வேடனை விடுதலை செய்யுங்கள்

நான் பாணன் அல்ல
பறையன் அல்ல
புலையன் அல்ல
நீ தம்புரானுமல்ல.
ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!

வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை.

வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன.

Continue reading “வேடனை விடுதலை செய்யுங்கள்”

குற்றமும் தண்டனையும்

இந்நூல் எம். சுசீலா அவர்களால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வாசிப்பின் ஓட்டத்தை இடையூறு செய்யாதபடி நகர்கிறது மொழிக் கையாள்கை. தமிழில் 1072 பக்கம் விரிந்துள்ள இந் நூலில் அவரது பெரும் உழைப்பு தெரிகிறது.

“குற்றமும் தண்டனையும்” என்ற இந் நாவல் தஸ்தவெஸ்கி அவர்களால் எழுதப்பட்ட பெரும் நாவல். 1866 இல் ரஸ்ய மாதப் பத்திரிகை ஒன்றில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இத் தொடர் பின்னர் நாவலாக தொகுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

கதை சொல்லல் என்பதையும் தாண்டி தனிமனிதர்களின் மனவமைப்பு, மனச்சாட்சி, ஒழுங்கு, அறம், அன்பு என்பவற்றை தாங்கி நிற்கும் அக வாழ்வின் மீதான விசாரணைகளையும் சட்டம், நீதி, அதிகாரம் என்ற கட்டமைப்பு மனித வாழ்வோடு பொருதுதல் குறித்தான விசாரணைகளையும் தாங்கிய நாவல் இது. மனித உளவியலின் இடுக்குகளை ஆராயும் வலு கொண்டதால் இந் நாவல் 150 வருடங்களுக்கும் மேலாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒவ்வொரு மனிதரோடும் பேசும் ஆற்றலின் அதன் இரகசியம் இங்குதானுள்ளது. “எதையாவது எப்போதும் நான் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரே உளவியலாளர் தஸ்தவேஸ்கிதான்” என நீட்ஷே எழுதினார்.

Continue reading “குற்றமும் தண்டனையும்”

வாழை

திரைப் பார்வை

பொதுவாக பல திரைப்படங்கள் ஒரு முடிவை பரிசளித்து இருக்கையிலிருக்கும் எம்மிடம் தந்து அனுப்பிவைக்கும். சிந்தனையில் இடையீடு இன்றி எழுந்து சென்று விடுவோம். அநாதரவாக எழுத்தோட்டம் திரையில் நகரும் வால்போல அசைந்துகொண்டிருக்கும். வாழை திரைப்படம் முடிந்தும் பார்வையாளர்கள் எழுந்தபாடில்லை. வாழையின் கனதியும் படத் தொகுப்பும் இருக்கையோடு கட்டிப் போட்டுவிட்டிருந்தது. இசை மூளையறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சிப்புலத்துள் யாரோ கலவரப்பட்டபடி ஓடித்திரிந்தார்கள்.

Continue reading “வாழை”

“மலையகா” நூல் அறிமுகம்

சூரிச் சந்திப்பு

Continue reading ““மலையகா” நூல் அறிமுகம்”

தடங்களில் அலைதல்

நூல் அறிமுகம்

“உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல. அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள். ஆனால் உங்களிடமிருந்து அல்ல. அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல” என்ற கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையுடன் ஆரம்பித்து, வளரும் குழந்தைகளின் முதல் கண்டுபிடிப்பு “என் தந்தை என்பவர் எவ்வளவு முட்டாள் என்பதே” என பேச்சின் நடுவில் எடுத்துவிட்டேன்.

என் பேச்சு முடிய கீழே இறங்கினேன். வாட்டசாட்டமான ஒருவர் “நான் உம்மோடு பேச வேண்டும். வாரும் வெளியே பேசுவோம்” என்றார்.

Continue reading “தடங்களில் அலைதல்”

பாரபாஸ்

நாவல்


சுவீடன் எழுத்தாளர் Pär Lagerkvist அவர்களினால் 1950 இல் எழுதப்பட்ட இந் நாவல் 1951 இல் நோபல் பரிசை பெற்றது. பௌதீக யதார்த்த வாழ்வுக்கும், நம்பிக்கைகளை உருவாக்கி போற்றும், அல்லது அதற்கு கட்டுப்பட்டு வாழும், வாழ்வுக்கும் இடையே நகருகிறது இந் நாவல். குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு ஜெரூசலத்திலுள்ள கொல்கொத்தா மலையில் மூவர் சிலுவையில் அறையப்படுவதற்காக தொங்கவிடப்படுகிறார்கள். அவர்களில் ஒருவன் பாரபாஸ். பெற்றோராலும் சமூகத்தாலும் கைவிடப்பட்டவன். ஓர் அநாதை. பழிபாவம் எதற்கும் அஞ்சாதவன். கொள்ளைக்காரன். பாரபாஸ் இன் அலைவு கொல்கொத்தா, ஜெரூசலம், சைப்பிரஸ் என பயணித்து இறுதியில் றோம் இல் சிலுவையில் ஏற்றப்பட்டு மரணிக்கிறது.

Continue reading “பாரபாஸ்”

அதர் இருள்

அகரன் பிரான்ஸ் இல் இருக்கும் ஓர் இளம் எழுத்தாளர். பாரிசின் -குறிப்பாக லாசப்பலின்- தமிழ்வாழ்வுச் சூழலிலிருந்து தூரத்தில் வதியும் சந்தர்ப்பம் கிடைத்ததாலோ என்னவோ, அவரது எழுத்துக்களின் உள்ளடக்கம் தமிழ்ப் பரப்புக்குள் குறுகி நிற்கவில்லை. தமிழ்ப் புலம்பெயர் இலக்கியத்தில் ஒரு விசாலத்தை அவரது எழுத்துக்கள் காட்டிநிற்கின்றன. அவரது எழுத்துநடை அலாதியானது. இந்த அம்சங்கள் அகரனது தீவிர வாசகனாக என்னை ஆக்கியது என நம்புகிறேன்.

Continue reading “அதர் இருள்”

ஹிப்பி

1970 களில் எமது விடலைப் பருவத்தில் ஹிப்பி பற்றிய செய்திகளை வாசித்தும் கேட்டும் அறிந்தேன். அவர்களை சடை வளர்ந்த தலையுடன், கசங்கிய உடையுடன், வாழ்க்கை வெறுத்த மனிதர்களாக, போதைப் பொருள் பிரியர்களாக வெள்ளைநிறத்துடன் ஒரு தோற்றத்தை வரைந்துகொண்டேன். பின் யாழ் நகரில் அந்த மனவரைவுத் தோற்றத்தில் ஒருசிலரை அப்படி பார்த்தேன். அவர்கள் ஹிப்பிதானா இல்லையா என எனக்கு இப்போதும் தெரியாது. 80 களின் ஆரம்பத்தில் கொழும்பில் பார்த்த உருவம் எனது மனவரைவை தோற்றத்தில் மட்டும் செழுமைப்படுத்தியிருந்தது. பின்னரான காலத்தில்தான் அவர்களின் எதிர்க் கலாச்சார எழுச்சி பற்றி அறிந்துகொண்டேன்.

Continue reading “ஹிப்பி”

அந்தரம்

நாவல் அறிமுகம்

இந் நூலின் ஆசிரியர் தொ.பத்திநாதன் 1990 இல் போர்க் கெடுபிடி காரணமாக தனது பதினாறு வயதில் படிப்பையும் விட்டு தமிழகத்துக்கு அகதியாக போய்ச் சேர்ந்தார். மண்டபம் அகதி முகாமில் தொடங்கி பின் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி முகாமில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தார். 29 ஆண்டுகளின் பின் இலங்கையில் தனது பிறந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த கதைசொல்லலோடு தொடங்கிய அந்தரம் பின் அகதிகள் முகாமினுள் புகுந்துகொள்கிறது. அந்தரம் நாவல் அவரது நான்காவது நூல்.

Continue reading “அந்தரம்”

பார்ஹா (Farha)

ஜோர்தான் திரைப்படம்

இஸ்ரேல் நாடு (1947-1949) உருவாக்கத்தின்போது, 1948 இல் இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது நிகழ்த்திய பெரும் இனச்சுத்திகரிப்பும் படுகொலைகளுமான சம்பவம் நக்பா (nakba) என -அரேபிய மொழியில்- அழைக்கப்படும். பல கிராமங்களையும் நகரங்களையும் இனச்சுத்திகரிப்புச் செய்து இஸ்ரேல் அப் பிரதேசங்களை தன்வசமாக்கியது. இவ் வரலாற்றுக் கொடுமையின்போது ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்தவர்கள் குழந்தைகளிலிருந்து முதியவர் வரை படுகொலை செய்யப்பட்டனர். இக் காலகட்டத்தின் ஓர் இரத்தத் துளியாக “பார்ஹா” திரைப்படம் திரையில் வருகிறது.

Continue reading “பார்ஹா (Farha)”