குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்

ali-young and old

கிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது  Pugilism என அழைக்கப்பட்டது.

ஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.

Continue reading “குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்”

The struggle is my life – நெல்சன் மண்டேலா

சிறைக் கொடுமையிலிருந்து வெளிவருதில் தமது தனிப்பட்ட வாழ்வை அல்லது தமது இருப்புகளை முதன்மைப்படுத்தி செயற்படும் மனித வாழ்வியல் விருப்பை மண்டேலா எடுத்துக்கொண்டவரல்ல. போராளியாகவே உள்ளே போனார். போராளியாகவே வெளியே வந்தார், அதுவும் நிபந்தனைகள் எதுவுமற்று. போராட்ட வாழ்வில் தம்மை நம்பி வந்த மக்கள் இழந்தவைகளுக்கு அவர் இவ்வாறுதான் பொறுப்பெடுத்தார். பதிலளித்தார். அவர் உண்மைப் போராளியாய் நிமிர்ந்தது இவ்வாறுதான்.

nelson mandela-95.

Continue reading “The struggle is my life – நெல்சன் மண்டேலா”

புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்

இலக்கியச் சந்திப்பு சம்பந்தமான உரையாடல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில் நடந்து சர்ச்சைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்த சர்ச்சையை உடனடிக்; காரணங்களால் வியாக்கியானப்படுத்துவது முழுமையடையாது. அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் பார்த்தாகவேண்டியுள்ளது. இதனடிப்படையில் எனது பார்வையில் இதை ஒரு பதிவாக எழுதலாமென எடுத்த முயற்சிதான் இது.

Continue reading “புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்”

முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்

[24-Aug-2009]

வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு. இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது.

Continue reading “முள்ளிவாய்க்கால் கைமாற்றிய வன்னி மக்கள்”

இரத்தம் தோய்ந்த வெற்றியும் மைபூசிய மசிரும்

[24-May-2009]

இலங்கை அரசின் ஜனாதிபதி கறுப்பு மயிருடனும் கறுப்பு மீசையுடனும் கம்பீரமாய் வருகிறார். ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கும் அவசரத்தில் விமானத்திலிருந்து இறங்கிவருகிறார்.  இதுவரை மண்ணைப் பிரிந்து அகதியாக இருந்ததுபோன்ற, அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு மண்ணில் முதன்முதல் காலடி வைப்பதுபோன்ற ஒரு பாவனையில் மண்ணை தொட்டு வணங்குகிறார். அவர் பரபரப்பாக இருந்தார். விமான ஓடுபாதையில் அமைச்சர் பட்டாளம் குதூகலமாய் வரவேற்றுக் கொண்டிருந்தது…

Continue reading “இரத்தம் தோய்ந்த வெற்றியும் மைபூசிய மசிரும்”

அதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்

[30-Mar-2009]

“யாழ்ப்பாணத்திலை உங்கடை சனத்துக்கு நான் ஒரு பாடம் படிப்பிக்கிறன். நான் வித்தியாசமானவன். நான் சந்திரிகா போலை இல்லை…” இது வீதிச்சண்டியன் ஒருவனின் வாக்குமூலமல்ல. சபிக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியின் குரல். “நான்தான் உன்ரை செக்குரிற்றியை வாபஸ் பெற்றனான். உன்ரை இடத்துக்கு உனக்குப் பாதுகாப்புத்தர ஒருத்தரும் வரமாட்டாங்கள். போய் பிரபாகரனிட்டை கேள் உனது பாதுகாப்பை. காட்டுச் சட்டங்களைப் புகழ்ந்துகொண்டிருக்கிறவையள் உங்கடை ஆக்கள்…” நாட்டுச் சட்டங்களை கையில்வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் உரையாடல் இது.

Continue reading “அதிகாரத்தின் மீறலும் ஊடக சுதந்திரத்தின் இருப்பும்”

அரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல்

[16-Mar-2009]

இலங்கையின் அரசியல் இன்னொரு சுற்றில் வந்திருக்கிறது. ஆயுதத்தைத் தூக்கிய கைகள் கும்பிடு போட்டு பெருந்தேசியக் கட்சியில் காட்சியளிப்பதுதான் அது. இனவாதம் என்பது பெருந்தேசிய இனத்தால் சிறுபான்மை மக்களின்மேல் பிரயோகிக்கப்படுவது மட்டுமல்ல.சிறுபான்மை இனத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் அது முழுமையடைகிறது. வீரியமாகச் செயற்படுகிறது. டக்ளஸ் தொடக்கம் கருணா வரையிலான இயக்கத் தலைமைகள் இன்றைய பெருந்தேசிய இனக் கட்சிகளில் காட்சிதருவதை நாம் இந்தத் தளத்தில் வைத்துப் பார்க்கமுடியும். இதை இன்னொருவகையில் சொல்வதானால் பேரினவாதம் புதிய பரிமாணத்தை எட்டுகிறது என்பதே அது.

Continue reading “அரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல்”

குண்டுகளுக்கு ஓடிக்கொடுக்கும் வன்னி மக்களும்

 குண்டுச்சட்டி அரசியலும்

புலிகளின் இறுதிக் குறுகிடமாய்ப்போயுள்ள முல்லைத்தீவை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக இலங்கை இராணுவம் அறிவித்து பல வாரங்களாகிவிட்டது. இடமிடமாய்ப் பெயர்ந்த மக்களும் இடம்பெயர்ந்த மக்களும் இந்த வன்னிப் போர்ப் பொறியினுள் அகப்பட்டுப்போயுள்ளனர். விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் பாதுகாப்பு அரணாக பலியாகிப்போயிருக்கிறார்கள் அவர்கள். அவர்களின் வெளியேற்றத்தை புலிகள் தடுத்துவைத்துள்ளதாக எல்லாத் தரப்பிலிருந்தும் கண்டனங்களும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.

Continue reading “குண்டுகளுக்கு ஓடிக்கொடுக்கும் வன்னி மக்களும்”

கிளிநொச்சியின் வீழ்ச்சி எதன் எழுச்சி?

1985 நடுப்பகுதி. இராணுவம் கவசவாகனங்களுடன் அதிகாலை 4 மணிக்கே ஊரைச் சற்றிவளைத்திருந்தது. ஒலிபெருக்கி அறிவிப்பின் பின்னர் பொது இடத்துக்குப் போக வேண்டும். இளைஞர்கள் யுவதிகள் பிரித்து நிறுத்தப்படுவார்கள். முழந்தாளில் வெயிலுக்குள் மணிக்கணக்கில் நிற்கவேண்டும். சந்தேகத்துக்கு உரியவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். மற்றவர்களுக்கு அடிஉதை… பெரிசாக இப்போதையளவுக்கு போர் என்று ஒன்று இருக்கவில்லை. இயக்கங்கள் பல இருந்தன.

Continue reading “கிளிநொச்சியின் வீழ்ச்சி எதன் எழுச்சி?”

ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்

obama

இந்த நாட்டில் நான் மதிக்கப்படுகிறேனில்லை, ஏனெனில் நான் ஒரு கறுப்பன். பதவி உயர்வில் அலட்சியப்படுத்தப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். ஒரு கிரிமினலாக கவனிக்கப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். உங்களில் பல ஆயிரம்பேர் அவருக்கு வாக்களிக்க விருப்பமில்லை, ஏனெனில் அவர் ஒரு கறுப்பன், ஆனால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரிவதில்லை. எனக்கு மட்டும் அது தெரியவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்…

Continue reading “ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்”