எனது நாட்டில் ஒரு துளி நேரம்.

– எனது வாசிப்பு

malathi book

நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. 240 பக்கங்கள் கொண்ட இந் நூலை விடியல் பதிப்பகம் 2013 இல் வெளியிட்டுள்ளது.

புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும்.

Continue reading “எனது நாட்டில் ஒரு துளி நேரம்.”

பங்கர்கள் பின்தொடர்கின்றன..

oolikkaalam-2“ஊழிக்காலம்“ மீதான எனது வாசிப்பு.

அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு முக்கியமான போர்க்கால நாவலாக ஊழிக்காலத்தை சொல்ல முடியும். இந் நாவலை தமிழ்க்கவி என்ற பெண் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். 320 பக்கங்களைக் கொண்ட இந் நூலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

இந் நூல் வெளிவர காத்திரமான பங்களிப்புச் செய்த சயந்தன் தமிழ்க்கவியை (இந் நூலின் கடைசிப் பக்கத்தில்) இவ்வாறு அறிமுகமாக்குகிறார்.
“தமயந்தி சிவசுந்தரலிங்கம் (66) எனும் இயற்பெயர் கொண்ட தமிழ்க் கவி ஈழவிடுதலைப் போரில் தன்னையும் இணைத்துக்கொண்ட ஒரு மூத்த எழுத்தாளர். போராளிகளாலும் மக்களாலும் “மம்மி“ என்றும் “அன்ரி“ என்றும் அன்பாக அழைக்கப்பட்ட தமிழ்க்கவி ஈழப் போரில் உயிரை ஈந்த இரண்டு மாவீரர்களின் தாய்.“ என்கிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் வானொலி, வானொளி உட்பட அதன் கலையிலக்கிய தளங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்ததால் தமிழ்க்கவி பலராலும் அறியப்பட்டிருந்தார். புலிகள் அமைப்பில் போராளியாக இருந்த அவரின் ஊழிக்காலம் நாவல் அந்தத் தளத்தில் இயங்கவில்லை. அப்படி இயங்கவேண்டும் என்பதுமில்லை.

Continue reading “பங்கர்கள் பின்தொடர்கின்றன..”

பிரதியில் மரபும் நவீனத்துவமும்

ஏ.ஜி.யோகராஜா அவர்களின் “புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்“ நூல் வெளியீட்டு விழா சுவிஸ் இல் 20.12.2014 அன்று நடைபெற்றது. அதில் மேலுள்ள தலைப்பில் நான் ஆற்றிய உரை இது – ரவி

yoga-nool pic

எல்லோருக்கும் வணக்கம்.
புலம்பெயர் நாடக எழுத்துருக்கள் என்ற இந் நூலின் அறிமுக ஒன்றுகூடலில் நாம் இருக்கிறோம்;. நாடக எழுத்துரு பற்றிய, அதாவது பிரதி பற்றியதுதான் எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு. “நாடகப் பிரதியில் மரபும் நவீனத்துவமும்“ என்று தரப்பட்டிருக்கிறது.

கலை இலக்கிய வரலாற்றில் கிளாசிசம் முதல் இருத்தலியம் வரையிலான பல கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் உருவாகியிருக்கின்றன. மாற்றம் என்பதே மாறாதது என்பார்கள். இந்தக் கோட்பாடுகளின் உருவாக்கமும் அவ்வாறே நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த மேற்குலகக் கோட்பாடுகள் கீழைத்தேயத்துக்கு நகர்ந்து வருகிறபோது அதை எமது சூழலுக்கு எப்படி எதிர்கொள்வது என்பது சவால்களாக ஆகிவிடுவது இயல்பு.

Continue reading “பிரதியில் மரபும் நவீனத்துவமும்”

வன்முறையே வாழ்வாய்…

ஆயுதங்கள் மனிதர்கள் மீது மட்டுமன்றி இயற்கை மீதும் பண்பாடுகள் மீதும் மனவளங்கள் மீதும் பெரும் அழிவுகளையும் பாதிப்பையும் செலுத்துகிறது. இது பெரும் துயரம். அதிகார அலகுகொண்ட ஆட்சிமுறைகள் இதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன. போர்கள், ஆக்கிரமிப்புகள், இயற்கை சூறையாடல், வளங்களின்மீதான மேலாதிக்கம் தன்னலன்கள் என இன்னபிற வடிவங்களில் அது குரூரிக்கிறது. அதனால் ஆயுதங்களின் மீது நாம் காதல்கொள்ள முடியாது.

Continue reading “வன்முறையே வாழ்வாய்…”

வன்,மென் சக்திகள்

//வன்சக்திகள் மேலெழாத படிக்கு தமிழ் அரசியலில் மென்சக்திகளை அல்லது மென் சக்திகள் போலத் தோன்றும் மிதவாதிகளை பலப்படுத்த வேண்டும் என்பதே இப்போதைக்கு அனைத்துலக சமூகத்தின் தெரிவாகக் காணப்படுகிறது.// – நிலாந்தன்

இது ஒன்றும் புதிய விடயமல்ல. மிதவாதிகளை சர்வதேச அதிகார சக்திகள் கையாள்வது என்பது ஒரு வழிமுறையாக தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. தமது நலன் சார்ந்து அந்தந்த நாடுகளை இயக்குவதற்கான வழித்தடத்தை மிதவாதிகளினூடுதான் அவர்கள் கண்டடைந்தார்கள். கண்டடைகிறார்கள்.  அவர்களது நலனை எதிர்த்து நின்ற சக்திகள் இல்லாதொழிக்கப்பட்டார்கள்.

Continue reading “வன்,மென் சக்திகள்”

புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்

இலக்கியச் சந்திப்பு சம்பந்தமான உரையாடல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில் நடந்து சர்ச்சைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்த சர்ச்சையை உடனடிக்; காரணங்களால் வியாக்கியானப்படுத்துவது முழுமையடையாது. அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் பார்த்தாகவேண்டியுள்ளது. இதனடிப்படையில் எனது பார்வையில் இதை ஒரு பதிவாக எழுதலாமென எடுத்த முயற்சிதான் இது.

Continue reading “புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்”

புகலிட அரசியலின் முளைப்பு

இலண்டனில் நடந்துகொண்டிருக்கும் 40வது இலக்கியச் சந்திப்பில் சாத்திரி அவர்கள் புகலிட அரசியல் போக்கு என்பது பற்றி பேசினார். ஆரம்பத்தில் ஒரு கட்டத்தில் அரசியலற்ற சமூகமாக இது இருந்தது எனவும் 90 களின் ஆரம்பத்தில்தான் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டிருந்ததாகவும். அது சுயநலத்தின் அடிப்படையில், தமது அரசியல் தஞ்சக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் இருந்திருக்கலாம் என்ற கருத்துப்பட கூறியிருந்தார். புலிகள் இயக்கம்தான் -சரியோ தவறோ- புலம்பெயர் தமிழ் மக்கள் அரசியல்மயப்பட காரணமாக இருந்து, அது தமிழர் என்ற அடையாளம் தேடும் அரசியல் என்பதாகவும் குறிப்பிட்டதாக (காணொளி மூலம்) நான் விளங்கிக் கொண்டேன். 

Continue reading “புகலிட அரசியலின் முளைப்பு”

சூரிச் இல் செங்கடல் ஓசை

 

ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்கள் நந்திக் கடலில் கரைக்கப்பட்டது. அலைகள் தம் கதைகளை தமிழகத்துக்கு மூச்சிரைத்தபடி எடுத்துவருகிறதோ என்னவோ, தமிழர் என்ற அடையாளத்தின்மீது மோதியழிகிறது. தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் அலைமோதுகிற நாட்கள் இவை. வாழ்வுக்கான போராட்டம் என்பதற்கு இறப்பு இருக்காது, அது வௌ;வேறு வழியில் தொடர் வடிவங்களை எடுக்கும் என்பதன் சான்றாக இந்தப் போhராட்டங்கள் – அதன் சரிகள் தவறுகளுக்கு அப்பால்- சாட்சியாக இருக்கிறது. இன்னொரு கோடியில் „செங்கடல்“ திரைப்படம் தனுஷ்கோடியில் நின்று கடல் அலைகளுடன் பேசுகிறது.

Continue reading “சூரிச் இல் செங்கடல் ஓசை”

முன்னிலை சோசலிசக் கட்சி – ஓர் அவதானிப்பு

1983 யூலை 26. தீமூண்டெழுந்த கொழும்பு புறநகர்ப் பகுதியின் புகைமண்டலத்தை அப்போ காண்கிறோம் நாம். அதேவேகத்தில் தமிழ் சிங்கள கலவரம் என்ற செய்தியும் எட்டிவிடுகிறது. பல்கலைக்கழகத்தின் விடுதியில் நாம் (55 தமிழர்கள்) இருளத் தொடங்கினோம். பயம். சுற்றிவர சிங்கள மக்கள் வாள்களுடனும் பொல்லுகளுடனும் நிற்பதாக கதைகள் தைத்துக்கொண்டிருந்தன.இரவாகியது. எம்மை விடுதிக்குள் இருக்கும்படி கூறுகிறார்கள் அந்த சில சிங்கள சக மாணவர்கள். அங்குமிங்கும் ஓடித்திரிந்தார்கள். இரவுச் சாப்பாட்டை பார்சலாகக் கொண்டுவந்தார்கள். லைற் எதையும் போடவேண்டாம் என்ற எச்சரிக்கையுடன், பயம் காவிய எமது முகங்களை விடியும்வரை யன்னலோரம் தொங்கப்போட்டிருந்தோம். விடியும்வரை அந்த மாணவர்கள் கொட்டன்களுடன் எமது விடுதியைச் சுற்றி காவல் காத்தார்கள்.

“பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்

பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த ~மறுப்புக்கான| சமூக நியாயத்தை வைக்க முற்படுதல் என்ற நேர்மையான வழியில் இதை உரையாட முன்வருவதே சரியாக இருக்கும். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இருமைகளில் சிக்குண்டு இருப்பது இவ்வகை தேக்கத்தை கடக்க முடியாத நிலையில் பலரை விட்டுள்ளது ஒருவகை அவலம்தான்.

Continue reading ““பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல்”