குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்!
*
குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்
மரணித்த குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மக்களுக்கு அந்தப் பெயர்கள் தெரியக் கூடாது
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் மறைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாக இருக்க வேண்டும்
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாகவே இந்த
உலகத்தை விட்டு நீங்க வேண்டும்
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயர் எவருக்குமே தெரியக் கூடாது.
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயரை எவருமே உச்சரிக்கக் கூடாது
அந்தக் குழந்தைகளுக்கு பெயர்கள் இருந்தன என்பதை
நினைத்துப் பார்க்கவும் கூடாது.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
தெரிந்து வைத்திருப்பது ஆபத்தானது என்பதை
மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை தெரிந்து வைப்பதிலிருந்து
மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் ஒரு
காட்டுத் தீயைப் போல பரவிவிடக் கூடும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
மக்கள் தெரிந்து கொண்டால் அது
அவர்களுக்கு பாதுகாப்பற்றது
மரணித்த அந்தக் குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைவுகூராதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைக்காதீர்கள்
அவர்களை,
“மரணித்த குழந்தைகள்” என சொல்லாதீர்கள்!
Month: January 2025
முரளி & முகுந்தனை சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!.
இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார்.
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்சியின் முடிவு இது ஒரு திட்டமிட்ட கொலை என்கிறது. இது கொலை என்ற கோணத்தில் இன்று வரை காவல்துறையினர் விசாரிக்க மறந்ததால் கொலைக்காரர்களும் இன்றுவரை பிடிபடவில்லை.
Continue reading “முரளி & முகுந்தனை சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?”வரவேற்போம்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் 2025
“போரின்றி அமையாது இவ் உலகு” என்ற எல்லைக்கு இந்த உலகம் பயணிக்கத் தொடங்கி நூற்றாண்டுகளாகிவிட்டது. இருந்த போதும் போருக்கு எதிரான குரல்களுக்கும் அதே வயதுதான். போர் வெற்றி என்பது ஓட்டை ஒடிசல் பாத்திரத்தில் இசை அமைத்து, அதை இனிமையானது என அரசுகளும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்பும் செய்தி. அவை மக்கள் இழந்த வாழ்வு குறித்தும் உளவியல் நெருக்கடிகள் குறித்தும், பண்பாட்டு அழிவுகள் குறித்தும் கணக்கெடுப்பதில்லை.
Continue reading “வரவேற்போம்!”குற்றமும் தண்டனையும்

“குற்றமும் தண்டனையும்” என்ற இந் நாவல் தஸ்தவெஸ்கி அவர்களால் எழுதப்பட்ட பெரும் நாவல். 1866 இல் ரஸ்ய மாதப் பத்திரிகை ஒன்றில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட இத் தொடர் பின்னர் நாவலாக தொகுக்கப்பட்டு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கதை சொல்லல் என்பதையும் தாண்டி தனிமனிதர்களின் மனவமைப்பு, மனச்சாட்சி, ஒழுங்கு, அறம், அன்பு என்பவற்றை தாங்கி நிற்கும் அக வாழ்வின் மீதான விசாரணைகளையும் சட்டம், நீதி, அதிகாரம் என்ற கட்டமைப்பு மனித வாழ்வோடு பொருதுதல் குறித்தான விசாரணைகளையும் தாங்கிய நாவல் இது. மனித உளவியலின் இடுக்குகளை ஆராயும் வலு கொண்டதால் இந் நாவல் 150 வருடங்களுக்கும் மேலாக உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது. காலத்தையும் இடத்தையும் தாண்டி ஒவ்வொரு மனிதரோடும் பேசும் ஆற்றலின் அதன் இரகசியம் இங்குதானுள்ளது. “எதையாவது எப்போதும் நான் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரே உளவியலாளர் தஸ்தவேஸ்கிதான்” என நீட்ஷே எழுதினார்.
Continue reading “குற்றமும் தண்டனையும்”

