24 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட ஓர் ஆளுமை றிச்சர்ட் டி சொய்சா நினைவாக…
1994 மே மாதம் நாம் சூரிச் புகையிரத நிலையத்தில் பிரசுரங்களுடன் மூவர், நால்வர் கொண்ட குழுவாக நிற்கிறோம். அன்றைய காலகட்டத்தில் தமிழர்களிடத்தில் கார் பாவனை என்பது அரிதான ஒன்று. அதனால் முக்கிய புகையிரத நிலையங்கள் எமது “மனிதம்” சஞ்சிகையின் விற்பனை இடமாக இருக்கும். இன்று பிரசுரத்துடன் நிற்கிறோம். ஒருவித பயம். பிரசுரங்களை விநியோகிக்கின்றோம். தமிழ்மொழியிலும், யேர்மன் மொழியிலுமான பிரசுரங்கள் அவை. பதட்டத்துடனும் கோபத்துடனும் அடுத்து எதுவெல்லாம் நடக்கப்போகிறது என்ற கேள்விகளுடனும் நாம் நின்றோம். ஆம், நண்பர் சபாலிங்கம் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை அம்பலப்படுத்தும் பிரசுரங்கள்தான் அவை.
தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக …
மாலைநேரங்கள் பகல் பொழுதின் முடிவுரைகளாகப் போவதால் நான் காலாற நடந்துகொண்டிருந்தேன். நினைவுகளை மனது வாசித்துக்கொண்டிருக்க உணர்வுகள் எனை வருடிக்கொண்டிருந்தன. நான் அந்த வாங்கில் அமர்ந்திருந்தேன். சோலைகள் ஒளிக்கோடுகளை மெலிதாகவோ கற்றையாகவோ வரைந்துகொண்டிருந்தன. நான் அமைதியற்றிருந்தேன்.
(தனது 17வது வயதில் அகாலமரணமடைந்த சூரியா பிரதாபனின் நினைவாக இந்தக் கவிதை)
இளவேனிற்காலம் தன்
சக்தியெல்லாம் திரட்டிப்
பெற்றெடுத்த தளிர்களெல்லாம்
பச்சையாய் விரிய முயற்சித்த
ஓர் பொழுதில்
நீ மட்டும் ஏன்
உதிர்ந்து விழுந்தாய்?
நான் அப்போது இளவயதினனாய் இருந்தேன். குறும்புகள் செய்யும் பருவம் அது. அது இலங்கை வரலாற்றில் பஞ்சப் புயல் வீசிய காலம். அரை இறாத்தல் பாணுக்காக நீண்ட வரிசையில் சில்வா பேக்கரியிலும் சங்கக் கடையிலும் என முண்டியடித்த காலம் அது. இந்த பாண்வேட்டையின்பின் அன்று அதிகாலை இருளில் நானும் நண்பர்களும் எமது வாசிகசாலையில் சுவாரசியத்துக்காகக் காத்திருந்தோம்.
பெரும் தோப்பிலிருந்து குருவியொன்று
வீரிட்டுப் பறந்து வந்தது உன்
மரணச் சேதியுடன்.
அம்மா!
எனது சிறுபராயம் முதலான நினைவுகளை
அது தன் சின்னக் காலால்
கோதிக்கோதி என்
மனதைக் கசியவிட்டது.
யாரொடு நோவேன்!
இன்று இந்த இறுதிநிகழ்வில் கலந்தகொள்ளமுடியாமல் போனது நான் எதிர்பாராத ஒன்று. அதனால்; எனது இரங்கல்செய்தியை தோழர் பராவின் இறுதிச்சூழலுக்குள் அனுப்பிவைத்துள்ளேன்.
—————————
புலம்பெயர்ந்து வாழ்தல் ~பாய்விரித்தால் படுத்துறங்கும் நாய்ச்சாதி| என்று பழிக்கப்பட்ட காலங்களை, அதன் ஈழஅறிவினை தூசாய்த் தட்டிவிட்டது மாற்றுக் கருத்துக்களின் முளைப்பும் அதன் தொடர்ச்சியும் என்பது நம்பக்க நியாயம். ஆம் இந்த உழைப்பு ஆரம்பகாலங்களில் வித்தாய் இடப்பட்டதில் தோழர் பரா அவர்களின் பணி புகலிடத்தில் தொடங்கிற்று.
சூரிச், சுவிஸ்
18.2.2007. ஞாயிற்றுக்கிழமை. நேரம் சுமார் 3 மணியைத் தாண்டியது. பகல் வெளிச்சத்தின் நுழைவுகளை தொடர்யன்னலினூடாக தாராளமாய் அனுமதித்திருந்தது அந்த மண்டபம். மண்டபத்தின் முன்பகுதியில் தேசபிதா தோழர் ரட்ணா என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் சொந்தக்காரனான இளையதம்பி இரத்தினசபாபதியின் நிழற்படம் சிவப்பு நிறத்துணியுடன் இசைந்துபோய் இருந்தது.
Continue reading “தோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி”
(ஓர் அஞ்சலி)
மரணம்
வயதை வெல்லும் மரணம் கொடியது
நண்பனே
எடுத்துச் செல்
எனது இரு கண்ணீர்த் துளிகளையும்
எடுத்துச் செல்
மிகுதியை என் கண் மடல்களுக்குள்
தேக்கிவைக்கிறேன்.