காஸா குழந்தைகள்

குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்!
*
குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்
மரணித்த குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மக்களுக்கு அந்தப் பெயர்கள் தெரியக் கூடாது
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் மறைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாக இருக்க வேண்டும்
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாகவே இந்த
உலகத்தை விட்டு நீங்க வேண்டும்
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயர் எவருக்குமே தெரியக் கூடாது.
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயரை எவருமே உச்சரிக்கக் கூடாது
அந்தக் குழந்தைகளுக்கு பெயர்கள் இருந்தன என்பதை
நினைத்துப் பார்க்கவும் கூடாது.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
தெரிந்து வைத்திருப்பது ஆபத்தானது என்பதை
மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை தெரிந்து வைப்பதிலிருந்து
மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் ஒரு
காட்டுத் தீயைப் போல பரவிவிடக் கூடும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
மக்கள் தெரிந்து கொண்டால் அது
அவர்களுக்கு பாதுகாப்பற்றது
மரணித்த அந்தக் குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைவுகூராதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைக்காதீர்கள்
அவர்களை,
“மரணித்த குழந்தைகள்” என சொல்லாதீர்கள்!

Continue reading “காஸா குழந்தைகள்”