2013 இல் பிரிட்டிஸ் சபையானது (British Council) பிரித்தானிய மக்களிடம் எடுத்த ஒரு கணீப்பீட்டின்படி முதலாம் உலக யுத்தத்தில் மேற்கு, கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஈடுபட்டதாக பலரும் நினைப்பது தெரியவந்தது. 17 வீதமானவர்கள் ஆசிய மக்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டதை தெரிந்து வைத்திருக்கின்றனர். 11 வீதமான மக்கள் ஆபிரிக்க மக்கள் ஈடுபடுத்தப்பட்டதை தெரிந்து வைத்திருக்கின்றனர். பிரித்தானியாவுக்காக இராணுவம் மற்றும் சேவைத்துறைக்காக எகிப்து, பிரான்ஸ், யேர்மனி, இந்தியா, இரசியா, துருக்கி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் இந்தப் போரில் பெறப்பட்டிருந்தது.
Continue reading “ஏமாற்று”நினைவழியா வடுக்கள்
சிவா சின்னப்பொடி அவர்களின் நூல்

சமூக ஒடுக்குமுறைகளான சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை, நிறவெறி என்பன குறித்தான குரல்களுக்கு ஓய்வு இல்லாமலிருப்பதானது அவற்றின் ஒடுக்குமுறையை பிரதிபலித்துக் காட்டுவதான ஒன்று. எனவே இவைகளைப் பற்றி பேசுவதை எதிர்ப்பது அல்லது இதை பேசுவதால்தான் அவை வாழ்கிறது என வைக்கப்படுகிற பொதுப்புத்தி கதையாடல்கள் அர்த்தமற்றது. அனுபவத்தை தமிழில் பட்டறிவு என்ற சொல்லால் சுட்டுவர். எமது அறிவுத்தளம் விரிவடைய வேண்டுமானால் அனுபவங்களை கேட்பதும் கிரகிப்பதும், அதை தர்க்க விஞ்ஞானத்துக்கும் கோட்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தி புரிந்துகொள்வதும் பயனுடையது.
இனி கடுப்பேத்த முடியாது!
கலைஞன் சண்முகராஜாவுடனான சந்திப்பு – சுவிஸ்
பாடசாலை மாணவனாக இருக்கும்போது இரவில் ரியூசன் முடிந்து சைக்கிளில் டபிள் வருகிறோம், நானும் நண்பனும்! பொலிஸ் மறிக்கிறது. கன்னத்தில் பலமாக அறைந்தான் ஒரு பொலிஸ். எனது தலைக்குள் வெள்ளிகள் தோன்றி மறைந்தன. நான் மண்ணுக்கு திரும்பி வந்தபோது நண்பனை சைக்கிள் ரியுப் இனுள்ளிருந்து காற்றை திறந்துவிட பணித்திருந்தான் மற்ற பொலிஸ்.
அன்று தொடங்கிய பொலிஸ் மீதான வெறுப்பானது இயக்க போராளிகளை தேடுதல் வேட்டை, கைது சித்திரவதை, விசாரணை, உளவுபார்த்தல் என பொலிஸ் களமிறங்கியபோது பன்மடங்கு கடுப்பாக்கிவிட்டிருந்தது. தவறுசெய்யாமலே பயப்பட வேண்டி வைத்த காக்கிச் சட்டை அரச வன்முறை இயந்திரத்தின் குறியீடாய், தகர்த்தெறியப்பட வேண்டிய ஒன்றாய், வெறுப்புக்குரிய ஒன்றாய் மாறிவிட்டிருந்தது. இப்போதும் சினிமாவில் காக்கிச் சட்டையைக் கண்டால் எனக்குள்ளிருந்து ‘ஒருவன்’ சிலிர்த்தெழுந்துவிடுவான்.
காந்தி
பெரியார் போலவே காந்தியும் மேலோட்டமாகவே எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அம்பேத்கார், பெரியார் போலவே காந்தியும் எனக்குப் பிடித்த தலைவர்களில் ஒருவர். வாழ்வு என்பது செயல்களால் மட்டுமல்ல செயல் மறுப்புகளாலும் அமைவது என நிகழ்த்திக் காட்டியவர் காந்தி என்பதால் போராட்டக் குணம்கொண்டவர்கள் காந்தியை வெற்றுச்சொற்களால் கடந்து செல்ல முடியாது. வலிமையான மைய அரசைவிட தன்னிறைவான கிராமங்களை உருவாக்குவது பற்றி பேசிய காந்தி எனக்கு முக்கியமானவர்.திணிக்கப்பட்ட ஒழுங்குகள் அச்சம் உள்ளவரைதான் நிலைக்கும் என்ற காந்தி முக்கியமானவர். நாம் கீழானவர்களாக உணராதபோது ஆள்பவர்கள் நமக்கு மேலானவர்களாக தம்மை உணர முடியாது என்ற நுண்ணரசியலை வெளிப்படுத்திய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். தமக்குள் விடுதலை அறத்தை கொண்டிராத தனிமனிதர்களும் சமூகமும் அரசியல் விடுதலையின் வழியாக எதனையும் பெற்றுவிட முடியாது என்பதை வௌ;வேறு வடிவங்களில் விளக்கிக் காட்டிய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். காந்தியத்தை கோட்பாட்டுப் புரிதலுக்கு உட்படுத்தி அதை ஏற்கவும், எதிர்க்கவும், கட்டவிழ்க்கவும் முடியாத அறிவுச் சோம்பேறித்தனத்திற்கு ஒப்பீட்டுப் பதிவுகள் ஒரு கேடு. பிரேமின் “காந்தியைக் கடந்த காந்தியம்” நூலை இவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
வெறுமை
நிலாவொளியை இரகசியமாய் முத்தமிட்டு
கிறங்கிப் போய்விடுகின்ற
கடல் அலைகளின் கள்ள அசைவுபோல்
அவளின் தோல் சுருக்கங்களுக்கு இடையே
வாழ்ந்துபட்ட அனுபவம் துலங்கிக்கொண்டிருந்தது.
தன்னைத் தாங்குவதில் மூன்றாவது காலாய்
ஒரு கைத்தடியைத் தன்னும் அவள் மறுத்திருந்தாள்.
அனுபவத்தின் பாரம் அவளை
மெல்ல நடந்துகொள்ள அனுமதித்தது.
காணும்போதெல்லாம்,
ஒரு புன்னகையை அவள் சிந்தியபடி
எனை எதிர்கொள்வாள்.
எனது கைமணிக்கட்டை பிடித்து பேச தொடங்குவாள்.
எனது அவசரம் மணிக்கட்டின் பிடியை கடிந்துகொள்வதால்
செல்லுபடியாகிற ஒரு காரணத்தோடு
ஒவ்வொரு முறையும் அவளை கடந்து செல்வேன்.
என்றாவது ஒருநாள்
அவளுடன் ஆறஅமர இருந்து பேச வேண்டும்.
அவள் காட்டுகிற இன்னொரு உலகத்தை தரிசித்துவிட வேண்டும் என்ற
கனவு எனது அறிவின்மையால் கலைந்து போனது.
அவள் தனியாக வாழ்ந்து கழித்த அறை
வெறுமையாய்க் கிடந்தது.
ஒரு கலைஞனும் நாங்களும்
பண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு

தமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.
இனி.. ?
VDO
https://www.srf.ch/play/tv/popupvideoplayer?id=e3911c84-38a2-42e7-b456-d9c31f4de65d

இந்த கடவுளின் தூதனுக்கு (Pastor) வயது 62. தமிழன். பெயர் வில்லியம்ஸ். தமிழுலகை உய்விக்க அவன் GGMCI என்ற Tamil Evangelical Church இனை Bern (swiss) இல் ஆரம்பித்து தனது சேவையைத் தொடங்குகிறான். அடங்காத சேவை மனசு அவனுக்கு. தனது கிளைகளை யேர்மனி, பிரான்ஸ், கொலன்ட், நோர்வே போன்ற நாடுகளிலும் படரவிட்டு அருளொளிச் சோதியை பாவப்பட்ட அகதித் தமிழருக்காக பரவவிடுகிறான். இந்த ஐந்து நாடுகளிலும் 25 தேவாலயங்களை ஆண்டவன் அவனிடம் ஒப்படைக்கிறான். இளம் பெண்கள் உட்பட பல தமிழ் மாந்தர்கள் தேவதூதனிடம் தம்மை ஒப்புக் கொடுக்க திரள்கின்றனர்.
என்ன செய்வது !
அண்மையில் எதிர்பாராதவிதமாக ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை சட்டென அடையாளம் கண்டுவிட்டார், நம்மட தலையில் மயிர் போனபின்னும்!. எனக்கு அவரை தெரியவில்லை. “உங்களை நான் 28 வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறேன். என்னைத் தெரியுதா” என கேட்டார். “தெரியவில்லை” என்றேன். “ஞாபகமிருக்கா, உங்கள் நண்பர் எக்ஸ் (புனைபெயர்) இன் கல்யாணவீட்டில் பிரச்சினை எழும்பினது. தாலி கட்டாமல், ஐயர் இல்லாமல் செய்த கல்யாணம். பரிசுகள் எதுவும் கொண்டுவரக்கூடாது என்று அறிவித்து நடந்த கல்யாணம். பிரச்சினைப்பட்டது நாங்கதான். உங்கட நண்பர் என்ரை உறவினர்” என்றார்.
இப்ப தெரியுது என்றேன். தமிழ்க் கலாச்சாரத்தின் மீது தீராக் காதல் கொண்ட அவருக்கு அந்த சம்பவம் நேற்றுப்போல இருந்திருக்கலாம். நமக்கெல்லாம் கடந்து சென்றுவிட்ட சம்பவங்கள் அவை. “நான் செய்தது சரியானது” என்று வேறு இப்பவும் அவர் ஒப்ப, நான் புன்னகையை மட்டும் பதிலாய் அளித்தேன்.
வெண்ணிறக் கோட்டை
– ஓர் அலைக்கழிப்பு
(ஓரான் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை” என்ற நாவல் வாசிப்பும் உரையாடலும்-23 இல் 01.09.19 அன்று உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நாவல் குறித்து பல்வேறு பரிமாணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் நான் முன்வைத்த கருத்துகளின் விரிவு இப் பதிவு)

ஓரான் பாமுக் இன் ஆரம்பகால நாவல்களில் ஒன்று வெண்ணிறக் கோட்டை. ஓட்டோநாம் துருக்கிய சாம்ராஜ்யம் 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவிய பெரும் சாம்ராஜ்யம் 15ம் நூற்றாண்டிலும் பின்னர் 16ம் நூற்றாண்டிலும் அது வெனீஸ் மீது போர் புரிந்தது. இந்த இரண்டாவது காலகட்டத்தில் தொடங்கி, போலந்தின் வெண்ணிறக் கோட்டையை கைப்பற்ற நடந்த போர்வரையான காலப் பகுதியுள் வைத்து புனையப்பட்ட நாவல் இது.
சும்மா
நான் படித்த பாடசாலைக்கு சுமார் 100 மீற்றருக்குள் கடலில் அலைகள் ஓயாது நீந்திக்கொண்டிருக்கும். அவை நீர்த்திவலைகளை பாறைகளின் மேல் அள்ளி வீசியபடி இருக்க, நீர்மேவி வரும் காற்று சிலிர்த்தெழுந்து அலையின் ஓசையை எனது பாடசாலைவரை காவிவரும். எமது இரசனைக்காக ஏங்குவதுபோல் அலைகள் மூச்செறிந்து அழைக்கும் ஓசைக்கு எதிர்த்திசையில் நடந்து பக்கத்து கோவிலின் தேர்முட்டிப் படியில் எமது மதிய உணவை உட்கொள்வோம். மூடி தனியே அகலா அந்த சதுர பிளாஸ்ரிக் பெட்டியை அரசமர சலசலப்புக்குக் கீழே வாசனையை முகரத் துடிக்கும் காற்றினை விலத்தி, திறந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம்.