சீலனின் “வெல்வோம், அதற்காக..“ என்ற நூலை வாசித்து முடித்திருந்தேன். தமிழீழ விடுதலைக்கு என புறப்பட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) தனது தோழர்களை உட்படுகொலைசெய்வதிலும் சித்திரவதை செய்வதிலும் சக்தியை விரயமாக்கி அழிந்துபோன இயக்கம். அது தளத்தில் (இலங்கையில்) இயங்கியதைப் போலன்றி, பின்தளத்தில் (இந்தியாவில்) மூடுண்ட இயக்கமாக இருந்தது. இந்த இயக்கம் என்ற குகைக்குள் சிக்கிச் சுழன்ற அனுபவங்களை, துயரங்களை, அனுபவித்த கொடுமையான சித்திரவதைகளை… என சீலனின் “வெல்வோம், அதற்காக..“ பேசுகிறது. 112 பக்கங்களைக் கொண்ட இந்நூல் கற்பனையல்ல, இலக்கிய நயம் இழையோடும் கதையுமல்ல. சொந்த அனுபவங்களின் தொகுப்பு.
Category: அறிமுகம்
Millions can walk. ஆவணப்படம்.
நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.
(மயூ மனோ வின் “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ கவிதைத் தொகுதி மீதான ஒரு வாசிப்பு)
குழந்தையொன்று உருவங்களை வடிவமைக்கும் கட்டைகளை அடுக்கிக்கொண்டிருந்தது. சாத்தியப்பாடுகளை அனுபவம் படிப்பித்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீழ்தலின்போதும் மீண்டும் மீண்டும் புதிய உத்வேகத்துடனும் புதிய படைப்பாக்கத்துடனும் குழந்தை முயன்று கொண்டிருந்தது. “நாம் பேசிக்கொண்டிருந்தபோது பெய்திராத மழை“ என்ற மயூ மனோவின் கவிதைத் தொகுதியினை நான் கையில் வைத்திருந்தேன்.
Continue reading “நான் வாசித்துக் கொண்டிராதபோது பெய்திராத மழை.”
துவாரகனின் வெளிகள்
“மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்”
கவிதைத் தொகுதி முகவுரை
‘இந்தத் தேசத்தின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ -துவாரகன்
இதுவாய்ப்போன இந்தத் தேசத்தை ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’என எழுதிச் செல்லும் கவிதைத் தொகுதி இது.
இந்த மூச்சுவெளிகளை உருவாக்கிய போர் மரணத்தை உமிழ்கிறது. அது எப்படிப்பட்டது?
“மால்கம் எக்ஸ் – என் வாழ்க்கை” நூல் அறிமுகம்.

“கூவர சுவாற்ஸ்” (ஊத்தைக் கறுப்பா) என்று அவன் பேசுகிறான். நான் கறுப்பா? பார் என்ரை நிறத்தை. பிரவுண். ஆபிரிக்கர்கள்தான் கறுப்பு என்கிறேன்;. சரியான பதிலாக திருப்தியடைகிறேன். வெள்ளைக்கார நண்பன் எனக்கான சான்றிதழொன்றைத் தந்து திருப்திப்படுத்த முயற்சிக்கிறான். “அவன் கறுப்புத்தான், ஆனால் மனசு வெள்ளை” என்கிறான். திருப்திப்படுகிறேன்.
Continue reading ““மால்கம் எக்ஸ் – என் வாழ்க்கை” நூல் அறிமுகம்.”
சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள்
அறிமுகமும், கலை இலக்கிய ஒன்றுகூடலும்
நேரம் 3 மணியை அண்மித்துக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கடைதெருக்கள் வேலைத்தலங்கள் ஓய்வுற்றிருந்ததால் வீதிகள் நெரிசலற்று சுமுகமாய்த் தெரிந்தன. சூரிச் மாநகரம் மெதுவாய் இயங்கியது. நாம் போல்க்ஸ் கவுஸ் இன் ஒரு நடுத்தர மண்டபத்துள் கூடுகிறோம். சிறிய சந்திப்பகளிலிருந்து பெரும் சந்திப்புகளை நடத்துவதற்கான மண்டபங்களைக் கொண்டது இந்த போல்க்ஸ் கவுஸ். தமிழ்க் கடைகள் அவ்வப்போது மலிவுவிற்பனை மண்டபமாக இதை மாற்றுவதுண்டு. இங்குள்ள தமிழர்களுக்கு மலிவு விற்பனை நடக்கிற இடம் என்று அறிமுகப்படுத்திவிடுவது சுலபமாகக்கூடப் போய்விடுகிறது. பெரும்திரளாய்க் கூடுவர்… போவர்…வருவர் மலிவுவிற்பனைக்கு.
நளாயினியின் “நங்கூரம்”
கவிதைத் தொகுப்பு -ஓர் அறிமுகம்
“புதிதாய்ப் பிறந்துவிட்டுப் போகிறேன்”
அந்த வீதியில்
நீயும் நானும்
நட்பாய்த் தெரிந்த
முகம் ஒன்று
நானோ நட்பாய்
சிரித்து வைத்தேன்
ஆனால் நீயோ
அவனைப் பார்த்து
என்ன சிரிப்பு
எனக் கூறியபோது
ஏனோ அதிகம்
இடிந்துபோனது
நம் காதல்தான்.
புதியமாதவியின் ஹே…ராம்!
– கவிதைவரிகளினூடான ஒரு பயணம் –
என் கவிதையின் முகமே
என் சொந்த முகம்
என் கவிதையின் முகவரியே
என் முகவரி
முகவரி தொலைந்த
மனிதர்களுக்காகவே
என் கவிதை
பிறந்தது
வாழ்வின் மீதான எளிய பாடல்கள்
– ஓர் அறிமுகக் குறிப்பு
நதிகள் கல்லானதை
பறவைகள் அழுததை
அடர்ந்த காடுகள் சிறகசைத்துப் பறந்ததை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
முன்னைய கடவுள்கள் புதையுண்டதையும்
புதிய கடவுள்கள்
இருண்ட இரவில் ஆகாயத்திலிருந்து
உடல் நிர்வாணமாகவும்
உடல் கவசங்களோடும்
கடும் கோபமாகவும்
கடும் மகிழ்ச்சியாகவும்
இறங்கியதை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
…..
“கொரில்லா” – உள்ளும் புறமும்…
– ஒரு குறிப்பு-
ஷோபாசக்தியின் கொரில்லா நாவலிற்கான அடையாளத்தினை சாதிக் கொடுக்கும்போது இந்த எதிர்பார்ப்பை தந்து நாவலுக்குள் அனுப்புகிறார்.
ஊத்தையர்களோடு ஊத்தையர்களாக… விளிம்புநிலை வாழ்வை வரித்துக் கொண்ட… என்றெல்லாம் அடையாளம் ஷோபாசக்தியை அறிமுகம் செய்கிறது. பொருளாதார ரீதியிலும் வசதிவாய்ப்புகளிலும் ஏன் வேலை இல்லாதவனுக்கும் சமூகநலன் உதவியும் சமூக உத்தரவாதமும் இருக்கும் ஒரு நாட்டில் ஊத்தையனாக இருந்து தன்னை விளிம்புநிலை மனிதனாக காட்டவேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை.

