சொன்னேனில்லை

அனுபவக் குறிப்பு

DSCF9881

2019.

எனது முதல் பயணம் அந்த ஊருக்கு. மாசி மாத வெயில் கையில் ஒரு தண்ணீர்ப் போத்தலுடன் ஆட்டோவில் எனை ஏற்றி அனுப்பிவைத்திருந்தது. மலைகளற்ற பூமி இன்னொருவகை அழகை உடுத்தியிருந்தது. சுவிசிலிருந்து புறப்பட்டபோது வீதியோர பனித்திரள்களின் குளிரசைப்புக்கு எதிர்நிலையாக, நான் புழுதி அளைந்து திரிந்த மண் சூட்டை கொளுத்திப் போட்டிருந்தது. வியர்வையற்ற நாட்களின் உலகிலிருந்து -உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலைவரை- வியர்வைத் துளிகளை பெய்துகொண்டிருந்த நாட்களின் உலகிற்குப் பெயர்க்கப்பட்ட எனது உடல் ஏதோவொன்றை சுகித்துக் கொண்டிருந்தது.

Continue reading “சொன்னேனில்லை”