சொல்லத் தோன்றியது !

30 வருட கால ஆயுதப் போராட்டம், போர் என களேபரப்பட்ட ஒரு பூமியில் போரை புரட்டிப் போடுகிற போரிலக்கியமும் இல்லை. தத்துவ வளர்ச்சியும் இல்லை. சர்வதேச அளவில் அறியப்பட்ட விமர்சகர்களுமில்லை. சிந்திக்கத் தூண்டுகிற ஆய்வாளர்களுமில்லை.

Continue reading “சொல்லத் தோன்றியது !”

மரபின் காதலர்கள்

காதலா? கத்தரிக்காயா?

 

கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.

கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.

Continue reading “மரபின் காதலர்கள்”

மரபின் காதலர்கள்

காதலா? கத்தரிக்காயா?

கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.

கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.

Continue reading “மரபின் காதலர்கள்”

கவண்

ஒரு (மேற்குலக) அகதியின் மனநிலையை புரிந்துகொள்வதற்கு அகதியாக இருந்தால்தான் சாத்தியமா என எண்ணத்தோன்றுகிறது. அகதிவாழ்வை ஒரு வெறும் இடப்பெயர்வாக (அல்லது ஒரு பயணமாக) மட்டும் நோக்குகிற எளிமையான போக்கு சமூக ஆய்வாளர்களாக இருக்கிற தகுதியை ஒருவருக்கு இல்லாமலாக்கிவிடக் கூடியது.

Continue reading “கவண்”

பட்டாம்பூச்சி

…ச்செறியும் நாவல் !

papilon cover-tamil
கென்றி சாரியரின் (Henri Charriere) “பட்டாம்பூச்சி” நாவல் எனது புத்தக அலுமாரியில் தனது சிறகொடுங்கி குந்தியிருந்து பல வருடங்களாகியிருந்தது. “சூரிச் – வாசிப்பும் உரையாடலும் 12” சோலையுள் இந்தப் பட்டாம்பூச்சியின் பறப்பை காண நாம் விழைந்தோம். ஒரு தொகை பக்கங்களில்அது தன் சுவடுகளை மெல்லப் பதித்தபடி பறந்துகொண்டிருந்தது. பல இலட்சக்கணக்கான பிரதிகளிலும் பல்வேறு மொழிகளின் வரிகளுக்குள்ளாலும் அது ஏன் பறந்தது என எழுந்த கேள்விக்கு இன்னமும் என்னிடம் பதிலில்லை. நூலை வாசித்து உரையாடியுமாயிற்று. இன்னும் பதிலில்லை. ரா.கி.ரங்கராஜனின் மொழியெர்ப்பு நாவலின் உள்ளுடனை ஊடுருவ முடியாமல் ஓரமாய் நடந்துகொண்டிருக்கிறதா எனவும் எண்ணத் தோன்றியது. எப்படியோ வரிகளுக்கிடையால் புகுந்து நடக்க வேண்டிய பொறுப்பு இந்த எதிர் அம்சத்தை தாண்டிச் செல்ல வைத்தது.

Continue reading “பட்டாம்பூச்சி”

கக்கூஸ்

 

ஓர் ஆவணப்படம்.

 

kakkoos-2

சுவிஸ் சூரிச் இல் “வாசிப்பும் உரையாடலும்” என்ற தொடர் சந்திப்பு கடந்த இரு வருடகாலமாக நிகழ்த்தப்படுகிறது. நூல்களை (முக்கியமாக மொழிபெயர்ப்பு நூல்களை) வாசித்து பின் உரையாடுவது என முதிய இளைய சந்ததிகள் இணைந்து பயணிக்கிற பாதை இது. இதன் இணைப்பாக “திரையிடலும் உரையாடலும்” இதுவரை இரண்டு முறை நடந்திருக்கிறது. 07.05.2017 அன்று நடந்த இரண்டாவது திரையிடல் உரையாடலில் கக்கூஸ் ஆவணப் படமும் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

Continue reading “கக்கூஸ்”

வெட்கப்படுகிறோம் !

காதலர்கள் மிக இயல்பாக வீதிகளிலோ புகைவண்டியிலோ அதன் நிலையங்களிலோ கட்டியணைத்து முத்தமிடுவது இங்கு ஒரு சாதாரணமான நிகழ்வு. ஆரம்ப காலங்களில் அதை தமிழர்கள் “நொங்கு குடிக்கிறாங்கள்” என விழிப்பர். முத்தமிடுபவர்களைப் பார்த்து தாம் வெட்கப்படுவர். அந்த வெட்கத்துக்குள் காமம் ஒளிந்திருக்கும். ஒளித்துவைக்கப்படுகிற காமம் வக்கிரமாக கசிகிறதோ என எண்ணத் தோன்றுமளவுக்கு யோசிக்க வைக்கிறது.

சாதியப் போராட்டம்

– வெகுஜன அமைப்புகளும் முன்னுதாரணமும்.

 

(12.03.17 அன்று சுவிஸ் “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியில் நான் வைத்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டது.)

 

caste-pic

வெகுஜன அமைப்புகள் ஒரு சமூகத்தின் அசைவியக்கத்திலிருந்து தோன்றுகிறது. தனக்கான சுயத்தை உடையதாகவும் சுதந்திரமான இயக்கத்தை வேண்டிநிற்பதாகவும் குறித்த எல்லைகளுக்குள் தமது இலக்கை நிர்ணயிப்பதாகவும் இருக்கும். அது தொடர்ந்து செயற்படுவதோ, கலைந்போவதோ அதன் இலக்கைப் பொறுத்தது.

இலங்கையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை விடவும் ஒரு முன்னுதாரணமான போராட்ட வடிவமாகும். மக்கள் போராட்டங்களில் வெகுஜன அமைப்புகளின் பாத்திரத்தை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டுமெனில் அது இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்துதான் முடியும்.

Continue reading “சாதியப் போராட்டம்”

வரலாறு முக்கியம் அமைச்சரே !

“இரண்டாம் இடம்” (மொழியெர்ப்பு நாவல்)

மலையாள எழுத்தாளர் வாசுதேசன் நாயர் அவர்களால் எழுதப்பட்டது. குறிஞ்சிவேலன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார் மகாபாரதக் கதையின் மீதான ஓர் மறுவாசிப்பாக உருவாகிய நாவல் “இரண்டாம் இடம்”. மகாபாரதத்தில் அதன் கதைமாந்தர்கள் மீது சூட்டப்பட்ட ஒளிவட்டங்கள், புனிதங்கள் மனிதஜீவியிடமிருந்து மிதப்பாக அவர்களை நிலைநிறுத்துகிறது. இந்தப் புனிதங்களையும் ஒளிவட்டங்களையும் சிதைத்து அவர்களின் மனிதப் பாத்திரத்தை வெளிக்கொணருகிற வேலையை “இரண்டாம் இடம்” நாவல் செய்கிறது.

Continue reading “வரலாறு முக்கியம் அமைச்சரே !”

சப்ளினின் உலகம்

DSC00286
சுமார் 20 வருடங்களுக்கு முன் எஸ்.வி ராஜதுரை சுவிசுக்கு வந்திருந்தபோது சார்ளி சப்ளின் வாழ்ந்த வீட்டை நோக்கிய (300 கி.மீ) பயணத்தை மேற்கொண்டோம். அந்த வீடு மிக உயரமான மதிலுக்கு பின்னால் மறைந்திருந்தது. பெரும் மரங்கள் ஏதோவொன்றை பொத்திவைத்திருப்பது மட்டுமே தெரிந்தது. உள்ளே போக முடியாது. எதையும் பார்க்க முடியாது. வீடாகவே அது இருந்தது. எஸ்விஆருக்கு அது பொருட்டாக இல்லை. சார்ளி சப்ளின் நடந்த இந்த வீதியில் நானும் நடக்கவேணும் என்றபடி அங்குமிங்குமாக ஒருவித ஆகர்சிப்புடன் நடந்தார். அதை இப்போ அவர் பார்க்க நேர்ந்தால் ஒருவேளை சப்ளின் வாழ்ந்த அந்த வளவினுள் உருண்டுபுரளவும் கூடும்.
இருபதாம் நூற்றாண்டின் இந்த மாபெரும் மக்கள் கலைஞன் நம்மில் பலரையும் இவ்வாறேஆதர்சித்து நிற்கிறான்.

Continue reading “சப்ளினின் உலகம்”