மசிரைவிட்டான் சிங்கன்!

அனுமதிபெற்று இரவு முழுவதும் நடமாடும் சுதந்திரத்தை திருவிழா  கூத்து.. என ஒருசில சந்தர்ப்பங்களே வழங்கிய காலம் அது. நாம் இளசுகளாக இருந்தோம். ஓர் அரச நாடகத்தின் சாட்டு அன்று கிடைத்தது. இரவுகளை உரசி உரசி கூக்கிரலிட்டு சத்தமாய்க் கதைத்து நாம் களித்திருந்தோம். நாடகம் தொடங்கி… அதுவாய்ப் போய்க்கொண்டிருந்தது. நாம் அரைவாசி கவனத்தை நாடகத்தில் விட்டிருந்தோம். அரசன் அட்டகாசமாய் வரும்போதெல்லாம் நாம் கதைக்காமல் இருந்தோம். வாள்வீசி குதித்து விழும் காட்சிகளில் நமது நரம்பை ஏதோ தட்டிக்கொண்டிருந்தது. 

Continue reading “மசிரைவிட்டான் சிங்கன்!”

இது தேவைதானா?

// டெல்லி மாணவி பாதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது சொந்தப் பெயர், புகைப்படம், இருப்பிடம் குறித்த எந்தத் தகவலுவும் வெளிவரவில்லை. தற்போது அவளது இறப்பிற்குப் பின்பும் கூட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை.//- http://www.facebook.com/cimi.meena.3/posts/592299927453159

  இது தேவைதானா?

Continue reading “இது தேவைதானா?”

2013

இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற
ஓவியங்கள் உருவழிந்துபோன
வரலாற்றை பனிக்கால தேவதைகள்
நிலமெங்கும் மலையெங்கும்
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும்.
நதியிடம் சொல்லி
அல்லது சொல்ல முயற்சித்து
மறைந்துபோகின்றனர் அவர்கள்.

Continue reading “2013”

மை கார்.. மை றோட்.. மை பெற்றோல் !

மை கார்.. மை றோட்.. மை பெற்றோல். இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர் எனது ஊர் இங்கிலீஷ் தங்கராசா. அவர் கள்ளுக் கோப்பரேசனுக்குப் போகும்போது தமிழில் பேசுவார். திரும்பிவரும்போது அதிகம் இங்கிலீஷ் பேசுவார். அவரே தனது இங்கிலீசை அப்பப்போ தமிழாக்கமும் செய்வார். எனக்கும் நண்பர்களுக்கும் அவரை நன்றாகப் பிடிக்கும். தண்ணியடிச்சால் பறக்கும் தூசணவார்த்தைகளை வெறிக்குட்டிகளிடமிருந்து கேட்டுப் பழகிய எமக்கு, தங்கராசா அந்த றூட்டிலை வராத ஒருவர் என்றளவில் மனம்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையாளனாகத் தெரிந்தார். 

Continue reading “மை கார்.. மை றோட்.. மை பெற்றோல் !”

நினைவேந்தல்

 

சாமப் பொழுதில்
அல்லது ஓர் அந்திமப் பொழுதில்
இல்லாவிடினும்
ஓர் கருக்கல் பொழுதில்
மறைந்திருத்தல்; இலகு என்றபோதும்
நிலம்வெளித்த ஓர் காலைப் பொழுதில்
யார் கண்டார்
மரணம் ஒளித்திருத்தல் கூடுமென.

Continue reading “நினைவேந்தல்”

நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.

(மயூ மனோ வின் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசிப்பு)

குழந்தையொன்று உருவங்களை வடிவமைக்கும் கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தது. சாத்தியப்பாடுகளை அனுபவம் படிப்பித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீழ்தலின்போதும் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடனும் புதிய படைப்பாக்கத்துடனும் குழந்தை முயன்று கொண்டிருந்தது. “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ என்ற மயூ மனோவின் கவிதைத் தொகுதியினை நான் கையில் வைத்திருந்தேன்.

Continue reading “நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.”

இன்னமும் உறங்கியிருக்கவில்லை

இருள்படர்ந்த கடற்பரப்பை நீவிவரும் காற்று
எனது குடிசையின்மீது இடறுகிறது.
இடையிடையே அது கிடுகை கூரையிலிருந்து
பெயர்த்துவிடுவது போலவும், பின்னர்
கிடுகு அமைதியடைவதாயும் இருந்த கணங்கள்
என்னை கடத்திவைத்திருந்தன.

Continue reading “இன்னமும் உறங்கியிருக்கவில்லை”

மே தின நினைவு

1994 மே மாதம் நாம் சூரிச் புகையிரத நிலையத்தில் பிரசுரங்களுடன் மூவர், நால்வர் கொண்ட குழுவாக நிற்கிறோம். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடத்தில் கார் பாவனை என்பது அரிதான ஒன்று. அதனால் முக்கிய புகையிரத நிலையங்கள் எமது “மனிதம்” சஞ்சிகையின் விற்பனை இடமாக இருக்கும். இன்று பிரசுரத்துடன் நிற்கிறோம். ஒருவித பயம். பிரசுரங்களை விநியோகிக்கின்றோம். தமிழ்மொழியிலும், யேர்மன் மொழியிலுமான பிரசுரங்கள் அவை. பதட்டத்துடனும் கோபத்துடனும் அடுத்து எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்ற கேள்விகளுடனும் நாம் நின்றோம். ஆம், நண்பர் சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் பிரசுரங்கள்தான் அவை.

Continue reading “மே தின நினைவு”

“பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்

பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த ~மறுப்புக்கான| சமூக நியாயத்தை வைக்க முற்படுதல் என்ற நேர்மையான வழியில் இதை உரையாட முன்வருவதே சரியாக இருக்கும். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இருமைகளில் சிக்குண்டு இருப்பது இவ்வகை தேக்கத்தை கடக்க முடியாத நிலையில் பலரை விட்டுள்ளது ஒருவகை அவலம்தான்.

Continue reading ““பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்”

நான் சமாதானத்தை நேசிப்பதால்… -அலேகிரியா

யுத்தத்தையல்ல, நான்

சமாதானத்தை நேசிக்கிறேன் என்பதால்…

பசித்திருக்கும் குழந்தைகளையும்

உருவழிந்த பெண்களையும் மட்டுமல்ல

ஊமைகளாக்கப்பட்ட மனிதர்களையும் நான்

பார்க்க விரும்பாததால்…

களத்தில் தொடர்ந்து நான் போரிடவேண்டும். Continue reading “நான் சமாதானத்தை நேசிப்பதால்… -அலேகிரியா”