வார்த்தைகளுள் தமது
கவலைகளை புகுத்தி
தனக்களவாய்
முடிந்தால் கனதியாய்
ஊதிப்பெருப்பிக்கும் கலையறியா
குழந்தைகளின்
போர்ச்சோகம் கொடியது.
Category: கவிதை
சான்ரீஸ் மலை அழகி
சான்ரீஸ்!
கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்
கூந்தலாய் முகில் விரித்து
உச்சி வழிந்து
முகம் மறைத்து ஏமாற்றினாய்
எனை
சென்ற தடவை.
றைன் நதி நீள்வில்
நீர்த்திவலையால்
மேகத்தை அழைத்து
வானத்தை தன்
மடியில் வீழ்த்தியிருந்தது
அந்த அருவி
வானம் கிறங்கிக் கிடந்தது
அருவியின் அணைப்பில்.
மரங்களின் பச்சையம்
வழிந்து
கரை ஊறிக்கிடந்தது.
எனது பார்வையில் “செட்டை கழற்றிய நாங்கள்”
சந்திரவதனா செல்வகுமாரன் (யேர்மனி)
95 இல் பதிவாக்கப் பட்ட ஒரு கவிதைத் தொகுதி ஆறு வருடங்கள் கடந்து ஏழாவது வருடம் என் கரம் வந்து குந்தியதில் எனக்கு நிறையவே மகிழ்ச்சி.
செட்டை கழற்றிய நாங்கள் – கவிதைத் தொகுப்பின் தலைப்பே ஒரு கவிதை போல – ஆனால் சோகத்தைத் தனக்குள்ளே நிரப்பி வைத்திருப்பது போன்றதொரு பிரமையை எனக்குள் தோற்றுவித்தது.
சிறிய தொகுப்பு ஆனாலும் தனக்குள்ளே புலம்பெயர் அவலங்களையும், புலம் பெயர மறுத்த நினைவுகளையும் நிறைத்து வைத்திருக்கிறது தொகுப்பு.
புதிய நியாயங்கள்
துடைப்பதற்கு ஆளின்றி
கண்ணீர்
அழுகி மணக்கிறது.
செட்டை பெயர்ந்த வடுக்களாய்
விரியும்
மணற்கங்குப் பாலைவன மனிதர்கள் நாம்.
மாறிவிடு!
காற்றில் அசைந்தாடுகிறது காண்
அந்த நாணல் புல்.
இயல்பாய்
அதன் நளினம் காண்
ரசனை வெளி நிரப்ப.
குழந்தையொன்று
அள்ளிவரும் இயல்பெல்லாம்
நாளும் பொழுதுமாய் தேய்கிறது காண்
என் பயிற்சிக் களத்தில்.
நிகழ்காலத்தைத் துரத்துதல்
ஓடு!
முடிந்தால் நுனி நகத்தை ஊன்றி
பறந்துவிடு.
எனது முகம் உடைந்து
அள்ளுண்டு போகிறது-
உனது மூச்சில்.
சுவாசப் பையுள் கல்நிரப்பும் குரங்குத் தனத்தோடு
கெந்தித் திரிகிறது காற்று.
நம்ப முடியவில்லை
(ஓர் அஞ்சலி)
மரணம்
வயதை வெல்லும் மரணம் கொடியது
நண்பனே
எடுத்துச் செல்
எனது இரு கண்ணீர்த் துளிகளையும்
எடுத்துச் செல்
மிகுதியை என் கண் மடல்களுக்குள்
தேக்கிவைக்கிறேன்.
வானலையில் யாரோ?
வான் திரைய
புரண்டோடும் ஓர் பெருநதிப் பரப்பில்
சிறு ஓடம் தத்தளிக்கிறது.
தமிழிச்சியின் வயிற்றில் நான் பிறந்தேனா இல்லையா என
விவாதித்தனர் கனவான்கள்
கொட்டாவி தள்ளி பல்லவி பாடினர்
இலகுவானது
தேடுங்கள் இந்த வழிகளை.
முடியாது
என்னால் முடியாது
இந்த இலகுக்குள் என் சிந்தனையை நலமடித்துவிட.
எனது மலையுச்சி மனிதன்
ஓர் அழகிய வண்ணத்துப் பூச்சியை
நான் வரைகிறேன்-
தாளிலிருந்து அது பறந்துபோகும்வரை.
அதுவரை என்னை நான்
ஓர் ஓவியனாக பிரகடனப்படுத்துவதாயில்லை.