கப்பட்டனர்.
வரலாற்றை
போராட்டம் நகர்த்திச் சென்றது
ஆனாலும் நாம்
அனுபவங்களும் சிந்தனைகளும்
சேர்ந்து நடக்க
தடைவிதித்தோம்.
பொழுதைத் தோய்த்தல்
நான் அநேகமாக நித்திரையாகிக் கொண்டிருந்தேன். நான் வாசித்துக் கொண்டிருந்த சிறுகதைத் தொகுப்பின் நான்காவது கதையை நான் வாசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். கையிலிருந்து புத்தகம் நழுவி தலையணையில் மெல்ல சாய்ந்துகொண்டது. அதன் போதையை நான் சுகித்திருக்க வேண்டும். கையில் புத்தகங்களை எடுத்தாலே இடையில் ஓர்; பக்கம் திறந்திருக்க நான் தூங்கிப் போய்விடுவதுண்டு. எழுத்து என்னில் ஊறுவதும் எழுத்தாளனிடமிருந்து நான் விடைபெற்று அதை நகர்த்தபவனுமாய்ப் போவேன். பின்னர் தூங்கிப் போய்விடுவேன்.