கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது.
Continue reading “எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு”Category: விமர்சனம்
அலைகளின் நடுவே
இலங்கை அரசியல்
ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும்.
Continue reading “அலைகளின் நடுவே”அநுர அலை
2024 ஜனாதிபதித் தேர்தல்
ஊடகங்கள் -முக்கியமாக சமூகவலைத் தளங்கள்- உருவாக்கிக் காட்டுகிற அநுர அலை இலங்கையின் யதார்த்த அரசியல் நிலைமையை பிரதிபலிக்கிறதா என தெரியவில்லை. இருந்தபோதும் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் இம்முறை இந்தளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதற்கு “அரகல” 2022 காலிமுகத்திடல் போராட்டத்தின் அரசியல் விளைவுதான் முக்கிய காரணமேயொழிய, கடந்த அரசாங்கங்களின் ஊழல் இலஞ்சம், ஏமாற்றுகள் அல்ல. இந்தச் சேற்றில் உழலும் ஒவ்வொரு அரசாங்கமும் அதன் அரசியல்வாதிகளும் ஜனநாயக முகமூடியை அணிந்து நடனமாடுவது ஒன்றும் புதிதல்ல.
Continue reading “அநுர அலை”சுவிஸ் தொலைக்காட்சியில் ‘துவாரகா’
கடந்த வாரம் சுவிஸ் தொலைக்காட்சி போலித் துவாரகா விவகாரம் பற்றிய செய்தியை (Rundschau programme) ஓர் ஆவணப்பட வடிவில் வெளியிட்டது. துவாரகா என்ற பெயரோடு 2023 மாவீரர்தின உரை ஆற்றியிருந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, அவர் ஒரு ஏமாற்றுக்காரியாகவும் அவரை நம்பி தாம் பணத்தை பறிகொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள் சிலர் கூறியதை வெளிப்படுத்தியது. அதில் வரும் ஒரு தமிழர் தான் 380’000 பிராங்குகளை அவருக்கு கொடுத்ததாகவும் இன்னொருவர் தான் 70’000 பிராங்குகளை கொடுத்ததாகவும் சொல்கிறார். முதலாமவர் அந்த இலட்சக்கணக்கான பணத்தை ஒரு சாதாரண தொழிலாளியாக நேர்மையாக உழைத்து சேமிப்பது என்பது அவரது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சாத்தியப்பட முடியாத ஒன்று. அத் தொகை அவர் தமிழர்களிடம் சேர்த்த பணமாக இருக்கவே சாத்தியம் உண்டு.
Continue reading “சுவிஸ் தொலைக்காட்சியில் ‘துவாரகா’”பாதங்களை வைக்குமா?
உக்ரைன் மீதான ரசியப் போரில் புட்டின் மீது போர்க்குற்ற விசாரணைக்கான பிடிவிறாந்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அறிவித்தபோது அது “நீதியான தீர்ப்பு” என வரவேற்ற அமெரிக்கா, இப்போ நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் இருவருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்காக அதே நீதிமன்றம் பிடிவிறாந்தை அறிவித்தபோது அந்தத் தீர்ப்பை “அநீதியானது, ஏற்றுக்கொள்ள முடியாதது” என அறிவிக்கிறது. இவர்களோடு சேர்த்து மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து அறிவித்துள்ளது.
Continue reading “பாதங்களை வைக்குமா?”ஆதரிப்போம் !
கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐநா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலாதிக்க நலனையும் நயவஞ்சகத்தையும் உள்நிறுத்தி அரசியல்வாதிகளும் அரசும் பேசும் ஜனநாயகம் வார்த்தை ஜாலங்களாக தொடர்கின்றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்வலங்களை நடத்தியும் பார்த்தார்கள். எல்லா இயலாமைகளும் கடைசியில் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட நிலைதான் இன்றைய காட்சிகள்.
Continue reading “ஆதரிப்போம் !”முற்றவெளி மந்திரம்
யாழ் முற்றவெளியில் 09.02.24 அன்று நடந்த இந்திய சினிமா நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி கட்டற்ற மக்கள் அலையில் தத்தளித்தது. அதில் சில மீறல்களை இளைஞர்கள் நிகழ்த்தியதால் பரபரப்பாகி நிகழ்ச்சி தடைப்பட்டு பின் தொடர்ந்து நடந்து முடிந்தது.
சமூகவலைத்தளங்கள் எப்போதுமே தூண்டிலோடு அலைவதால் முற்றவெளியில் பேத்தைவால் குஞ்சு அகப்படவும் அதைப் பிடித்து இராட்சத மீனாக படம் காட்டி அமர்க்களப்படுத்திவிட்டன. இதற்குள் புகுந்து “யாழ்ப்பாணிகளின் கலாச்சாரச் சீரழிவு” என இளைஞர்கள் மீதான ஒழுக்காற்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டன. அலம்பல்கள், வன்மங்கள், வகுப்பெடுப்புகள் என அடித்த அலைகளுக்கு நடுவே பொறுப்பான விதத்தில் இப் பிரச்சினையை அணுகி எழுதியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அது முக்கியமானது என நம்புகிறேன்.
Continue reading “முற்றவெளி மந்திரம்”மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!
யாழ் பல்கலைக்கழக வளவுக்குள் நடந்த திரைப்பட விழாவொன்றுக்கு ஒருவர் அரைக் காற்சட்டையோடு போக அனுமதிக்கப்படாத விவகாரம் சமூகவலைத் தளங்களில் பெரும் பேசு பொருளாக வலம்வந்து கொண்டிருக்கிறது. இச் சம்பவம் குறித்து கருத்துச் சொல்ல நான் முனையவில்லை. இந்த சம்பவம் எதை வெளிப்படுத்துகிறது என்று பார்க்க முயல்கிறேன்.
Continue reading “மாற்றத்திலிருந்து தப்ப முடியாது!”மாவீரர் தினம்
2023

P. Duvaraga & AI Duvaraga
விமர்சனம் என்பது வரலாற்றை மறுத்தல் அல்ல. வரலாற்றின் மீது நின்று பேசுதல் ஆகும். தமிழீழ விடுதலைக்காக போராடிய இயக்கங்களுக்கு ஒரு வரலாறு இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு ஒரு நீள் வரலாறு இருந்தது. அதற்குள்ளும் ஒரு வரலாறு உள்ளோட்டமாய் இருந்தது. மண்ணுக்காக மடிந்தோர் எல்லோரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்தான். மரணித்த போராளிகளின் உறவினர்கள் இந்த மாவீரர் நாளில் விடும் கண்ணீர் ஆத்மார்த்தமானது என்பதும் உண்மை. அதை வைத்து ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை சென்ரிமென்ராக எழுத முடியாது. அதில் பிரயோசனம் இல்லை.
Continue reading “மாவீரர் தினம்”“இருமை” சிந்தனை முறை
சுவிஸ் வரலாற்று ஆசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் உக்ரைன்- ரசிய போரின்போது ஜேர்மனி-ரசிய முரண்பாட்டை விளக்கும் போது ஒரு வசனத்தை பாவித்திருந்தார். அமெரிக்கா அதிகாரம் செலுத்தும் நாட்டோவிலுள்ள ஜேர்மனியானது அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையில் எங்கே நிற்கும் என பார்த்தால் அது அதன் மத்திய புள்ளியிலிருந்து ரசியா பக்கம் சாய்ந்ததாக இருக்கும் என்றார். அந்த அரசியல் கருத்து மீது இன்னொருவருக்கு வேறு அபிப்பிராயங்கள் இருக்கும். அதல்ல நான் சொல்ல வந்தது. (அமெரிக்கா பக்கமா ரசியா பக்கமா என்பது போன்ற) இருமை நிலைப்பாடுகள் அல்லது சிந்தனை முறை பற்றியது. அவரது அந்த கூற்றில் மாறுபட்ட அரசியல் அபிப்பிராயங்களின் பன்முகத்தன்மையான “உரையாடல்” ( dialogue) வெளியை விட்டுவைக்கும் சொல்லாடலை குறிப்பிடுகிறேன். இங்கு சாதாரண சமூகத்திடமும் இந்த சிந்தனை முறை இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
Continue reading ““இருமை” சிந்தனை முறை”




