சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள்

அறிமுகமும், கலை இலக்கிய ஒன்றுகூடலும்

நேரம் 3 மணியை அண்மித்துக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கடைதெருக்கள் வேலைத்தலங்கள் ஓய்வுற்றிருந்ததால் வீதிகள் நெரிசலற்று சுமுகமாய்த் தெரிந்தன. சூரிச் மாநகரம் மெதுவாய் இயங்கியது. நாம் போல்க்ஸ் கவுஸ் இன் ஒரு நடுத்தர மண்டபத்துள் கூடுகிறோம். சிறிய சந்திப்பகளிலிருந்து பெரும் சந்திப்புகளை நடத்துவதற்கான மண்டபங்களைக் கொண்டது இந்த போல்க்ஸ் கவுஸ். தமிழ்க் கடைகள் அவ்வப்போது மலிவுவிற்பனை மண்டபமாக இதை மாற்றுவதுண்டு. இங்குள்ள தமிழர்களுக்கு மலிவு விற்பனை நடக்கிற இடம் என்று அறிமுகப்படுத்திவிடுவது சுலபமாகக்கூடப் போய்விடுகிறது. பெரும்திரளாய்க் கூடுவர்… போவர்…வருவர் மலிவுவிற்பனைக்கு.

Continue reading “சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள்”

நளாயினியின் “நங்கூரம்”

கவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம் 

“புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”

அந்த வீதியில்
நீயும் நானும்
நட்பாய்த் தெரிந்த
முகம் ஒன்று

நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்

ஆனால் நீயோ
அவனைப் பார்த்து
என்ன சிரிப்பு
எனக் கூறியபோது
ஏனோ அதிகம்
இடிந்துபோனது
நம் காதல்தான்.

Continue reading “நளாயினியின் “நங்கூரம்””

போரபிமானம்

அழிவுகளைக் கணக்கிட்டுக் கொள்ளும்
காலங்கள் இவை.
இராணுவவீரன் களைத்துப் போய் இருக்கிறான்.
குண்டுவீசி பெயர்த்த இடிபாடுகளின் நடுவே
இவன் ஒரு சிகரட்டையோ கட்டையோ ஊதியபடி
இளைப்பாறுகிறான்.
பதவிநடை பிசகாமல் அரசியல்வாதிகள்
ஒலிவாங்கி; நோக்கி நடக்கின்றனர்.
பத்திரிகையாளர்கள் குறிப்பெடுக்கின்றனர்.

Continue reading “போரபிமானம்”

அகதி அந்தஸ்து

அவன் கூரைமீது ஏறி நிற்கிறான்
அச்சத்தின் ஒரு முளைப்பாய்.
குளிர் குலைத்த அதிகாலைப் பொழுது
இரவு உடையில் அந்த குர்திஸ்காரன்.
கூடாய்த் தொங்கியது எமது
அகதிகள் முகாம்.
சுற்றிவர பொலிசார்
மோப்ப நாய்கள்

Continue reading “அகதி அந்தஸ்து”

நிகழ்தொன்மம்

காய்ந்து உலர்ந்து வரண்டு
இந்தக் காகிதத் துண்டு இப்போதும்
பச்சைப் புல்லிடை கிடக்கிறது.
இல்லை வாழ்கிறது.
ஒவ்வொரு முறையும். அது
கண்ணில் எத்துப்படத் தவறுவதேயில்லை.

Continue reading “நிகழ்தொன்மம்”

பிச்சை வேண்டாம் நாயைப் பிடி

 

தனதும் தன் பற்றியதுமான அத்தாட்சிப் பத்திரங்களுக்கு
கொழும்பிடம் விண்ணப்பித்தபடி
அகதியாகிறான் இவன்.
புலம்பெயர் தேசத்தில்
காசு கேட்டு வருகிறான் தமிழ்மக்களுக்காக
இவன்களிலொருவன்.

Continue reading “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி”

மேதினச் செய்தி 2005

ஊடகவியலாளரின் வெளி
இயலற்றுப்போனதாலோ என்னவோ
ஊடகர் என வலுவிழந்திற்று அந்த வார்த்தை.
பொருத்தமானதுதான்.
சினிமா இன்றி தமிழ்த் தொலைக்காட்சி
அணுவளவும் அசையாது
என்றதான இருப்பில் கனவுகள்
விற்கப்படுகின்றன புகலிட தேசத்திலும்.

Continue reading “மேதினச் செய்தி 2005”

சும்மா

ஒவ்வொரு அழிவின்போதும் அவர்கள்
நாலு வார்த்தைகளுடனும்
கையில் ஒரு கொப்பியுடனும் வந்து போகிறார்கள்.
சாவை நினைத்து அழுகிறது மனம்.
என்னுள் ஏதோவோர் குற்றவுணர்வை
புதைத்துவிட்டேனும் தம்மைச் சாதிக்க
பயிற்சி எடுக்கிறது அவர்களின் வார்த்தைகள்.

Continue reading “சும்மா”

அலைப் போர்

இன்னுமென்னால் கற்பனை பண்ண முடியவில்லை
நாளுக்கு நாள் பெருகும் செய்திகளினூடு
நான்
பயணித்துக் கொண்டுதானிருக்கிறேன்.
முடியவில்லை, இந்தக் காட்சியை
கற்பனையுள் வார்த்துக் கொள்ள.
அலைகள் இராட்சதித்து
மண்ணில் புகுந்து
நிகழ்த்தியாயிற்று ஒரு அலைப் போர்.
ப+மியின் மீதான ஒரு பிரளயத்தின் முன்மாதிரியாய்
எல்லாம் நடந்து முடிந்தது.

Continue reading “அலைப் போர்”

இரத்தசாட்சி

சகோதரியே
நீ
வெடிகுண்டை உன் உடலின்
பாகமாக்கிய கணத்திலேயே
இந்த மண்ணிலிருந்து உனது வேர்கள்
அறுக்கப்பட்டுக் கொண்டிருந்ததை
உணர்ந்திருப்பாய்.
மனித அறிதலுக்கு உட்படாத உன்
உணர்வுகளை நீ
யுகங்களை விழுங்கி அவஸ்தைப்பட்டதை
புயலின் முன்னரான மேகக்கூட்டங்கள்
பேயோட்டமாய் காவிச்சென்றதடி.

Continue reading “இரத்தசாட்சி”