வெறுக்கிறேன்!

உணர்ச்சிவசப்படாதே என அறிவுரை கூறுவோர் மீது
வெறுப்பு வருகிறது,
உணர்ச்சி அறிவுக் கண்ணை மறைக்கும் என்பவர் மீதும்தான்!

உணர்ச்சிகளற்ற உடலும் மனமும் இறந்துபோவதற்குச் சமம்.
அறிவற்ற உடலுக்கு இந்த துரதிஸ்டம் வாய்ப்பதில்லை.
மகிழ்ச்சி கோபம் அழுகை சந்தோசம் என எல்லாமும் அறிவினுள் இருப்பதில்லை.
ஆதலால் நான் உணர்ச்சிவசப்படுவதை சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.

அதற்குள் ஓர் “மன்னிப்பு” என்ற வார்த்தை உறங்கியிருத்தல்கூடும்.
அது அறிவின் அளவுகோலால் ஆனது.
மனதின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் அந்த வார்த்தை ஒரு பிரசவத்தின் தொப்பூழ்க் கொடியோடு வாயிலிருந்து வெளிவருதலில் ஓர் உயிர் இருக்கும். அருகாமை இருக்கும்.
ஆதலால் அறிவையும் நான் சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.
அறிவையும் உணர்ச்சியையும் எதிரணியில் நிறுத்தும் உங்கள் வார்த்தைகளை நான் வெறுக்கிறேன்.

ஆசைப்படுகிறேன்

கிழக்கு என எதை நீ அறிவிக்கிறாயோ அது எனக்கு மேற்காய்த் தோன்றுகிறது
சூரியன் கிழக்கில் உதிப்பதாக நீ அறிவிக்கிறபோது அது மேற்கிலிருந்து எழுவதாய்த் தோன்றுகிறது.
ஒரு மாலைநேர சூரியன் இழுத்துப் போட்டிருக்கிற வானம் எனக்கு காலைக் காட்சியாகத் தோன்றுகிறது.
தோன்றுதல்களுக்காய் எனை நீ தண்டிக்கவும் செய்கிறாய்.
சொல்லித்தரப்பட்டவைகளை உன்போலவே நானும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விதிக்கிறாய்.
அதை என்னுடன் எடுத்துச் சென்று அடுத்த சந்ததியிடமும் கையளித்துக் கொண்டே இரு
போதித்துக் கொண்டே இரு என்கிறாய்.
கடவுளைக் காட்டி மிரட்டுகிறாய்.
மறுபிறவியைச் சொல்லி மிரட்டுகிறாய்
இருளைக் காட்டி மிரட்டுகிறாய்.
இருளற்ற வெளியில் ஒளிக்கு அர்த்தமேது
மனிதர்களற்ற உலகில் கடவுளுக்கு அர்த்தமேது.
வாழ்தல் அற்ற உலகில் மறுபிறவிக்கு அர்த்தமேது
யதார்த்தத்தை நம்பிக்கைகளால் இடம்பெயர்த்தல்தான் நீ கண்டுசொல்லும் வாழ்வு எனில்,
அது எனக்குத் தேவையில்லை.
மனதின் பிரபஞ்சத்தில் சுழன்று திரிய
நான் ஆசைப்படுகிறேன்.

மாற்றங்களின் எதிரிகள் !


Enemies of SYSTEM CHANGE !

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவோ ஐரோப்பிய ஒன்றியமோ தனித்தனியான மேற்குலக நாடுகளோ உதவ முன்வராதது ஏன்?. இந்த பொருளாதார நெருக்கடிக்கு முழுக் காரணமுமே ராஜபக்ச குடும்பம்தான் எனவும் போர்தான் காரணம் எனவும் நிறுவிவிட முடியாது. அவை உள்ளகக் காரணிகள் மட்டும்தான். உலகில் ஏழை நாடுகள் எதுவும் முழு இறைமையோடு இருப்பது சாத்தியமற்றதாக்கப்பட்டு பல காலமாகிவிட்டது. அப்படியானால் இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தை இலங்கைக்குள் மட்டும் எப்படி கண்டுபிடித்துவிட முடியும் ?

Continue reading “மாற்றங்களின் எதிரிகள் !”

மைக்கேல்

Thx: Betty Images

அவள் பெயர் மரியா. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து உதித்த கொராற்சியா நாட்டை சேர்ந்தவள். அவளுக்கு அப்போ 20 வயதாகியிருக்கவில்லை. 200 பேர் வேலைசெய்யும் எமது தொழிற்சாலையின் உற்பத்திப் பகுதியில் அவள் உட்பட ஓரிரு பெண்கள் மட்டுமே வேலைசெய்தனர்.

மரியா வேலைக்கு வந்தபோது விடலைப் பருவம் முற்றாக நீங்கியிருக்கவில்லை. அவள் பெடியனா பெட்டையா என பலருக்கும் குழப்பம் இருந்தது. எனக்கும்தான். அவளது உடை, நடை, தலைமயிரின் நவீன அலங்காரம் எல்லாமும் இந்த குழப்பத்தை தந்தன. அவளுக்கு மார்பகங்கள் பெண்பாத்திரம் கொள்ளவில்லை. முகம் குழந்தைபோல் இருந்தது. இணைநண்பன் (boy fiend) இல்லை.

Continue reading “மைக்கேல்”

சைக்கிள் கலாச்சாரம்

நெதர்லாந்து சைக்கிள் கலாச்சாரம் கொண்ட நாடு. 17 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அந்த நாட்டில் 22 மில்லியன் சைக்கிள் பாவனையில் உள்ளன. பயன்பாட்டு அடிப்படையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சைக்கிள்களை வைத்திருக்கிறார். குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை, தொழிலாளி தொடக்கம் அரசியல் தலைவர்கள் வரை சைக்கிளில் பயணிப்பதை நெதர்லாந்தில் காணலாம். நெதர்லாந்து சென்றபோது அந்தக் காட்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். அது ஒரு கலாச்சாரமாக சுழல்கிறது.

Continue reading “சைக்கிள் கலாச்சாரம்”

சுற்றுச்சூழலை ‘காதலிக்கும்’ விடுதி !

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் கல்பிட்டி பிரதேச எல்லைக்குள் ஒருபுறம் பாக்குநீரிணையையும் மறுபுறம் “டச் வளைகுடா”வையும் கொண்டுள்ள 14 சிறிய தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன. அதில் 25 ஹெக்ரர் பரப்பளவைக் கொண்ட இரண்டாவது பெரிய தீவு உச்சிமுனை என்று அழைக்கப்படுகிறது. இதை சுவிஸ் இனை தளமாகக் கொண்ட சுற்றுலா கம்பனியொன்று (Let’s Travel) 30 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது. மாலைதீவின் மாதிரி வடிவில் 150 நீர்சூழ் பங்களாக்கள் முளைக்கும் சுற்றுலா விடுதி தோன்ற இருக்கிறது. “சுற்றுச்சூழலை காதலிக்கும் விடுதி” என்ற பெயர்ப்பலகையோடு இத் திட்டம் உருவாகிறது.

Continue reading “சுற்றுச்சூழலை ‘காதலிக்கும்’ விடுதி !”

மாயை ஆகுமா ?

image: slguardian.org

காலிமுகத்திடல் போராட்டத்தில் ராஜபக்சக்களை அகலுமாறு கேட்டு போராடியது எவரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்காதளவு வெற்றியளித்திருக்கிறது. ஒரு அரண்மனை ஆட்சி வீழ்ந்துகொண்டிருப்பது போல அதை விழிபிதுங்க பார்த்தார்கள் மக்கள். போரை வெற்றிகொண்ட ஒரு மன்னராக கொண்டாடப்பட்ட மகிந்தவின் வரலாறு மகாவம்சத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றளவுக்கு சென்றிருந்தது. இன்று அந்த மன்னன் குறித்த பிம்பத்தை இந்தப் போராட்டம் தகர்த்ததோடு அவரை ஓடிஒளிந்துகொள்ளவும் வைத்திருக்கிறது. இது மிகப் பெரும் சாதனை. மக்கள் போராட்டத்தின் வலுவை உணர்த்திய சம்பவம்.

Continue reading “மாயை ஆகுமா ?”

காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?

இலங்கையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னால் தீவிரவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும்தான் இருக்கிறார்கள் என மகிந்த கூறியிருக்கிறார். சிங்கள மக்கள் முன்னிலைப் பாத்திரம் அளித்து தொடங்கிய இந்த எழுச்சியை அவர் இலாவகமாகவே இனவாத அரசியலாக திசைதிருப்புகிறார்.

Continue reading “காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?”

வானத்திலிருந்து வீழ்வதல்ல !

காலிமுகத்திடலில் மையம் கொண்டுள்ள எழுச்சி ஒரு அரசியல் விளைவை காண்பதற்கான ஆவலில் பெரும்பாலான மக்களை ஆழ்த்தியிருக்கிறது. எப்பொழுதுமே நேரடி விளைவுகள் குறித்து பேசப்படும் அளவிற்கு அதன் மறைமுக விளைவுகள் கவனிக்கப்படுவதில்லை.

Continue reading “வானத்திலிருந்து வீழ்வதல்ல !”

உக்ரைன் நெருக்கடி !

John J. Mearsheimer (image -thx: reddit.com)

"த எக்கோனமிஸ்ற்" இதழில் 19.03.2022 வெளிவந்த கட்டுரை இது."உக்ரைன் நெருக்கடிக்கு ஏன் மேற்குலகம் முக்கிய பொறுப்பாக உள்ளது" என்ற தலைப்பில் இக் கட்டுரை வெளியாகியுள்ளது. சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜோன் மியர்ஸைமர் தனது பார்வையை வெளிப்படுத்துகிறார். நியூயோர்க்கை பிறப்பிடமாகக் கொண்ட மியர்ஸைமர் (75) அரசியல் விஞ்ஞான பேராசிரியரும் அறியப்பட்ட கறாரான விமர்சகரும் ஆவார்.

// சோவியத் யூனியனை ‘மிஸ்’ பண்ணியதாக உணராத எவருக்கும் இதயம் இல்லை. அதை மீளவும் பெற விரும்பும் எவருக்கும் மூளை இல்லை// – புட்டின்

Continue reading “உக்ரைன் நெருக்கடி !”