புனைவு – fiction

இலக்கியத்தில் புனைவு, உண்மை, பொய் என்பவற்றுக்கான ஊடாட்டங்கள் சம்பந்தமாக இலக்கிய உலகு (தமிழ்ப் பரப்புக்கு வெளியேயும்) வரைவுசெய்துவிட முடியாத வர்ணச் சிதைவுகளாகவே தொடர்கிறது. மிக இலகுவாக “புனைவு” என்றால் பொய் அல்லது உண்மையற்றது என்ற மேலோட்டமான பார்வைக்கு குறைச்சலில்லை என்பது என் கணிப்பு.

Continue reading “புனைவு – fiction”

Dust in the eyes of the world.

ஆப்கானிஸ்தான் தொடர்ச்சியான உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களாலும் அடிப்படைவாதங்களாலும் சீரழிக்கப்பட்ட நாடு. போதைப்பொருள் சாம்ராச்சியமாக மனநிலைப்படுத்தப்படும் நாடு.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு 1979 இலிருந்து 1989 வரை நீடித்தது. 1992 ஏப்ரல்28 அன்று சோவியத் பொம்மை அரசான நஜிபுல்லாவின் அரசு அழிந்தொழிந்தது. அதுவரை அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்று பட்டுப் போராடிய முஜாகிதீன் கிளர்ச்சியாளர்களில் ஆக்கிரமிப்புக்கெதிரான போராளிகளாக இருந்த உண்மைப் போராளிகளின் பெரும்பகுதியினர் தமது ஆயுதங்களை மௌனிக்கச் செய்தனர். மற்றைய பகுதியான அதிகார வெறி பிடித்த குழுவினரோ உள்நாட்டுப் போரை ஆரம்பித்தனர்.

Continue reading “Dust in the eyes of the world.”

குழந்தைப் போராளிகள் – China Keitetsi

// ” பெட்டை நாயே! இங்கே நடப்பது ஒன்றுமேயில்லை. உன்னை உகண்டாவுக்குக் கொண்டுபோனபின்தான் கச்சேரியே இருக்கிறது” என்று அவர்கள் கொக்கரித்தார்கள்.அவர்கள் அந்த இரகசிய இடத்தில் என்னை நீண்ட நாட்களாக அடைத்துவைத்து சொல்லவோ எழுதவோ முடியாத சித்திரவதைகளை செய்தார்கள்.அந்தக் காலம் என் அவமானத்தின் காலமாக இருந்தது. அதைப் பற்றி இதற்குமேல் எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை…

Continue reading “குழந்தைப் போராளிகள் – China Keitetsi”

அபத்தம்

வித்தியாவின் பாலியல் சித்திரவதைக் கொலை தொடர்பாக எதிர்பாராத அளவில் வடக்கு கிழக்கிலும் புத்தளம் போன்ற பிரதேசங்களிலும் ஓர் எதிர்ப்புப் போராட்டம் வெளிக்கிளம்பியுள்ளது. மிக நீண்ட காலமாக அடக்குமுறைக்குள் மெல்ல மெல்ல ஆழப்புதைந்த ஒரு சமூகம் மெல்லத் தலையெடுத்து வாழ்வியல் வெளிகளில் சமூக மனத்துடன் உலவத் தொடங்கியிருக்கிறது. தனது தொலைந்துபோன விழுமியங்கள் மீதான பச்சாதாபம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வன்முறைக்குள் அடக்கிவைக்கப்பட்ட அதன் மனித உணர்வுகள் உணர்ச்சிகள் எல்லாம் ஏதோவொரு வகையில் வெளிப்படுத்தப்படுவது இயல்பு. தனிமனித உளவியலானாலும் சமூக உளவியலானாலும் அதேதான் நிலைமை.

இங்கு வித்தியாவிற்கு இழைக்கப்பட்ட கொடுஞ்செயலைக் கண்டித்து அது எழுந்திருக்கிறது. தனிமனித உளவியலின் தொகுப்பான சமூக உளவியல் வெளிப்பாடு இது. இதை வித்தியா என்ற தனிநபருக்கான போராட்டமாக மட்டும் பார்க்க முடியாது. இது இழந்துபோன விழுமியங்களை மீளுருவாக்கம் செய்ய ஏங்கும் சமூக மனங்களின் போராட்டமாக வரையறுக்க முடியும்.

Continue reading “அபத்தம்”

பிறழ்வு

முதலில் வித்தியாவுக்கு எனது கனத்த அஞ்சலிகள்.

வித்தியாவின் இழப்பின் மீதான தார்மீக கோபங்களிலிருந்து பிறழ்ந்து விழும் சொற்கள் இக் குறிப்பை எழுதத் தூண்டியது.

மாணவி வித்தியாவை கொன்றொழித்த குற்றவாளிகள் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும். பெண்ணுடலின் மீதான மலின அரசியலை நடத்தி காசு பொறுக்கும் குறுக்குவழியில் ஈடுபடாமல் குற்றவாளிகளை அம்லப்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும். இவையிரண்டுக்குமான போராட்டங்கள், அழுத்தங்கள் எழுவது ஓரளவாவது பயன்தரும்.

Continue reading “பிறழ்வு”

தாழ்திறவாய்.

அவள் அனாதையாகிவிட்டிருந்தபோது கவனித்தாள், தன்மீது
ஓர் இருள் துண்டொன்று போர்த்தப்பட்டிருப்பதை.
தாழப் பறந்த கிபீர் விமானங்கள்
கிழித்துவிட்டிருந்த துண்டாக இது இருக்கலாம்.
நிலமதிர வெடித்துச் சிதறிய குண்டின் செல்கள்
அரிந்தெறிந்த துண்டாகவும் இருக்கலாம்.
எது எப்படியாகிலும் அவள் அதைப் போர்த்தியிருந்தாள்
அல்லது
அது அவளைப் போர்த்தியிருந்தது.

Continue reading “தாழ்திறவாய்.”

எனது வார்த்தைகளுள் நான்

நண்ப,
யன்னல்கள் திறந்திருந்த காலமதில்
பரிமாறிய வார்த்தைகள் இன்னமும்
தொலைந்துபோய்விடவில்லை என நம்புகிறேன்.
முரண்கள் மோதி மோதி வளர்ந்த எம் உறவு – இன்று
முகநூல் நட்பாய்
“லைக்” குறியீடாய்
தேய்ந்து போகிறதா என அச்சப்படுகிறேன்.
எனது வார்த்தைகள் உண்மையானவை – அதில்
எப்போதும் ஈரமும் இருக்கும்.
பிம்பங்கள் வரையும் தூரிகைகளின் படையெடுப்பு
விமர்சனங்களை தாக்கியழிக்கிற காலமிது.
மௌனத்தை அதிகம் நேசிக்கக் கற்றுக் கொள்கிறேன்.
அது ஓர் நெடுவீதியாய் நீண்டு
என்னையும் உன்னையும் தன்
முனைகளால் விலக்குப்பிடிக்கிறது அல்லது
தள்ளிக்கொண்டிருக்கிறது.
என்னிடம் தூய்மைகள் எதுவும் இல்லை.
அழுக்கை நான் வெறுத்தபடியேதான் நகர்கிறேன்.
நெடுவீதி எமை தூரப்படுத்தும் இடைவெளியை
தனிமை நிரப்பிக்கொண்டிருக்கிறது.
தனிமையை நான் நேசித்தபடி இருப்பேன் – அதில்
தொங்கிக்கொண்டிருக்கிறது எனது ஆன்மாவின் வாழ்வு.

10052015

எனது நாட்டில் ஒரு துளி நேரம்.

– எனது வாசிப்பு

malathi book

நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. 240 பக்கங்கள் கொண்ட இந் நூலை விடியல் பதிப்பகம் 2013 இல் வெளியிட்டுள்ளது.

புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும்.

Continue reading “எனது நாட்டில் ஒரு துளி நேரம்.”

“பொறுக்கி” வாழ்வு.

marana-gana-viji-1

// கானா என்ற வார்த்தை மேல் உறைஞ்சுபோய் காய்ஞ்சு போய் எங்கட ரத்த நாத்தம்தான் நிறைய அடிக்கும். இது எங்கட வலி. எங்கட உணர்ச்சி. உங்களோடு அழ முடியல. அழுவதற்கான மனிதர்கள் எங்களட்டை இல்லை. எங்க முகத்தைப் பார்த்து பேசவோ, எங்களை தொட்டுப் பேசவோ இந்த சமுதாயத்தில் ஆள் இல்லாதபோது, நாங்கள் பிணத்தைத்தான் கட்டி அழவேண்டியிருக்கும்.//

“மரண கானா விஜி” என்ற தற்போதைய கானாக் கலைஞன் சொல்லுகிற வார்த்தைகள் இவை.

Continue reading ““பொறுக்கி” வாழ்வு.”

பங்கர்கள் பின்தொடர்கின்றன..

oolikkaalam-2“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு.

அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

இந் நூல் வெளிவர காத்திரமான பங்களிப்புச் செய்த சயந்தன் தமிழ்க்கவியை (இந் நூலின் கடைசிப் பக்கத்தில்) இவ்வாறு அறிமுகமாக்குகிறார்.
“தமயந்தி சிவசுந்தரலிங்கம் (66) எனும் இயற்பெயர் கொண்ட தமிழ்க் கவி ஈழவிடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர். போராளிகளாலும் மக்களாலும் “மம்மி“ என்றும் “அன்ரி“ என்றும் அன்பாக அழைக்கப்பட்ட தமிழ்க்கவி ஈழப் போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய்.“ என்கிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் வானொலி, வானொளி உட்பட அதன் கலையிலக்கிய தளங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்ததால் தமிழ்க்கவி பலராலும் அறியப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பில் போராளியாக இருந்த அவரின் ஊழிக்காலம் நாவல் அந்தத் தளத்தில் இயங்கவில்லை. அப்படி இயங்கவேண்டும் என்பதுமில்லை.

Continue reading “பங்கர்கள் பின்தொடர்கின்றன..”