போர்நிறுத்த ஒப்பந்தம் 2025

image: Aljazeera

காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போது தேடுதல் என்பதற்கு ஏதும் அர்த்தம் இருக்குமா என்ன.

அதேபோல் இஸ்ரேலிய சிறையில் கொல்லப்பட்ட பலஸ்தீன கைதிகளின் உடலங்களும் வந்திருக்கின்றன. அவர்கள் மோசமான சித்திரவதைக்கு உட்பட்ட தடயங்கள் உடலில் இருப்பதாக ஐநா செயலாளர் நாயகம் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய சிறையிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தாம் பறிகொடுத்த காலங்களின் மீதேறி மீண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டார்கள் என நம்பி இருந்த சில குடும்பங்களின் முன் மறுபிறவி எடுத்து வந்ததுபோல் சில கைதிகள் மீண்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 வருடங்களாக, 20 வருடங்களாக கைதிகளாக இருந்தவர்களும் வந்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் கமாஸின் பிடியிலிருந்த பணயக் கைதிகள் இஸ்ரேல் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.

Continue reading “போர்நிறுத்த ஒப்பந்தம் 2025”

சமாதானத்துக்கான நோபல் பரிசு

2025 இன் சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவைச் சேர்ந்த மரியா கொரீனா மஹாடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. “ஏழு போர்களை நிறுத்தி, பல இலட்சம் உயிர்களைக் காப்பாற்றியவன் நான். நானே சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவன்” என ட்றம்ப் எடுத்த தன்முயற்சியெல்லாம் வீணாகிப் போனது. நோபல் பரிசைப் பெற்ற மரியா கொரீனா “இப் பரிசை ட்றம்பினை கௌரவப்படுத்தி ஏற்றுக்கொள்கிறேன். ட்றம் அதற்குத் தகுதியானவர்” என அறிவித்தார்.

Continue reading “சமாதானத்துக்கான நோபல் பரிசு”

Flotilla அலை

இஸ்ரேலின் கோர முகமும் மனித இழிவுச் செயல்களும் புளோற்ரீலா போராட்டக்காரர்களை அச்சமூட்டி அனுப்பிவைத்திருக்கின்றன. கடந்த புதன் கிழமையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை புளொற்ரீலா வள்ளங்கள் முழுவதும் இஸ்ரேல் கடற்படையால் கட்டம் கட்டமாக முற்றுகையிடப்பட்டு, அவற்றில் பயணம் செய்த 437 செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த அமளிக்குள்ளும் 3 கப்பல்கள் தமது சமிக்ஞைகளை மாற்றி மாற்றி முயற்சிசெய்து பயணித்தும்கூட அவை காஸா கடற்கரையிலிருந்து 130 மைல் தூரத்தை மட்டுமே எட்டித் தொட முடிந்தது.

Continue reading “Flotilla அலை”

இதுதான் டிசைன்

Thanks for image: time .com

பலஸ்தீன காஸா பகுதியில் போரை நிறுத்தி இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க ட்றம்ப் அரசினால் வரையப்பட்ட சமாதானத் தீர்வு பற்றிய பேச்சு இப்போ பேசுபொருளாகியுள்ளது. இந்தக் கூற்றில் இரண்டு கதையாடல்கள் இருக்கின்றன. ஒன்று காஸாவில் நடப்பது ‘போர்’ என்றதான கதையாடல். அங்கு நடப்பது போரல்ல. ஓர் இனப்படுகொலை என்பதே உண்மை. மற்றைய கதையாடல், இஸ்ரேலுக்கு கமாஸ் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பது என்பது.

Continue reading “இதுதான் டிசைன்”