ரத்தம் விற்பவனின் சரித்திரம்

– இலக்கியமும் அரசியலும்

Yu Hua nool

“தலைவர் மாவோ பேசத் தொடங்கினார். தலைவர் மாவோ பெரும்பாலும் எல்லா நாட்களும் பேசினார். நாம் ஆயுதம் கொண்டல்ல, வார்த்தைகள் கொண்டுதான் போராட வேண்டும் என்று சொன்னபோது எல்லோரும் கத்தியையும் கம்பையும் கீழே வைத்தார்கள். நாம் புரட்சியை வகுப்பறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னபோது யீலியும் ஏளும் ஸான்லியும் புத்தகப் பைகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பள்ளிக்குச் சென்றார்கள். புரட்சி உற்பத்திக்கு உதவ வேண்டும் என்று தலைவர் மாவோ சொன்னபோது ஸன்க்வான் பட்டுத் தொழிற்சாலைக்குச் சென்றான்.  யுலான் பலகாரம் செய்வதற்காக தினமும் காலையில் வேளைக்கே எழுந்துசென்றாள். யுலானின் முடி மீண்டும் நீண்டு வளர்ந்து காதுகளை மூடுமளவுக்கு வந்தது.”  ( பக்.216)

அன்றைய சீன அரசியல் சூழலில் கதைமாந்தர்களான ஒரு குடும்பத்தின் அசைவியக்கம் இது. இந்த நாவல் ஓர் அரசியல் நாவல் என்ற வகைமைக்குள் தன்னை பொருத்திக்கொள்கிறது.

Continue reading “ரத்தம் விற்பவனின் சரித்திரம்”

மாற்றுத்திறனாளிகள்

சொற்கள் நேரடி அர்த்தத்தை மட்டும் தருபனவல்ல. அது (வேண்டுமென்றே) சொல்லப்படாத அல்லது தவிர்த்துவிடுகிற அர்த்தங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். சிலவேளைகளில் இந்த அர்த்தம் நேரடி அர்த்தத்தைக்கூட மறுதலிப்பதாக இருக்கவும் செய்யும்.
மாற்றுத்திறனாளிகள் என்ற சொல்லாடல் எதிர்மறையில் “அவர்கள் உடல் அல்லது உள ரீதியில் இயலாமையுடைவர்கள். அவர்களிடம் மிகுதியான மனித இயல்புகள் திறமைகள் கனவுகள் இருக்கின்றன என்ற பொருளைக்கூடச் சுட்டவில்லை.

Continue reading “மாற்றுத்திறனாளிகள்”

பிரம்பியம்

பிரம்பு மாணவர்களுக்கு எப்போதுமே வன்முறையின் பிம்பம்தான்.பாடசாலைகளில் மாணவர்களைத் தண்டிப்பது அல்லது பிரம்பால் அடிப்பது என்ற நடைமுறை உலகம் பூராவும் இருந்திருக்கிறது. இப்போதும் சில நாடுகளில் இருக்கலாம். பல நாடுகளும் எப்போதோ கைவிட்டுவிட்ட இந்த அணுகுமுறை இலங்கையிலும் இப்போ கைவிடப்பட்டிருக்கிறது அல்லது தடைசெய்யப்பட்டிருக்கிறது.

Continue reading “பிரம்பியம்”

சும்மா காலமும் பட்டையடியும்

obama daughter-shasha

ஓபாமாவின் மகள் Sasha (16) படிப்பில் ஈடுபடும் அதேநேரத்தில் கடலுணவு விடுதியொன்றில் பகுதிநேர வேலைசெய்வதை படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் (இலங்கையர், இந்தியர்) பகிர்ந்துள்ளனர். நீண்ட நாட்களாக நான் எழுத நினைத்த விடயத்தை இது நினைவுபடுத்தியுள்ளது.

Continue reading “சும்மா காலமும் பட்டையடியும்”

சொல்லத் தோன்றியது !

30 வருட கால ஆயுதப் போராட்டம், போர் என களேபரப்பட்ட ஒரு பூமியில் போரை புரட்டிப் போடுகிற போரிலக்கியமும் இல்லை. தத்துவ வளர்ச்சியும் இல்லை. சர்வதேச அளவில் அறியப்பட்ட விமர்சகர்களுமில்லை. சிந்திக்கத் தூண்டுகிற ஆய்வாளர்களுமில்லை.

Continue reading “சொல்லத் தோன்றியது !”

மரபின் காதலர்கள்

காதலா? கத்தரிக்காயா?

 

கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.

கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.

Continue reading “மரபின் காதலர்கள்”

மரபின் காதலர்கள்

காதலா? கத்தரிக்காயா?

கத்னா குறித்தான சர்ச்சையும் இலக்கியச் சந்திப்பும் குறித்தான கலவரப்பாடுகளில் “இலக்கியச் சந்திப்பு மரபு” என்றொரு வார்த்தை பாவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதுவும் தம்மை கலகக்காரர்கள்போல் பிம்பங்களைக் கட்டமைத்து, அதை பேண மல்லுக்கட்டுபவர்கள் இதை பேசுகிறபோது புன்னகையொன்றையே பதிலாகத் தரமுடிகிறது.

கலகக் குரல் என்பதே மரபுகளை மீறுவது, அதன் கெட்டிதட்டுகிற தன்மையை உடைத்துப் போடுவது, கட்டவிழ்ப்பது என்பதாக இருக்கிறபோது இவர்கள் 30 ஆண்டுகால இலக்கியச் சந்திப்பு மரபு என உச்சரித்தபடியே இருக்கிறார்கள்.

Continue reading “மரபின் காதலர்கள்”

பட்டாம்பூச்சி

…ச்செறியும் நாவல் !

papilon cover-tamil
கென்றி சாரியரின் (Henri Charriere) “பட்டாம்பூச்சி” நாவல் எனது புத்தக அலுமாரியில் தனது சிறகொடுங்கி குந்தியிருந்து பல வருடங்களாகியிருந்தது. “சூரிச் – வாசிப்பும் உரையாடலும் 12” சோலையுள் இந்தப் பட்டாம்பூச்சியின் பறப்பை காண நாம் விழைந்தோம். ஒரு தொகை பக்கங்களில்அது தன் சுவடுகளை மெல்லப் பதித்தபடி பறந்துகொண்டிருந்தது. பல இலட்சக்கணக்கான பிரதிகளிலும் பல்வேறு மொழிகளின் வரிகளுக்குள்ளாலும் அது ஏன் பறந்தது என எழுந்த கேள்விக்கு இன்னமும் என்னிடம் பதிலில்லை. நூலை வாசித்து உரையாடியுமாயிற்று. இன்னும் பதிலில்லை. ரா.கி.ரங்கராஜனின் மொழியெர்ப்பு நாவலின் உள்ளுடனை ஊடுருவ முடியாமல் ஓரமாய் நடந்துகொண்டிருக்கிறதா எனவும் எண்ணத் தோன்றியது. எப்படியோ வரிகளுக்கிடையால் புகுந்து நடக்க வேண்டிய பொறுப்பு இந்த எதிர் அம்சத்தை தாண்டிச் செல்ல வைத்தது.

Continue reading “பட்டாம்பூச்சி”

வெட்கப்படுகிறோம் !

காதலர்கள் மிக இயல்பாக வீதிகளிலோ புகைவண்டியிலோ அதன் நிலையங்களிலோ கட்டியணைத்து முத்தமிடுவது இங்கு ஒரு சாதாரணமான நிகழ்வு. ஆரம்ப காலங்களில் அதை தமிழர்கள் “நொங்கு குடிக்கிறாங்கள்” என விழிப்பர். முத்தமிடுபவர்களைப் பார்த்து தாம் வெட்கப்படுவர். அந்த வெட்கத்துக்குள் காமம் ஒளிந்திருக்கும். ஒளித்துவைக்கப்படுகிற காமம் வக்கிரமாக கசிகிறதோ என எண்ணத் தோன்றுமளவுக்கு யோசிக்க வைக்கிறது.

ஆதிரை

– எனது வாசிப்பு

நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வெவ்வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில் ஒருவர் தனது கருத்தின் சார்புநிலையை அக் கணங்களில் துறக்க வேண்டியிருக்கும். தனது கருத்துசார் நிலையை தற்காலிகமாக அழித்துவிட்டு பாத்திரங்களின் கருத்துசார் நிலைக்கு மாறிக்கொண்டு எழுதுவது சுலபமானதொன்றல்ல. பொதுவில் தாம் சார்ந்த கருத்துநிலை இடையீடு செய்தபடியே இருக்கும். (எழுதுதலின்போது) அதைத் துறப்பது ஒருவித துறவு நிலைதான்.

Continue reading “ஆதிரை”