இயல்பு

எனது இதயத்தில் உயிரின் இழை இருக்கிறது என்கிறான்
ஒருவன்.
இரத்தக் குழாய் நதியின் ஓட்டத்தில்
உயிரின் படகு பயணிக்கிறது என்கிறான்
இன்னொருவன்.
இரண்டும் ஒன்றுதான் என்கிறாள் ஒருவள்.
எனது மனதின் சிறகு ஒடுங்கினால்
உடல் ஒரு சடப்பொருள் ஆகிவிடுகிறது.
அந்த வரண்ட உடலில் இதயம் இயங்கியென்ன
குருதிநதி குதித்து விழுந்து பாய்ந்தென்ன
மனதின் இறகில் அதன் பறப்பில்
கிறங்கும் என் வாழ்வை
உடல் காவுவதுவரை காவட்டும்.
வாழ்வின் மரணம் வானவில்லின்
நிறங்களாய் விரியும்
நினைவுகளை எழுதும்.
காலம் அதை மெல்ல மெல்ல
கலைந்தழிக்கும் நுண்கலையை அறியும்.
எல்லாம் காணாமல் போகும்.
புதிய புதிய வானவில்கள் தோன்றும்
இப் பிரபஞ்சத்தில்
காலம் பயணித்தபடி இருக்கும்,
எதுவும் நடவாததுபோல!

  • 28062024

சுவிஸ் தொலைக்காட்சியில் ‘துவாரகா’

கடந்த வாரம் சுவிஸ் தொலைக்காட்சி போலித் துவாரகா விவகாரம் பற்றிய செய்தியை (Rundschau programme) ஓர் ஆவணப்பட வடிவில் வெளியிட்டது. துவாரகா என்ற பெயரோடு 2023 மாவீரர்தின உரை ஆற்றியிருந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, அவர் ஒரு ஏமாற்றுக்காரியாகவும் அவரை நம்பி தாம் பணத்தை பறிகொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள் சிலர் கூறியதை வெளிப்படுத்தியது. அதில் வரும் ஒரு தமிழர் தான் 380’000 பிராங்குகளை அவருக்கு கொடுத்ததாகவும் இன்னொருவர் தான் 70’000 பிராங்குகளை கொடுத்ததாகவும் சொல்கிறார். முதலாமவர் அந்த இலட்சக்கணக்கான பணத்தை ஒரு சாதாரண தொழிலாளியாக நேர்மையாக உழைத்து சேமிப்பது என்பது அவரது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சாத்தியப்பட முடியாத ஒன்று. அத் தொகை அவர் தமிழர்களிடம் சேர்த்த பணமாக இருக்கவே சாத்தியம் உண்டு.

Continue reading “சுவிஸ் தொலைக்காட்சியில் ‘துவாரகா’”