வான் திரைய
புரண்டோடும் ஓர் பெருநதிப் பரப்பில்
சிறு ஓடம் தத்தளிக்கிறது.
தமிழிச்சியின் வயிற்றில் நான் பிறந்தேனா இல்லையா என
விவாதித்தனர் கனவான்கள்
கொட்டாவி தள்ளி பல்லவி பாடினர்
இலகுவானது
தேடுங்கள் இந்த வழிகளை.
முடியாது
என்னால் முடியாது
இந்த இலகுக்குள் என் சிந்தனையை நலமடித்துவிட.