சீற்றம்

சிவகாமி அவர்களின் உரையாடல் பல விமர்சனங்களை ஏற்படுத்தியிருப்பது ஆரோக்கியமான ஒன்று. தேவையானதும்கூட. அதே நேரம் அவரின் அந்த உரையாடல் காணொளிக்கு வந்திருக்கும் சில பின்னூட்டங்கள் பல அருவருப்பூட்டுபவையாக உள்ளன என்பதை கண்டுகொள்ளாமல் விடமுடியாது. அந்தவகைப் பின்னூட்டங்கள், நிலைத் தகவல்கள் தமிழ்த் தேசிய வெறியர்களினதும் ஒழுக்கவாதிகளினதும் “மனவளத்தை” வெளிப்படுத்துகின்றன.

Continue reading “சீற்றம்”

சித்திரம் பேசுதடி..!

இலங்கை அரசியல் மனநிலையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் தமிழின உணர்வாளர்கள் மட்டுமல்ல, தமிழக புத்திஜீவிகளும் எந்தளவு புரிந்திருக்கிறார்கள் என்பது தொடர்ந்து வரும் கேள்வியாக உள்ளது. புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த பிரதேசங்களில் நிழல் ஆட்சி புரிந்தபோது, ஆகா ஓகோ என உணர்வாளர்கள் (திரைப்பட இயக்குநர்கள், ஓவியர்கள், புத்திசீவிகள் என) தமிழகத்திலிருந்து படையெடுத்தவர்கள் அந்த நிழல் ஆட்சி பற்றி சித்திரம் வரைந்து பெருமிதப்பட்டனர். மக்கள் தரப்பிலிருந்து எதையும் கண்டுகொள்ளத் தவறினர்.

Continue reading “சித்திரம் பேசுதடி..!”

“செப்ரம்பர் பதினொன்று” வரலாற்று அதிர்ச்சி

இரட்டைக்கோபுரத்தாக்குதல் மீதான மதிப்பீடுகள் வெறுமனே, கொல்லப்பட்ட அப்பாவி மக்களோடு அல்லது பௌதீக அழிவுகளோடு அல்லது தீமை என்ற கருத்தியலோடு மட்டுப்பெற முடியாதவை. அது ஒரு குறியீட்டின் மீதான தாக்குதல். அதாவது உலக அதிகார ஒழுங்கின் மீதான, கேள்விகேட்கப்பட முடியாத அதிகார மையத்தின் மீதான -ஓர் எதிர்ப் பயங்கரவாத- தாக்குதல். அதனாலேயே உலக அதிகார சக்திகள் பதறிப் போயின. அந்த அதிர்வுகள் இன்னமும் அமைதியுறவில்லை.

Continue reading ““செப்ரம்பர் பதினொன்று” வரலாற்று அதிர்ச்சி”

நிழல் Hero ?!

யன்னல்

பாடசாலை விடுமுறை நாட்கள். இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களில் 13 வயதுக்கு மேற்பட்டோர் “விடுமுறை வேலை” (Ferien Job) என கைச்செலவுக்கோ விடுமுறைச் செலவுக்கோ அல்லது ஏதாவது பொருள் வாங்குவதற்கோவென ஓரிரு வாரம் வேலைக்கு புறப்படுவர். எனது வேலையிடம் ஒரு தொழிற்சாலை. பெரிசுபெரிசாய் யன்னல்கள் உயரமாகவும் பதிவாகவும் ஒருதொகை இருக்கிறது. அதை துப்பரவு செய்வதில் ஒருசில மாணவிகள் ஈடுபட்டிருந்தனர்.

Continue reading “யன்னல்”

ஒழுங்கைக்குள்ளால் வரும் ஒழுக்கவாதம்

மொரட்டுவ பல்கலைக் கழகம். கட்டடக் கலை பட்டப் படிப்புக்காக யாழ்ப்பாண தமிழர்கள் தரப்படுத்தல் முறையைத் தாண்டி மிக அதிக புள்ளிகளை தாங்கியபடி வருவர். சிங்கள மாணவர் குறைந்த புள்ளிகளோடு வந்தவர்கள் பலர் இருப்பர். நம்மடை ஆட்களின் ஒரு ஏளனப் பார்வை பிறகெல்லாம் தவிடுபொடியாகிவிடும். காரணம் சிங்கள மாணவர்களின் சிருஸ்டிப்புத்தன்மை அவர்களின் டிசைனில் எமது எல்லைக்கோடுகளை முறித்துப் போட்டுவிடும். திருகோணமலை மட்டக்களப்பு போன்ற இடங்களிலிருந்து வரும் தமிழ் மாணவர்களும் தமது சிருஸ்டிப்பில் யாழ் மாணவர்களை விலத்தி முன்னே சென்றுவிடுவர். அவளவு கட்டுப்பெட்டித்தனமான இறுகிப்போன யாழ் மனநிலைக்குள் புள்ளிகள்தான் பொரித்துக் கொண்டிருக்கும். 

உனக்கென்ன லூசோ !

இன்று சனிக்கிழமை. மாலை நேரம். வழமைபோல் எனக்கு லீவு. நானும் மயிலனும் வைன் குடித்துக் கொண்டிருந்தோம். மைலன் பக்ரரியிலை என்னோடை வேலைசெய்யிறவன். வழமையாக மே மாதம் அதுவும் நடுப் பகுதியும் தாண்டிவிட்டது. நல்ல வெயில் எறிக்க வேணும். ஆனால் ஒரே மழை. இரண்டு கிழமையாக ஒரே மழை. குளிர்வேறை. அதாலைதான் வைன். இல்லாட்டி பியர் போத்தலோடை இருந்திருப்பம். 

Continue reading “உனக்கென்ன லூசோ !”

புகலிட அரசியலின் முளைப்பு

இலண்டனில் நடந்துகொண்டிருக்கும் 40வது இலக்கியச் சந்திப்பில் சாத்திரி அவர்கள் புகலிட அரசியல் போக்கு என்பது பற்றி பேசினார். ஆரம்பத்தில் ஒரு கட்டத்தில் அரசியலற்ற சமூகமாக இது இருந்தது எனவும் 90 களின் ஆரம்பத்தில்தான் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்ததாகவும். அது சுயநலத்தின் அடிப்படையில், தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் இருந்திருக்கலாம் என்ற கருத்துப்பட கூறியிருந்தார். புலிகள் இயக்கம்தான் -சரியோ தவறோ- புலம்பெயர் தமிழ் மக்கள் அரசியல்மயப்பட காரணமாக இருந்து, அது தமிழர் என்ற அடையாளம் தேடும் அரசியல் என்பதாகவும் குறிப்பிட்டதாக (காணொளி மூலம்) நான் விளங்கிக் கொண்டேன். 

Continue reading “புகலிட அரசியலின் முளைப்பு”

சாத்திரியின் வரவு எந்தத் தீட்டை உண்டுபண்ணிவிட்டது?

இலக்கியச் சந்திப்பு பற்றிய வியாக்கியானங்கள் அவரவர் மொழியில் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் பொசிற்றிவ் அம்சங்களை மறுதலிக்க முடியாதது ஒருபுறம் இருக்க, அதன் வேலைமுறைகள் பற்றி கேள்விகள் இருக்கின்றன. உரையாடல் என்று வருகிறபோதுகூட இந்த 24 வருட காலப் பகுதியில் நாம் எவ்வாறான சனநாயகப்பட்ட முறையில், தொனியில், உடல்மொழியில் விவாதிக்கப் பழகியிருக்கிறோம். முரண்பாடுகளை கையாளப் பழகியிருக்கிறோம்.

Continue reading “சாத்திரியின் வரவு எந்தத் தீட்டை உண்டுபண்ணிவிட்டது?”

தமிழக மாணவர் போராட்டம் – ஒரு குறிப்பு

தமிழக மாணவர் போராட்டங்களைப் பற்றிய குறிப்பை எழுதுவது என்பது சங்கடங்களுக்கு உட்பட்ட ஒன்றுதான். என்றபோதும் எழுதியாக வேண்டும். 

 இனப்படுகொலையாளர்களை சர்வதேச விசாரணை மன்றத்தில் நிறுத்து! என்ற கோரிக்கை முக்கியமானது. காலப் பொருத்தம் வாய்ந்தது. தமிழக மக்களிடமிருந்தான ஒரு தார்மீக ஆதரவை சரியாகப் புரிந்துகொண்டது என்பதையும் பதிவுசெய்யலாம்.

Continue reading “தமிழக மாணவர் போராட்டம் – ஒரு குறிப்பு”