தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கு இளைஞர்களில் ஒரு பகுதியினரை அழைத்துச் சென்ற காரணிகளில் தரப்படுத்தலும் ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. தேசிய இன அடிப்படையில் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் போராட்டத்தில் முன்முனைப்புடன் சம்பந்தப்பட்டதற்கான பன்மைக் காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனாலும் “யாழ்ப்பாணத்தார் தமது நலனின் அடிப்படையில் தரப்படுத்தலுக்காக தமிழீழப் போராட்டத்தைத் தொடங்கி, (தரப்படுத்தலால் நன்மையடைந்தவர்களை) மற்றவர்களை இந்த போராட்டத்துள் இழுத்துப் போட்டார்கள்” என்று அதை மொழியாக்கம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.