இவ்வாறாகத்தான் பிறந்தோம்.

காஸாவில் நாம் இவ்வாறாகத்தான் பிறந்தோம்.
காஸாவின் புதல்விகளாய் புதல்வர்களாய்
மரணத்தைப் போர்த்தியபடிதான் நாம் பிறக்கிறோம்.
எனது மகளும் அவ்வாறேதான் பிறந்தாள்.
நாட்கள் அவளது வாழ்வில் முளைத்து, குருத்தெறியத் தொடங்கியிருக்கின்றன.
குண்டுவீச்சுகள், வெடிச் சத்தங்கள், மரண ஓலங்கள்
எல்லாவற்றையும் அவள் கேட்டாள்.
போரற்ற உலகில் தூங்கியெழும் மனிதர்
கேட்டிலர், தன் வாழ்நாள் முழுதிலும் இவளவையும்!

Continue reading “இவ்வாறாகத்தான் பிறந்தோம்.”