ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமாகிய தோழர் தேவா அவர்கள் கடந்த 25.03.2023 அன்று தனது 70 வது வயதில் எமை விட்டுப் பிரிந்தார். 1983 இலிருந்து சுவிஸ் இல் தொடர்ச்சியாக வேலைசெய்து, பின் ஓய்வுபெற்று தான் பிறந்த மன்னார் மண்ணுக்கு திரும்பி வாழ்ந்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், டொச் (ஜேர்மன் மொழி), சிங்களம் ஆகிய மொழிகளில் ஆழமான புலமையுடையவராக இருந்தார். நீண்ட இழுத்தடிப்புகளோடு குழந்தைப் போராளிகள் என்ற நூலை சுவிஸிலிருந்தபோது முதல் நூலாக வெளிக்கொணர்ந்த அவர் இலங்கையில் இருந்தபோது அம்பரயா, அனொனிமா, நீண்ட காத்திருப்பு, என் பெயர் விக்டோரியா போன்ற முக்கியமான நூல்களை தமிழுக்குப் பெயர்த்திருந்தார். அவரது மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. தோழர் தேவாவுடனான நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.
Continue reading “தோழர் தேவா- நினைவுக் குறிப்பு”