ஒரு பெண் துணிச்சலாக தனது கருத்தைச் சொல்லும் உரிமை ஆணதிகாரத்தில் எரிச்சலை வரவழைக்கிறது. பெண்கள் எப்போதுமே கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு இவை சாட்சிகள்.
அரசியல் தளத்தில் கருத்தை சொல்வதிலிருந்து, இணையத்தளம் ஊடாக, முகநூலில் புகைப்படம் போடுவதுவரையான அவர்களின் சுதந்திரத்தை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது ஆணதிகார மனநிலை.
Month: December 2014
பிரதியில் மரபும் நவீனத்துவமும்
ஏ.ஜி.யோகராஜா அவர்களின் “புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்“ நூல் வெளியீட்டு விழா சுவிஸ் இல் 20.12.2014 அன்று நடைபெற்றது. அதில் மேலுள்ள தலைப்பில் நான் ஆற்றிய உரை இது – ரவி
எல்லோருக்கும் வணக்கம்.
புலம்பெயர் நாடக எழுத்துருக்கள் என்ற இந் நூலின் அறிமுக ஒன்றுகூடலில் நாம் இருக்கிறோம்;. நாடக எழுத்துரு பற்றிய, அதாவது பிரதி பற்றியதுதான் எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு. “நாடகப் பிரதியில் மரபும் நவீனத்துவமும்“ என்று தரப்பட்டிருக்கிறது.
கலை இலக்கிய வரலாற்றில் கிளாசிசம் முதல் இருத்தலியம் வரையிலான பல கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் உருவாகியிருக்கின்றன. மாற்றம் என்பதே மாறாதது என்பார்கள். இந்தக் கோட்பாடுகளின் உருவாக்கமும் அவ்வாறே நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த மேற்குலகக் கோட்பாடுகள் கீழைத்தேயத்துக்கு நகர்ந்து வருகிறபோது அதை எமது சூழலுக்கு எப்படி எதிர்கொள்வது என்பது சவால்களாக ஆகிவிடுவது இயல்பு.
