வெட்கம்!

16 வயதான அல்லைப்பிட்டி சிறுவன் சென்ற மாதம் பொலிசாரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டான். அந்தச் சிறுவன் ஊடகங்களாலும் தனிமனிதர்களாலும் கள்ளன், ஒழுக்கமற்றவன், படிக்காதவன்… அது இது என செய்யப்படும் அவதூறுகள் ஒரு மனித உயிரியின் உயிரைப் பறிக்க நியாயம் வழங்குவதானது ஒரு சிந்தனைக் கொடுமை. அவன் அப்படி இருந்தானா இல்லையா என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. அது கதையாடலாகக்கூட இருக்கலாம். சட்டத்தை மீறினானா என்பதை தீர்மானிக்க நீதிமன்றம் என்ற அமைப்புமுறை இருக்கிறது. சரியாகவோ பிழையாகவோ அமையும் தீர்ப்புகளை அது கொண்டிருக்கலாம் என்றபோதும், இந்த அமைப்புமுறையை நிராகரிக்க முடியாது. ஆனால் தீர்ப்புச் சொல்ல அல்லது தண்டனை வழங்க எந்த மக்களுக்கும் உரிமை கிடையாது.

Continue reading “வெட்கம்!”