
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் அதை
எனது சுடரொளியில் நீ கவனிப்பதேயில்லை.
உனது முகத்தை நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
புறம்காட்டி நீ செல்கிறபோது அணிகிற முகமூடியை
நான் கண்டுகொண்டுவிடக் கூடாது என
எச்சரிக்கையுடன் இருக்கிறாய்.
தெரிகிறது.