சுவிஸ் வரலாற்று ஆசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் உக்ரைன்- ரசிய போரின்போது ஜேர்மனி-ரசிய முரண்பாட்டை விளக்கும் போது ஒரு வசனத்தை பாவித்திருந்தார். அமெரிக்கா அதிகாரம் செலுத்தும் நாட்டோவிலுள்ள ஜேர்மனியானது அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையில் எங்கே நிற்கும் என பார்த்தால் அது அதன் மத்திய புள்ளியிலிருந்து ரசியா பக்கம் சாய்ந்ததாக இருக்கும் என்றார். அந்த அரசியல் கருத்து மீது இன்னொருவருக்கு வேறு அபிப்பிராயங்கள் இருக்கும். அதல்ல நான் சொல்ல வந்தது. (அமெரிக்கா பக்கமா ரசியா பக்கமா என்பது போன்ற) இருமை நிலைப்பாடுகள் அல்லது சிந்தனை முறை பற்றியது. அவரது அந்த கூற்றில் மாறுபட்ட அரசியல் அபிப்பிராயங்களின் பன்முகத்தன்மையான “உரையாடல்” ( dialogue) வெளியை விட்டுவைக்கும் சொல்லாடலை குறிப்பிடுகிறேன். இங்கு சாதாரண சமூகத்திடமும் இந்த சிந்தனை முறை இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
Continue reading ““இருமை” சிந்தனை முறை”Category: விமர்சனம்
நான் உண்மையின் ஆதரவாளன்!
Dr. Gabor Mate
Continue reading “நான் உண்மையின் ஆதரவாளன்!”ஹங்கேரியில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த “கபோர் மற்றே” (Gabor Mate) அவர்கள் “கொலோகாஸ்ற்” படுகொலையிலிருந்து தப்பிய ஒரு 5 மாதக் குழந்தை. 1944 இல் பிறந்த அவர் இப்போ கனடாவில் உளச்சிகிச்சை வைத்திய நிபுணராக இருக்கிறார். இது குறித்த தனது ஆய்வுகளின் அடிப்படையில் இதுவரை 5 நூல்களை எழுதியுள்ளார். அவரது குடும்பம் கொலோகாஸ்ற் படுகொலைக்கு இரையான தாக்கம் அவர் இத் துறையை தேர்ந்தெடுக்க வைத்ததோடு அதற்குள் ஆழமாகப் போகவும் செய்தது. அவர் ஒரு அரசியலாளர் அல்ல. இன்றைய இஸ்ரேல்-காஸா நிலைமைகள், அதன் பின்னணி குறித்து முன்வைக்கும் அவரது கருத்துகள் வேறொரு தளத்தில் இருப்பதால் இதை மொழிபெயர்த்திருக்கிறேன்.
Russell Brand அவர்கள் நடாத்தும் இணைய ஒளிபரப்பில் Under The Skin என்ற நிகழ்ச்சியில் Dr.Gabor Mate அவர்கள் முன்வைத்த கருத்துகள் இவை.
போட்டுத் தள்ளுதல் !
கனடாவில் காலிஸ்தான் தலைவர் கொலை -அரசியல்
“போட்டுத் தள்ளுவது” என்ற வார்த்தை ஈழ அரசியல் சூழலிலிழுந்து தமிழ்ச் சினிமாவுக்குள் நுழைந்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. ‘போட்டுத் தள்ளுவது’ என்பது அரசியலில் ‘இனந்தெரியாதோரால்’ கொல்லப்படுதலுடன் தொடர்புடையது. ஒரு கொலையை செய்வதையும்விட தடயங்கள் துளியளவும் இல்லாமல் அதை செய்வது என்பது முதன்மையாக இருக்கும். இதில் கொலை என்பது இரண்டாம் பட்சமாகிவிடும். தடய அவதானம் முதலாம் பட்சமாக இருக்கும். அவை தமது தரப்பில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திவிடாதபடி கவனம் கொள்வதால் அவ்வாறு நிகழ்த்தப் படுகிறது.
Continue reading “போட்டுத் தள்ளுதல் !”Enough is Enough !
image : Spiegel.de
நீஜரில் யுரேனியம், தங்கம் போன்ற கனிம வளங்களை அகழும் பிரான்ஸ் கம்பனியைத் தடைசெய்த நீஜர் அரசு தாமே உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது. யுரேனியத்துக்கான ஏற்றுமதி விலையை உலக சந்தையின் பெறுமதி “200 யூரோ/கிலோ” க்கு உயர்த்தியுள்ளது. இது கனடாவின் யுரேனிய ஏற்றுமதிப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்ட விலை நிர்ணயம் ஆகும்.
Continue reading “Enough is Enough !”ஏன் தடுக்கிறது மேற்குலகம்?
image : Al Jazeera
மேற்கு ஆபிரிக்காவின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகளை மேற்குலகின் கண்களினூடாகப் பார்த்தால் அந்த கவிழ்ப்பு ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஓகே. இவர்கள் முன்வைக்கிற ஜனநாயகப் பெறுமதி என்ன. ஆபிரிக்காவை காலனியாக்கி நூற்றாண்டு காலமாய் வளங்களை கொள்ளையடித்துவிட்டு, பெயருக்கு சுதந்திரம் வழங்கியபின் அந்தக் கொள்ளையை தொடர நவகாலனியத்தை கையிலெடுத்தனர். அதற்கான பொம்மை ஆட்சியாளர்களை ஆட்சிக்கட்டிலில் இருத்துவதற்கு அவர்கள் செய்த திருகுதாளமெல்லாம் அவர்களின் எந்த ஜனநாயகப் பெறுமதிக்குள் உள்ளடங்குகிறதோ தெரியவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களை இராணுவம் தூக்கியெறிந்து ஜனநாயகத்தை சாய்த்துவிட்டதாக பொங்கியெழும் மேற்குலக ஜனநாயகப் பெறுமதியானது எண்ணற்ற உதாரணங்களை காட்ட முடியும் என்றபோதும், ஒரு உதாரணமாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சதாம் குசைன் அவர்களை வீழ்த்தும்போது விடுமுறையில் சென்றுவிட்டதா என்ன.
Continue reading “ஏன் தடுக்கிறது மேற்குலகம்?”நைஜரின் ஒளிரும் யுரேனியம்
நைஜர் (Niger) என்ற நாடு நைஜீரியா, சாட், அல்ஜீரியா, மாலி, புர்கீனோ பாஸோ, லிபியா, பெனின் நாடுகளுடன் எல்லையைக் கொண்டது. 27 மில்லியன் சனத்தொகை உள்ள நாடு நைஜர். யுரேனியம், தங்கம், பிளாற்னம் போன்ற இயற்கை வளங்களைக் கொண்ட நாடு அது. ஆனால் அதை அவர்கள் அனுபவித்ததில்லை. வறுமையைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யுரேனியத்தில் இயங்கும் பிரான்ஸின் அணுஉலைகள் பிரான்சுக்கான மின்சாரத்தை மட்டுமல்ல, ஜேர்மனி உட்பட சில ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி மின்சாரத்தையும் உருவாக்குகின்றன. பிரான்சுக்கான தேவையின் மூன்றிலொரு பகுதி மின்சாரத்தை நைஜர் யுரேனியம் வழங்குகிறது. பிரான்ஸ் முழுவதும் மின்சாரம் ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்க, நைஜரில் 20 வீதமளவுக்குக்கூட மின்சாரம் பூத்ததில்லை. யுரேனியத்தை அகழ்ந்து கொண்டுவரும் பிரான்சின் ஈபிள் கோபுரம் இரவில் வால்நட்சத்திரமாக ஒளிர்ந்திருக்க, யுரேனியத்தை புதையலாக வைத்திருக்கும் நைஜர் நிலம் இரவில் சிறிய ஒளிக்கீற்றால் மட்டும் கீறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Continue reading “நைஜரின் ஒளிரும் யுரேனியம்”பிரான்ஸை உலுக்கும் தீ
கலவரமும் காட்சிப் பிழையும்!
பிரான்சில் கடந்த செவ்வாயன்று இளைஞன் நகேல் கொல்லப்பட்டதிலிருந்து தோன்றிய கலவரம் பாரிஸின் புறநகர்ப் பகுதிகளை மட்டுமன்றி 20 க்கு மேற்பட்ட வேறு நகரங்களுக்கும் பரவியிருக்கிறது. அது நேற்று இரவு சுவிற்சர்லாந்தின் லொசான் நகரத்திலும் அதே வடிவில் வெளிப்பட்டது. ஆனாலும் அது கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக சுவிஸ் பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்தக் கொலைக்கு எதிராக பெல்ஜியத்தில் கடந்த 30ம் தேதி அமைதியான பெரும் ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.
Continue reading “பிரான்ஸை உலுக்கும் தீ”ஹிப்பி
1970 களில் எமது விடலைப் பருவத்தில் ஹிப்பி பற்றிய செய்திகளை வாசித்தும் கேட்டும் அறிந்தேன். அவர்களை சடை வளர்ந்த தலையுடன், கசங்கிய உடையுடன், வாழ்க்கை வெறுத்த மனிதர்களாக, போதைப் பொருள் பிரியர்களாக வெள்ளைநிறத்துடன் ஒரு தோற்றத்தை வரைந்துகொண்டேன். பின் யாழ் நகரில் அந்த மனவரைவுத் தோற்றத்தில் ஒருசிலரை அப்படி பார்த்தேன். அவர்கள் ஹிப்பிதானா இல்லையா என எனக்கு இப்போதும் தெரியாது. 80 களின் ஆரம்பத்தில் கொழும்பில் பார்த்த உருவம் எனது மனவரைவை தோற்றத்தில் மட்டும் செழுமைப்படுத்தியிருந்தது. பின்னரான காலத்தில்தான் அவர்களின் எதிர்க் கலாச்சார எழுச்சி பற்றி அறிந்துகொண்டேன்.
Continue reading “ஹிப்பி”தெரியாமல் போய்ச்சு!
நெடுமாறனின் பிரபாகரன் கதை
- இப்போ 2023. இடையில் 14 ஆண்டுகள். தலைவருக்கு இப்போ நரைவிழுந்திருக்கிறது. தாடி வளர்ந்திருக்கிறது. விடுதலைத் தீயை அவர் ஏந்தியிருக்கிறார். வெளியுலகிலிருந்து துண்டித்த கூட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வருகிறார். சரியான தருணம். அதென்ன சரியான தருணம் என நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். தலைவர் வருவார். திட்டத்தை அறிவிப்பார். தமிழீழம் கிடைக்கும். தமிழீழப் படம். இயக்குநர் யார் என்பதும் நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். ஊடகங்களெல்லாம் அரைச்சு அரைச்சு தீவனமாக எமக்கு வழங்குகிறது. நாம் எவளவு பெரிய முட்டாள்கள் என நெடுமாறன், காசி கோஸ்டியும் ஊடகங்களும் நினைத்திருக்கலாம். இருக்கட்டும்.
புதியதோர் உலகம்
– உள்ளும் புறமும்
புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 இல் தீப்பொறி குழுவினரால் வெளியிடப்பட்டது. பின்னர் இந் நூலை பிரதிகள் செய்து, தானே அதை நூலாகக் கட்டி தோழர் சபாலிங்கம் பாரிஸ் இல் விநியோகித்தார். இதன் இரண்டாவது பதிப்பு 1997 இல் வெளிவந்தது. இதை தீப்பொறிக் குழுத் தோழர்கள் விடியல் பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருந்தார்கள். (புத்தக வடிவமைப்பை நான் செய்திருந்தேன்). இப்போ மூன்றாவது பதிப்பாக தமிழகத்தின் சிந்தன் புக்ஸ் 2023 இல் வெளியிடுகிறது. 37 வருட காலத்தின் பின்னும் இந்த நூல் மறுபதிப்பாக வருவது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இலக்கியத் தளம் என்பதைவிட அரசியல் தளத்தில் அதன் பேசு பொருள் இப்போதும் பொருந்துவனவாக இருப்பதே அதற்குக் காரணம்.
Continue reading “புதியதோர் உலகம்”







